jaga flash news

Sunday 16 December 2012

திருமணம் *


 திருமணம் *


ராகு 7ஆம் இடத்தில் உள்ளதால் திருமணம் தள்ளிப் போகிறது? 

இதற்கு என்ன பரிகாரம்? 7இல் ராகு உள்ளதால் அவர் சர்ப்ப சாந்தி செய்து கொள்ளலாம். ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபடுவது எல்லா வகை சர்ப்ப தோஷங்களுக்கும் நல்லது. அங்குள்ள ராமானுஜரையும் வழிபட வேண்டும். ஆதிஷேசனின் மறுவடிவமாகவே ராமானுஜர் கருதப்படுகிறார். சர்ப்பங்களின் தலைவன் ஆதிஷேசன் என்பதால் ராமானுஜரை வழிபடுவதும் நல்ல பலனைத் தரும்.
ராகு 7இல் இருந்து திருமணம் தள்ளிப்போனால் விதவைப் பெண் அல்லது விவாகரத்து பெற்ற பெண் அல்லது முற்போக்கு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பிறந்த பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதேபோல் வசதி குறைவான இடத்தில் பெண் எடுப்பதும், தங்களுடைய ஜாதியை விட்டு வேறு ஜாதியிலும் (உட்பிரிவு) பெண் எடுப்பதும் நல்ல பலனைக் கொடுக்கும்.
ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?

 கஞ்சனூர் சென்று சுக்கிரனை வழிபட்டால் ரஜ்ஜு பொருத்தம் இல்லாததால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ள முடியும்.

---------------------------------------------------------------------------------------


   ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும்.
·        சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான்.
·        ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின் Sub - periodல் திருமணம் நடக்கும்.
·        ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள்.
·        ஏழாம் வீட்டிற்கு உரியவன்  திரிகோண வீடுகளில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள்.
·        ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான்.
·        சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் படித்த புத்திசாலியான மனைவி கிடைப்பாள்.
·        சுக்கிரனுடன், சந்திரனும், புதனும் கூடி இருந்தால் ஒரு பெரிய செல்வந்தரின் மகள் மனைவியாகக் கிடைப்பாள்.
·        சுக்கிரனுடன், சனி சேர்ந்திருந்தால் மிகவும் கஷ்டப்படும்  ஆனால் உழைப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண் மனைவியாகக் கிடைப்பாள்.
·        ஏழாம் அதிபனுடன் எத்தனை கோள்கள் சேர்ந்திருக்கிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு உண்டாகும். ஆனால் ஏழாம் அதிபதி சுபக் கிரகமாகவோ அல்லது சுபக்கிரகத்தின் பார்வை பெற்றாலோ ஜாதகன் ஒழுக்கமுடையவனாக இருப்பான்.
·        லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் சேர்ந்து ஜாதகத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்குத் திருமணம் நடைபெறாது.
·        சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்து ஏழாம் வீட்டில் அமர்ந் திருந்தால் ஜாதகன் ஒரு விதவையை மணந்து கொள்வான்.
·        ஏழில் ஒன்றிற்கு மேற்பட்ட பாப கிரகங்கள் இருந்தால் மனைவிக்கு நோய் உண்டாகும்.
·        இரண்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருந்தாலும், அல்லது இரண்டாம் வீட்டைப் பாப கிரகங்கள் பார்த்தாலும் அதனதன் திசா புக்திகளில் மனைவிக்கு நோய் உண்டாகும்.
·        ஏழிற்கு உடையவன் சர ராசியில் இருந்தால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் உண்டு. ஸ்திர ராசி என்றால் ஒரு மனைவி. உபயராசியென்றால் அவன் பல பெண்களுடன் தொடர்புடையவன்.
·        லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான்.
·        ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது.
·        இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள்.
·        இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி. அவர்கள் சுக்கிரனுடன் அல்லது பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் பல பெண்களிடம் தொடர்பு ஏற்படும்.
·        இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி, அதோடு அவன் பிற மாதரை விரும்ப மாட்டான்.
·        சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைவுற்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.
·        ஏழாம் வீட்டிற்கு அதிபதி பாபிகள் வீட்டில் நின்றாலும், பாபிகளால் பார்க்கப்பட்டாலும் ஜாதகனுக்குத் திருமணம் தூர தேசத்தில் நடக்கும்.
·        நவாம்ச சக்கரத்தில் ஏழாம் வீட்டு அதிபன் சுபர்களுடைய வீட்டில் இருந்தால் உள்ளூர்ப் பெண்ணே மனைவியாக வருவாள்.
·        ஏழாம் அதிபதி பாப கிரகமாகி, ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைந்து நின்றால், எத்தனை கிரகங்களின் பார்வை அங்கே விழுகிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு ஏற்படும்.
·        ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களுடன் சேர்ந்தால் மனைவி நல்லவளாக இருப்பாள். அதுவே பாப கிரகங்களுடன் சேர்க்கை என்றால் மனைவி பொல்லாதவளாக இருப்பாள்.
·        ஏழிற்குரியவன் ராகுவுடன் சேர்ந்து ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் இழிவான பெண்ணை மணக்க நேரிடும்.
·        சுக்கிரனோ அல்லது ஏழிற்குரியவனோ ஜாதகத்தில் நீசமாகியிருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்வாக இருக்காது.
·        காதலுக்கு மென்மையான உணர்வும்,  நல்ல உள்ளமும் வேண்டும். அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும்.
·        சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில் வெற்றி உண்டாகும். சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும். அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை.
·        ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக் கல்யாணம் என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.
·        அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மணவாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்.
·        ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால் திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.
·        குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவை  ஜாதகத்தில் நீசம் அடையாமல் இருக்க வேண்டும்.
·        அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம் அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந்திருந்தால் மணவாழ்க்கை சிறக்காது.
·        அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்களும், லக்கின அதிபதியும், ஏழாம்அதிபதியும்,  மறைவிடங்களில்,  அதாவது 6,8,12 ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது..
·        இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக வர்கத்தில் 28 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை இங்கே விட்டுவிட்டு வேலையின் பொருட்டு வெளிதேசங்களில் போய் உட்கார்ந்து கொள்ள நேரிடும்.
·         செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம்,    சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.
·        ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும், ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து கொள்கிறவன் பாக்கியசாலி.
·        1, 4, 7, 10 ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப்பெற்ற பெண் அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.
·        7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.
·        கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில் புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.
·        மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்தாலும் அவள் யோகமான பெண்தான்.
·        கும்ப லக்கினத்தில் பிறந்து,  4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து, அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின் மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள். இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள். அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.
·        எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும். லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள் யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால், அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.
·        திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு, லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய மூவரும் பலமாக இருக்க வேண்டும்.

திருமண யோகத்திற்கு எதிரானவை

லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருப்பதும் கூடாது.
ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திற்கு இருபக்கத்திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர் உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்.
சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும்,  தீய கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.
சுபக்கிரகங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது.
குரு பலவீனமாகி ஆறாம் வீட்டில் குடியிருப்பது கூடாது. உடன் பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து இருப்பதும் கூடாது.
சுபக்கிரகங்கள் மூன்றும் நீசம் பெற்றிருத்தல் கூடாது.
ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் நீசம் பெற்றிருப்பதும் நல்லதல்ல.
ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் அமர்வது நல்லதல்ல.
எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல.
ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல.
ஜாதகத்தில் சுக்கிரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும், சந்திரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும் இருப்பது நல்லதல்ல.
எழில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்கள் நல்ல நிலைமையில் அமர்ந்திருப்பது நல்லது. செவ்வாயும், சனியும் எந்த நிலையில் அமர்ந்திருந்தாலும் நல்லதல்ல.

திருமணத் தாமதம் /  திருமணத் தடை

ஏழாம் வீட்டதிபதி நீசம் பெற்றிருந்தாலும், வக்கிரகதியில் இருந்தாலும், அஸ்தமனம் ஆகியிருந்தாலும் திருமணம் தாமதப்படும்.
ஏழாம் வீட்டதிபதி 12ல் மறைந்திருப்பதோடு, ஏழாம் வீட்டில் சனி சேர்ந்துள்ள அமைப்பு திருமணம் தாமதப்படும்.
ஏழாம் வீட்டதிபதி எட்டாம் வீட்டில், எட்டாம் அதிபதியுடனும், சனியுடனும் கூட்டாக இருந்தால் திருமணம் தாமதப்படும்.
ஒன்று & ஏழாம் வீடுகளின் மேல்  சனி, மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் இருந்தால் திருமணம் தாமதப்படும். (லக்கினத்தில் செவ்வாய் அல்லது சனி இருந்தால், அவர்களுடைய நேரடிப்பார்வை ஏழாம் வீட்டின் மேல் விழுந்து ஜாதகனின் திருமணத்தைத் தாமதப்படுத்தும்)
அதேபோல இரண்டு & எட்டாம் வீடுகளின் மேல்  சனி, மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.
சுபக்கிரகங்கள் வக்கிரகதியில் இருந்தால் திருமணம் தாமதப்படும்.
சுக்கிரன் அஸ்தமனமாகியிருந்தால் திருமணம் தாமதப்படும்.
ஏழாம் அதிபதி ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்களின் பார்வையில் இருந்தால் திருமணம் தாமதப்படும்.
ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் தாமதமான திருமணம்.
மிதுனம், சிம்மம், அல்லது கன்னி ராசி ஏழாம் வீடாக இருந்து, அங்கு சனி இருந்தால் திருமணம் தாமதப்படும்.
சூரியனும், சுக்கிரனும் கூட்டாக மிதுனம், சிம்மம் அல்லது கன்னி ராசியில் இருந்தால் ஜாதகனுக்குத் தாமதமாகத் திருமணம் நடைபெறும். அதுவே பெண்ணின் ஜாதகமாக இருந்தால் திருமண வாழ்வு வேண்டாம் எனக் கூறக்கூடும்.


                          --------------------------------------------------------------------------


இந்த விதிகள் ஆண்கள், பெண்கள் என்று இரு பிரிவினருக்கும் பொதுவானது! 2ம் வீடு (House of Family affairs) குடும்ப ஸதானம் 7ம் வீடு (House of Marriage) களத்திர ஸ்தானம் சுப கிரகங்கள் : குரு, சுக்கிரன், சந்திரன் பாப கிரகங்கள்: சனி, ராகு கேது, செவ்வாய் மகரராசி, கும்பராசிக்காரர்களுக்கு சனியிடம் இருந்தும், மேஷராசி, விருச்சிக ராசிக்காரகளுக்குச் செவ்வாயிட மிருந்தும் விதிவிலக்குகள் உண்டு. ஏனென்றால் அவைகள் அந்த வீட்டின் அதிபதிகள்

1. சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களும் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும்.வலு என்பது அவைகள் தங்களுடைய சொந்த, உச்ச, நட்பு, திரிகோணம், கேந்திரம் ஆகிய இடங்களில் இருப்பது!

2. ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் உச்சம் பெற்றிருப்பது

3. 5, 9ற்கு அதிபதிகள் லக்கினாதிபதியோடு சேர்ந்தோ அல்லது லக்கினாதிபதியின் பார்வை பெற்றோ இருப்பது

4.1,4,7,10ம் வீடுகளில் சுபக் கிரகங்கள் இருப்பது ந்ல்லது

5.லக்கினாதிபதி அம்சத்தில் உச்சம் பெற்று ஏழாம் வீட்டு அதிபதியைப் பார்ப்பது

6.5ம் வீட்டு அதிபதியும், 5ற்கு 5ந்தான 9ம் வீட்டு அதிபதியும் சுபக்கிரகங்களாக இருந்து வலுவான இடத்தில் அமர்வது

7. சுக்கிரன் தன்னுடைய நட்புக் கிரகங்களுடன் சேர்க்கை அத்துடன் லக்கினாதிபதியின் பார்வையையும் பெறுவது.

8. 5, 7, 9 ஆம் வீடுகளுக்கு அதிபதிகள் லக்கினத்தில் வந்து அமர்வது அல்லது லக்கினத்தைப் பார்ப்பது

9. 9, 10ற்கு அதிபதிகள் (அவர்களுக்கு தர்ம,கர்ம அதிபதிகள் என்று பெயர்) ஏழாம் வீட்டில் சேர்ந்திருப்பது . அல்லது சேர்ந்திருந்தி ஏழாம் வீட்டைப் பார்ப்பது..

10.சுக்கிரனுக்கு மற்றொரு சுபக் கிரகத்தின் கூட்டணி, அல்லது பார்வை! அல்லது கோண வீடுகளக்கு ஆதிபத்யம்

11.சுபக்கிரகங்கள் கேந்திர, திரிகோண் ஸ்தானங்களில் சேர்ந்திருப்பது - அத்துடன் பாவக் கிரகங்களின் பார்வை பெறாமல் இருப்பது

12. 2, வீடு, 7ம் வீடு ஆகிய இடங்களில் சுபக்கிரகங்கள் இருத்தல் அல்லது அந்த வீடுகளின் மேல் அவற்றின் பார்வை

13.பொதுவாக சபக்கிரகங்கள் உச்ச வீடுகளில் இருப்பது

14. கிரகங்கள் ஒன்றிற்கொன்று கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ இருப்பது

15. ராசிச் சக்கரத்தில் (In Rasi Chart) சுக்கிரன், குரு இருவரும் பலம் குறைந்திருந்தாலும், நவாம்சத்தில் உச்சம், ஆட்சி போன்ற அமைப்பைப் பெற்றிருத்தல்

16. 2,4,5,7,9,11 ஆகிய வீடுகளில் ஒரு வீடாவது குருவின் பார்வையைப் பெறுவது!

17. குரு திரிகோண வீடுகளுக்கு அதிபதியாகி, கேந்திரத்தில் இருந்து ஏழாம் இடத்தைப் பார்ப்பது. இந்த விதிகள் எல்லாம் திரும்ணம் சிறப்பாக நடப்பதற்கு மட்டும்தான். திருமண வாழக்கை எப்படி இருக்கும் என்பதற்கு மேலும் பல் விதிகள் உள்ளன.

மூலம் மாமனாருக்கு ஆகாது (மாமியாரை மூலையிலே உட்காரவைத்துவிடும்) ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்றசொல்லடைகள் உள்ளதால், அதை நம்புபவர்கள் அதிகம் அதே போல பூராடம் பெண்ணிற்கு ஆகாது (பூராடம் நூலாடாது அதாவது மாங்கல்யம் தங்காது). கேட்டை குடும்பத்திற்கு ஆகாது என்ற சொல்லடைகளும் உண்டு. அதை நம்புபவர்களும் உண்டு.

ஏழில் சனி இருந்தால் விதவை தோஷம் உள்ள ஜாதகம் ஆகும்

இரு மனங்களைத் திருமணத்தால் கட்டிப்போட ஜோதிடர் எதைப் பார்ப்பார்?

1. இரு ஜாதகங்களும் ஒன்றுக் கொன்று பொருந்துகிறதா என்று பார்ப்பார் அதாவது அடிப்படையான பத்து (நட்சத்திரம், கணம், மகேந்திரம், பெண்தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரச்சு,வேதை ஆகிய பத்து) பொருந்தி இருக்கிறதா என்று பார்ப்பார்! இந்தப் பத்தில் ரச்சுப் பொருத்தம் (Duration of Married Life) அதி முக்கியம். மற்ற ஒன்பதில் ஐந்து பொருந்தினால் போதும்.

2. செவ்வாய் தோஷம் குறுக்கிடாமல் இருக்கிறதா என்று பார்ப்பார்

3. 7ம் வீடு, சந்திர லக்கினம் ஆகியவற்றில் தீய கிரகங்களின் ஆதிக்கம்
இருக்கிறதா? பாபகர்த்தாரி அமைப்பு இருக்கிறதா என்று பார்ப்பார்

4. அஷ்டம சஷ்டமம் (6ம் வீடு - 8ம் வீடு) இருவருக்கும் ஒத்துப் போகிறதா
என்று பார்ப்பார்.
லக்கினத்திற்கு 7ஆம் வீட்டில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தால் அழகான தோற்றத்தை உடைய பெண் மனைவியாக அமைவாள். குரு இருந்தால் நல்ல குணமும், தோற்றமும் உடைய பெண் மனைவியாக வந்து கரம் பிடிப்பாள். 7க்குரிய கிரகமும், சுக்கிரனும் தங்கள் சுய வர்க்கத்தில் ஐந்து, அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தாலும் மனம் விரும்பியது போல மனைவி கிடைப்பாள்
உரிய காலத்தில் திருமணம் நடைபெற வேண்டும், நல்ல அழகும் நல்ல குணமும் (சொன்ன பேச்சை - அட்லீஸ்ட் ஆரம்ப காலத்திலாவது கேட்கக்கூடிய) மனைவி வேண்டும் - அதாவது த்ரீ இன் ஒன் வேண்டும் என்பவர்களுக்கு - அது போல கிட்டுமா? கிடைக்குமா? என்பதைக் கண்டு பிடிக்க ஒரு வழியிருக்கிறது. எழாம் வீடு, ஏழுக்குரியவன் அமர்ந்த வீடு, திருமணகாரகன் (authority for marriage) சுக்கிரன் அமர்ந்த வீடு ஆகிய மூன்று இடங்களுமே முப்பது பரல்களையோ அல்லது அதற்கு அதிகமான பரல்களையோ கொண்டிருந்தால் அதுபோல நடக்கும். லக்கினத்தின் பரல்களை விட ஏழாம் வீட்டின் பரல்கள் அதிகமாக இருந்தால் வீட்டில் உங்கள் மனைவிதான் பிரதம மந்திரி. நீங்கள் வெறும் ஜனாதிபதி மட்டுமே. அதே நேரத்தில் ஏழாம் வீட்டில் உள்ள பரல்களைவிட லக்கினத்தில் பரல்கள் அதிகமாக இருந்தால் நீங்கள் தான் எல்லாம் - அதாவது பர்வேஷ் முஷ்ர·ப் போல சர்வ அதிகாரமும் உங்கள் கையில்தான். மனைவி உங்களிடம் மயங்கிக் கிடப்பாள் அல்லது கட்டுண்டு கிடப்பாள் அல்லது அடங்கிக் கிடப்பாள். இல்லையென்றால் நீங்கள் அடங்கிக் கிடப்பீர்கள். சரி விடுங்கள் யாராவது ஒருவர் மற்றொவருக்கு அடங்கிப்போவதுதானே வாழ்க்கை. "Life is nothing but adjusting with the better half" என்பதுதானே வாழ்க்கையின் (Married Life) முதல் நியதி! ஆண், பெண் இருவரின் ஜாதகங்களுக்குமே இது பொருந்தும்!
1. ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும். (Seventh house is called as house of marriage)

2. சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான் (Venus is called as authority for marriage).

3. ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின் Sub - periodல் திருமணம் நடக்கும்

4. ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள் .

5. ஏழாம் வீட்டிற்கு உரியவன் (Owner) திரிகோண வீடுகளில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள்.

6. ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான் என்று பொருள் கொள்ளவும்.

7. சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் படித்த புத்திசாலியான மனைவி கிடைப்பாள்

8. சுக்கிரனுடன், சந்திரனும், புதனும் கூடி இருந்தால் ஒரு பெரிய செல்வந்தரின் மகள் மனைவியாகக் கிடைப்பாள்.

9. சுக்கிரனுடன், சனி சேர்ந்திருந்தால் மிகவும் கஷ்டப்படுகிற - ஆனால் உழைப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண் மனைவியாகக் கிடைப்பாள்.

10. ஏழாம் அதிபனுடன் எத்தனை கோள்கள் சேர்ந்திருக்கிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு உண்டாகும். ஆனால் ஏழாம் அதிபது சுபக் கிரகமாகவோ அல்லது சுபக்கிரகத்தின் பார்வை பெற்றாலோ ஜாதகன் ஒழுக்கமுடையவனக இருப்பான்.

11. லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் சேர்ந்து ஜாதகத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்குத் திருமணம் நடைபெறாது.

12. சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்து ஏழாம் வீட்டில் அமர்ந் திருந்தால் ஜாதகன் ஒரு விதவையை மணந்து கொள்வான்

13. ஏழில் ஒன்றிற்கு மேற்பட்ட பாப கிரகங்கள் இருந்தால் மனைவிக்கு நோய் உண்டாகும்

14. இரண்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருந்தாலும், அல்லது இரண்டாம் வீட்டைப் பாப கிரகங்கள் பார்த்தாலும் அதனதன் திசா புக்திகளில் மனைவிக்கு நோய் உண்டாகும்.

15. ஏழிற்கு உடையவன் சர ராசியில் இருந்தால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் உண்டு. ஸ்திர ராசி என்றால் ஒரு மனைவிதான். உபயராசியென்றால் அவன் பல பெண்களுக்கு நாயகன்.

16. லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான்.

17. ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது!

18. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள்

19. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி,. அவர்கள் சுக்கிரனுடன் அல்லது பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் பல பெண்களிடம் தொடர்பு ஏற்படும்

20. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி, அதோடு அவன் பிற மாதரை விரும்ப மாட்டான்

21. சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைவுற்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.

22. ஏழாம் வீட்டிற்கு அதிபதி பாபிகள் வீட்டில் நின்றாலும், பாபிகளால் பார்க்கப்பட்டாலும் ஜாதகனுக்குத் திருமணம் தூர தேசத்தில் நடக்கும்.

23. நவாம்ச சக்கரத்தில் ஏழாம் வீட்டு அதிபன் சுபர்களுடைய வீட்டில் இருந்தால் உள்ளூர்ப் பெண்ணே மனைவியாக வருவாள்.

24. ஏழாம் அதிபது பாப கிரகமாகி , ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைந்து நின்றால், எத்தனை கிரகங்களின் பார்வை அங்கே விழுகிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு ஏற்படும

25. ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களுடன் சேர்ந்தால் மனைவி நல்லவளாக இருப்பாள். அதுவே பாப கிரகங்களுடன் சேர்க்கை என்றால் மனைவி பொல்லாதவளாக இருப்பாள்.

26. ஏழிற்குரியவன் ராகுவுடன் சேர்ந்து ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் இழிவான பெண்ணை மணக்க நேரிடும்.

27. சுக்கிரனோ அல்லது ஏழிற்குரியவனோ ஜாதகத்தில் நீசமாகியிருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்வாக இருக்காது.

1. காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும். அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும். இந்த வலு என்னும் வார்த்தைக்குப் பலமுறை விளக்கம் கொடுத்துள்ளேன். அது உங்களுக்குத் தெரிந்ததுதான்.

2. சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில் வெற்றி உண்டாகும்! சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும். அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை!

3. ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம் என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.

4. அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்!

5. ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால் திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.

6. குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள் ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. கெட்டுப் போவது என்பது - ஆம்பல் பூத்துத் தின்பண்டங்கள் கெட்டுப்போகுமே அது போலக் கெட்டுப் போவது என்று பொருள் இல்லை. அவைகள் ஜாதகத்தில் நீசம் அடையாமல் இருக்க வேண்டும்

7. அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம் அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந் திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.

8. அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்கள் ப்ளஸ் லக்கின அதிபதி, ப்ளஸ் ஏழாம் அதிபதி ஆகியவர்கள், மறைவிடங்களில் (Hidden Houses) - அதாவது 6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது.

9. இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக வர்கத்தில் 28 அல்லது மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த வேண்டாமா? அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு துபாய் போன்ற தேசங்களில் போய் உட்கார்ந்து கொள்வது எப்படி நல்ல குடும்ப வாழ்க்கையாகும்? கைபிடித்த மனனவியைவிட பொருள் ஈட்டல் முக்கியமா?

10 செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.

11. ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும், ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து கொள்கிறவன் பாக்கியசாலி!.

12. 1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண் அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.

13. 7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.

14. கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில் புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.

15. மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள் யோகமான பெண்தான்.

16. கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து, அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின் மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள். இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள். அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.

17. எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும். லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள் யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால், அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.

18. திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு, லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய மூவரும் பலமாக இருக்க வேண்டும்.

19. பெண்களுக்குப் பாகியஸ்தானமும், ஆண்களுக்கு லக்கினமும் சிறப்பாக இருப்பது முக்கியம்

20. இங்கே கூறப்படும் விதிகள் அனைத்தும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானதுதான்

திருமண யோகத்திற்கு எதிரான சில அமைப்புக்கள்:

1. லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டுக்குரியவனும் பலம் குறைந்து இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருப்பதும் கூடாது.

2. ஏழாம் வீட்டிற்கு இரு பக்கத்திலும், அல்லது லக்கினத்திர்கு இருபக்கத் திலும் தீயகிரகங்கள் அமர்ந்திருப்பது கூடாது.அதற்குத் தனிப் பெயர் உண்டு. அது பாபகர்த்தாரி யோகம் எனப்படும்

3. சுக்கிரன் நீசமடைந்து ஏழாம் வீட்டில் இருப்பதும், அல்லது தீய கிரகங்களுடன் சேர்ந்து ஏழாம் வீட்டில் இருப்பதும் கூடாது.

4. சுபக்கிரங்கள் மூன்றுமே, 3,6.8,12 ஆகிய மறைவிடங்களில் இருப்பது கூடாது.

5. குரு பலவீனமாகி ஆறாம் வீட்டில் குடியிருப்பது கூடாது. உடன் பாபக் கிரகங்கள் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து இருப்பதும் கூடாது.

6. சுபக்கிரகங்கள் மூன்றும் நீசம் பெற்றிருத்தல் கூடாது

7. ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் நீசம் பெற்றிருப்பதும் நல்லதல்ல!

8 ஏழாம் வீட்டு அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் அமர்வது நல்லதல்ல!

9. எட்டாம் வீட்டுக்காரன் ஏழில் குடியிருப்பது நல்லதல்ல!

10. ஏழில் சந்திரனுடன் சனி கூட்டணி போட்டு அமர்ந்திருப்பது நல்லதல்ல!

11. ஜாதகத்தில் சுக்கிரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும், சந்திரனுக்கு எதிர் வீட்டில் செவ்வாயும் இருப்பது நல்லதல்ல!

12 எழில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர்கள் நல்ல நிலைமையில் அமர்ந்திருப்பது நல்லது. செவ்வாயும், சனியும் எந்த நிலையில் அமர்ந்திருந்தாலும் நல்லதல்ல

2. புனர்பூ தோஷம் என்பது சந்திரனுக்கும், சனிக்கும் ஜாதகத்தில் உள்ள தொடர்பு (குறிப்பாக சேர்க்கை அல்லது பரிவர்த்தனை)

திருமணவாழ்வில் பல சிரமங்களை/துன்பங்களை உண்டாக்கும். தலைவலி, பய உணர்வு, பரபரப்பு, படபடப்பு போன்றவையும் அதன் உப விளைவுகள்தான் (Connection between Saturn and Moon is known as Punarphoo Dosham. Whenever Saturn has got any connection what-so-even with Moon, there will be some obstacle or impediment, not only during negotiation but also at the time of fixation and even at the time of celebration of the marriage. This connection between Moon and Saturn causes delay)

இந்த அமைப்பில் சூரியன் உள்ளே நுழைந்தால் (அந்த இரண்டு கிரகங்களுடன் சூரியன் இருந்ததாலும், அல்லது அவைகளைத் தன் பார்வையில் வைத்திருந்தாலும்) புனர்பூ தோஷம் நீங்கிவிடும்.

பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்தவுடன், குரு ஒன்பதாம் இடத்தில் (பாக்கியஸ்தானத்தில்) இருந்தாலும் அதுவும் உச்சம் பெற்றோ அல்லது அஷ்டகவக்கத்தில் 5ம் அல்லது அதற்கு மேலும் பரல்களையும் பெற்று ஒன்பதாம் இடத்தில் இருந்தாலும் அந்தப் பெண்ணின் ஜாதகத்தை மேலும் பார்க்காமல் மூடிவைத்துவிடலாம். ஒரே வார்த்தையில் சொன்னால் அதிர்ஷ்டமான பெண்
காதல்

காதல் என்று வந்து விட்ட பிறகு, ஜாதகம் எதற்கு? இரண்டு ஆண்டுகள் காதலித்த பிறகு, அவனை வேண்டாம் என்று சொன்னால் அவன் சும்மா விட்டுவிடுவானா? என்னென்ன பிரச்சினைகளைக் கிளப்புவானோ - யாருக்குத் தெரியும்? ஆகவே பயந்த சுபாவம் என்றால் காதலிக்காதே! துணிச்சல் இருந்தால் மட்டுமே காதலில் இறங்கு! காதலில் இறங்கிவிட்டால் ஜாதகத்தைப் பார்க்காதே! வருவது வரட்டும் என்று அவனை அல்லது அவளைத் திருமணம் செய்துகொள் காதலித்தவளைக் கைப் பிடிப்பதுவரை நம் செயல், மற்றதெல்லாம் விதிப்படி அல்லது விதித்தபடி நடக்கட்டும் என்று விட்டுவிடு.

இது இளம் பெண்களுக்கு மட்டும்: ஆண்களில் பாதிப்பேர் சந்தர்ப்பவாதிகள். சுய நலவாதிகள். ஒவ்வொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. காதலிக்கும்போது ஆடவன் ஒரு முகத்தை மட்டுமே உங்களுக்குக் காட்டுவான். திருமணத்திற்குப் பிறகுதான் அவனுடைய இரண்டாவது முகம் தெரிய வரும்.

75% காதல் உடல் ஈர்ப்பினால் மட்டுமே ஏற்படும். ஆகவே ஒருவன் உங்களை விரும்புவதாகக் கூறினால் உடனே வழிந்து ஏற்றுக் கொண்டு விடாதீர்கள்.

அவனைப் பற்றி முழுமையாக விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். பெற்றோர்கள் சம்மதமில்லாமல் காதல் திரும்ணத்திற்கு ஒப்புக் கொள்ளாதீர்கள். பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்றால், போராடி அவர்களை ஒப்புக் கொள்ள வையுங்கள்.

அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பெற்றோர்கள் நிச்சயித்த திருமணமாகட்டும் அல்லது பெற்றோர்களுக்குத் தெரியாத காதல் திருமணமாகட்டும், இரண்டிலுமே பிரச்சினைகள் உண்டு.

நாள் ஒன்றிற்குப் 12 லக்கினங்கள். பிறக்கும் 12 விதமான லக்கினங்களை உடைய குழந்தைகளில் இரண்டு குழந்தைகளுக்கு திருமண வாழ்வில் சிக்கல் இருக்கும். அதாவது சராசரியாக 6 பேர்களில் ஒருவருடைய திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இல்லாமல் போய்விடும். இது ஒரு random கணக்குதான். சனி ஏழில் அமர்ந்தாலும், (அந்தப் பன்னிரெண்டு பேர்களில் ஒருவருக்கு ஏழில் அமையும்) அல்லது ஏழாம் அதிபதி 12ல் அமர்ந்தாலும், அல்லது 6ற்குரிய வில்லன் 7ல் அமர்ந்தாலும் அல்லது 7ற்குரியவன் 6ல் அமர்ந்தாலும் மணவாழ்வு பெரும்பாலும் கசப்பில் முடிந்துவிடும். அந்தப் பெரும்பாலும் எனும் பதம் எதற்கு என்றால் சிலருக்கு குருவின் பார்வை அல்லது சேர்க்கையால் நிலைமை மாறியிருக்கலாம்.

ஏழிற்கு உரிய கிரகம் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் கலப்புத் திருமணம் செய்துகொள்வான் என்பது ஜோதிட விதி.

ஒரு பெண்ணின் லக்கனம் கும்பம் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு எட்டாம் இடம் கன்னி. இதில் செவ்வாய் இருந்து சுபர் பார்வை இல்லை என்றால் அந்தப் பெண், நிரந்தரமாக கணவனைப் பிரிந்து விடுவாள் என்பது ஜோதிட விதி.
திருமண உறவின் சந்தோஷம் குறிக்கும் கிரகம் புதன்
ஜோதிடத்தில் கூட ஆணாதிக்க கிரகங்கள், பெண் ஆதிக்க கிரகங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. குரு, செவ்வாய், சூரியன் ஆகியவை முழுமையான ஆணாதிக்க கிரகங்கள். சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டும் முழுமையான பெண் ஆதிக்க கிரகங்கள்.

ஒரு மனிதனின் (ஆண்/பெண்) ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டும் நன்றாக இருந்தால், அவர் வாழ்வில் நல்ல நிலைக்கு எளிதாக வந்துவிட முடியும். சந்திரன் மனோகாரகன் என்பதால், முடிவெடுக்கும் திறமையை இவரே நிர்ணயிக்கிறார். அதேபோல் சுக்கிரன் வசதி, வாய்ப்புகளை அளிக்கக் கூடியவர். அந்த வகையில் பார்த்தால், ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழி ஜோதிடத்திற்கும் பொருந்தும்.

பொதுப்படையாகப் பார்த்தாலும், ஒரு வீட்டில் பெண்ணின் ஜாதகம் சிறப்பாக இருந்தால் அந்த குடும்பம் சீரும், சிறப்புமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. சில பெண்களுக்கு குடும்ப ஸ்தானம் (2ஆம் இடம், வாக்கு ஸ்தானம்) நன்றாக இருக்கும். அதுபோன்ற அமைப்புடைய பெண்களை மருமகளாகத் தேர்வு செய்தால் மணமகன் குடும்பத்தினர் சிறப்பாக வாழலாம்.

வரன் பார்க்கத் துவங்குவதற்கு முன்பாக மகனின் ஜாதகத்தை என்னிடம் கொண்டு வரும் பெற்றோரில் பெரும்பாலானவர்கள் கூறும் கருத்து என்னவென்றால், “காசு, பணம் கொண்டு வரத் தேவையில்லை. இருக்கிற சொத்தை பராமரித்துக் கொண்டு, மகனையும், எங்களையும் அன்பாக கவனித்து, பாசமாக நாலு வார்த்தை பேசும் வகையில் மணப்பெண் அமையுமா?” என்பதுதான். அதுபோன்ற எதிர்ப்பார்ப்பு உள்ள பெற்றோர், பெண்ணின் ஜாதகத்தில் 2ஆம் இடம் சிறப்பாக இருக்கிறதா? எனப் பார்த்து, மகனுக்கு திருமணம் முடிக்க வேண்டும்.

ஒருவரின் ஜாதகத்தில் (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்) லக்னாதிபதி நன்றாக இருந்தால் சுற்றி இருப்பவர்களை மதித்து நடப்பவர்களாகவும், மற்றவர் மனதை புண்படுத்தும் குணம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். இன்றைய அவசர உலகில் கூட தனது தாயை விட மனதளவில் முதிர்ச்சியடைந்த மகளை நான் பார்த்துள்ளேன். அதற்கு காரணம் அவர்கள் ஜாதகத்தில் லக்னாதிபதியும், 2ஆம் இடமும் சிறப்பான கிரக அமைப்பு பெற்றிருப்பதே.

ஆறுக்கு உரியவனின் தசை, 8க்கு உரியவனின் தசை, பாதகாதிபதி தசை நடக்கும் போது தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவதை சம்பந்தப்பட்ட பெண்கள் தவிர்க்க வேண்டும். அதுபோன்ற காலகட்டத்தில் யோகா, தியானம் போன்றவற்றிலும் பெண்கள் மனதை செலுத்தலாம்.
** ஓர் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து ஏழாம்பாவத்தில் இருந்தால் அவன் ஒரு விதவையை மணம் புரிய வேண்டிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது என ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

----------------------------------------------------------------------------


விதிகள் அனைத்தும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானதுதான்
1. ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும். (Seventh house is called as house of marriage)
2. சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான் (Venus is called as authority for marriage).
3. ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின் Sub - periodல் திருமணம் நடக்கும்
4. ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள் .(மூல திரிகோண லக்னம் தவிர )
5. ஏழாம் வீட்டிற்கு உரியவன் (Owner) திரிகோண வீடுகளில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள்.
6. ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான்.(ஆனால் நீச்சம் அடைய கூடாது )
7. சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் படித்த புத்திசாலியான மனைவி கிடைப்பாள்
8. சுக்கிரனுடன், சந்திரனும், புதனும் கூடி இருந்தால் ஒரு பெரிய செல்வந்தரின் மகள் மனைவியாகக் கிடைப்பாள்.
9. சுக்கிரனுடன், சனி சேர்ந்திருந்தால் மிகவும் கஷ்டப்படுகிற - ஆனால் உழைப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண் மனைவியாகக் கிடைப்பாள்.
10. ஏழாம் அதிபனுடன் எத்தனை கோள்கள் சேர்ந்திருக்கிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு உண்டாகும். ஆனால் ஏழாம் அதிபது சுபக் கிரகமாகவோ அல்லது சுபக்கிரகத்தின் பார்வை பெற்றாலோ ஜாதகன் ஒழுக்கமுடையவனக இருப்பான்.
11. லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் சேர்ந்து ஜாதகத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்குத் திருமணம் நடைபெறாது.
12. சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்து ஏழாம் வீட்டில் அமர்ந் திருந்தால் ஜாதகன் ஒரு விதவையை மணந்து கொள்வான்
13. ஏழில் ஒன்றிற்கு மேற்பட்ட பாப கிரகங்கள் இருந்தால் மனைவிக்கு நோய் உண்டாகும்
14. இரண்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருந்தாலும், அல்லது இரண்டாம் வீட்டைப் பாப கிரகங்கள் பார்த்தாலும் அதனதன் திசா புக்திகளில் மனைவிக்கு நோய் உண்டாகும்.
15. ஏழிற்கு உடையவன் சர ராசியில் இருந்தால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் உண்டு. ஸ்திர ராசி என்றால் ஒரு மனைவிதான். உபயராசியென்றால் அவன் பல பெண்களுடன் தொடர்புடையவன்.
16. லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான்.
17. ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது!
18. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள்
19. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி,. அவர்கள் சுக்கிரனுடன் அல்லது பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் பல பெண்களிடம் தொடர்பு ஏற்படும்
20. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி, அதோடு அவன் பிற மாதரை விரும்ப மாட்டான்
21. சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைவுற்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.
22. ஏழாம் வீட்டிற்கு அதிபதி பாபிகள் வீட்டில் நின்றாலும், பாபிகளால் பார்க்கப்பட்டாலும் ஜாதகனுக்குத் திருமணம் தூர தேசத்தில் நடக்கும்.
23. நவாம்ச சக்கரத்தில் ஏழாம் வீட்டு அதிபன் சுபர்களுடைய வீட்டில் இருந்தால் உள்ளூர்ப் பெண்ணே மனைவியாக வருவாள்.
24. ஏழாம் அதிபது பாப கிரகமாகி , ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைந்து நின்றால், எத்தனை கிரகங்களின் பார்வை அங்கே விழுகிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு ஏற்படும
25. ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களுடன் சேர்ந்தால் மனைவி நல்லவளாக இருப்பாள். அதுவே பாப கிரகங்களுடன் சேர்க்கை என்றால் மனைவி பொல்லாதவளாக இருப்பாள்.
26. ஏழிற்குரியவன் ராகுவுடன் சேர்ந்து ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் இழிவான பெண்ணை மணக்க நேரிடும்.
27. சுக்கிரனோ அல்லது ஏழிற்குரியவனோ ஜாதகத்தில் நீசமாகியிருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்வாக இருக்காது.
28. காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும். அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும்.
29. சுக்கிரனும், சந்திரனும் சமபலத்தோடு இருப்பவர்களுக்குக் காதலில் வெற்றி உண்டாகும்! சுக்கிரனும், சந்திரனும் கேந்திரத்தில் இருந்தாலோ அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ காதல் அரும்பும். அது வெற்றியில் முடியும். இல்லை என்றால் இல்லை!
30. ஜாதகத்தில் சுப யோகங்கள் இருந்தால், அது எந்த வழிக்கல்யாணம் என்றாலும் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.
31. அதே சுக்கிரனும், சந்திரனும், சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது நட்பு வீட்டில் இருந்தாலும், குருவின் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை பெற்றால் பலமுடையவர்கள் ஆவார்கள். அவர்களின் இந்த நிலைப்பாட்டைக் கொண்ட ஜாதகன் அல்லது ஜாதகியின் மண வாழ்வும் சிறக்கும். மகிழ்வுடையதாக இருக்கும்!
32. ஏழாம் வீட்டின் அதிபதியும், லக்கின அதிபதியும் பலமாக இருந்தால் திருமண வாழ்வு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.
33. குரு, சந்திரன்,சுக்கிரன் ஆகிய மூன்றும் சுபக்கிரகங்கள். அவைகள் ஜாதகத்தில் கெட்டுப்போயிருக்கக்கூடாது. கெட்டுப் போவது என்பது - ஆம்பல் பூத்துத் தின்பண்டங்கள் கெட்டுப்போகுமே அது போலக் கெட்டுப் போவது என்று பொருள் இல்லை. அவைகள் ஜாதகத்தில் நீசம் அடையாமல் இருக்க வேண்டும்
34. அதே போல லக்கினாதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் நீசம் அடையாமல் இருக்க வேண்டும். அவர்கள் இருவரும் நீசம் அடைந் திருந்தால் மண வாழ்க்கை சிறக்காது.
35. அதுபோல அந்த மூன்று சுபக்கிரகங்கள் ப்ளஸ் லக்கின அதிபதி, ப்ளஸ் ஏழாம் அதிபதி ஆகியவர்கள், மறைவிடங்களில் (Hidden Houses) - அதாவது 6,8,12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருக்கக்கூடாது.
36. இரண்டாம் வீடு பலமுள்ளதாக இருக்க வேண்டும். அதாவது அஷ்டக வர்கத்தில் 28 அல்லது மேற்பட்ட பரல்களைக் கொண்டிருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு சேர்ந்து குடும்பம் நடத்த அதற்கு இந்த வீடு முக்கியம். திருமணத்திற்குப் பிறகு மனனவியை இங்கே விட்டு விட்டு வேலையின் பொருட்டு தேடி வெளிதேசங்களில் போய் உட்கார்ந்து கொள் நோரிடும்
37. செவ்வாய், ராகு, கேது, சனி போன்ற கிரகங்களின் தோஷம் அல்லது சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.
38. ராஜ யோகம் உள்ள பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்தில் குருவும், ஏழில் சந்திரனும், பத்தில் சுக்கிரனும் இருக்கும். அவளை மணந்து கொள்கிறவன் பாக்கியசாலி!.
39. 1,4,7,10ஆம் வீடுகளில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்ற பெண் அதிர்ஷ்டம் உடையவளாகவும் நற்குணம் உடையவளாகவும் இருப்பாள்.
40. 7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.
41. கன்னி லக்கினத்தில் பிறந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்தில் புதன் இருந்து, 11ல் (கடகத்தில்) குரு இருந்தால் அவளுக்கு ராஜ யோகம்தான்.
42. மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ஒன்று பெண்ணின் லக்கினமாகி, அதில் சந்திரன் இருந்து, அவளுடைய நான்கு கேந்திர வீடுகளிலும் பாவ கிரகங்கள் இல்லாமல் இருந்ததாலும் அவள் யோகமான பெண்தான்.
43. கும்ப லக்கினத்தில் பிறந்து, 4ஆம் வீட்டில் உச்ச சந்திரனும் இருந்து, அந்தச் சந்திரன் குருவின் பார்வை பெற்றால், அந்தப் பெண் நாடாள்வோனின் மனைவியாவாள். அதாவது அரசனின் மனைவியாவாள். இப்போது சொல்வதென்றால் நாடறிந்த பெரிய தலவரின் மனைவியாவாள். அந்த நிலைக்கு அவளை மணந்து கொண்டவன் உயர்வான்.
44. எந்த யோகத்திற்கும் லக்கினாதிபதி பலமாக இருக்கவேண்டும். லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள் யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால், அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.
45. திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு, லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய மூவரும் பலமாக இருக்க வேண்டும்.

----------------------------------------------------

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?இந்தியாவில் திருமணத்திற்கு ஜோதிடங்கள் வழியில் திருமணப் பொருத்தம் பார்க்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. திருமணத்திற்குத் தயாராய் இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது. ஜாதகத்தின் வழியில் பார்க்கப்படும் அந்தப் பொருத்தங்கள்தான் என்ன?

1. தினப் பொருத்தம்

பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை சுபம்.

2. கணப் பொருத்தம்

தேவ கணம்

அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி

மனித கணம்

பரணி, ரோகிணி, திருவாதிரை, பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி

ராட்சஷ கணம்

கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, மூலம்.

பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே கணமாக (ராட்சஷ கணம் தவிர) இருந்தால் நலம். (தற்போது ராட்சஷ கணங்களாக இருந்தாலும் இணைக்கப்படுகிறது)

பெண் தேவ கணமும், புருஷன் மனித கணமானால் மத்திமம்.

பெண் தேவ கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமம் (தற்போது இணைக்கப்படுகிறது)

பெண் மனித கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமா அதமம்- பொருந்தவே பொருந்தாது (தற்போது இணைக்கப்படுகிறது)

பெண் ராட்சஷ கணமும், புருஷன் மனித கணமானால் பொருந்தாது.

3. மாகேந்திரப் பொருத்தம் (புத்திர விருத்தி மற்றும் ஸம்பத்)

பெண் நட்சத்திர முதல் புருசன் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 வருமாயின் உத்தமம்.

4. ஸ்திரி தீர்க்கம் (தீர்க்க சுமங்கலி)

பெண் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் வரை 13 க்கு மேல் இருந்தால் சுபம். 13க்குக் கீழிருந்தால் பொருந்தாது.

5. யோனிப் பொருத்தம் (தாம்பத்ய சுகம்)

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. பெண், ஆண் நட்சத்திரங்கள், பெண்ணுக்குப் பெண் யோனியாகவும், ஆணுக்கு ஆண் யோனியாகவும் பகையில்லாமலிருந்தால் உத்தமம். இருவருக்கும் ஆண் யோனியாக இருந்தால் ஆகாது.

அசுவினி - ஆண் குதிரை
பரணி - ஆண் யானை
கார்த்திகை - பெண் ஆடு
ரோகிணி - ஆண் நாகம்
மிருகசீரிஷம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் யானை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்தரம் - எருது
அஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
சுவாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுஷம் - பெண் மான்
கேட்டை - கலைமான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பாற்பசு
ரேவதி - பெண் யானை

- இவற்றில்

பாம்பு x கீரி
யானை x சிங்கம்
குரங்கு x ஆடு
மான் x நாய்
எலி x பூனை
குதிரை x எருமை
பசு x புலி

-போன்றவை ஜென்ம பகை என்பதால் தவிர்க்க வேண்டும்.

6. ராசிப் பொருத்தம்

பெண் ராசியிலிருந்து பையன் ராசி வரை எண்ணினால்

6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.

8-வது ராசி ஆகாது.

7-வது ராசியானால் சுபம்.

அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது. 2, 6, 8, 12 ஆகாது.

1, 3, 5, 9, 10, 11-வது வந்தால் சுமார்.

பெண் ராசிக்கு பிள்ளை ராசி 6, 8 ஆகவோ 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். இது மிகவும் தீமையாகும். இதிலும் சில விதிவிலக்குண்டு. அவைகளில் மேற்கூறிய தோஷம் இல்லை.

அனுகூல சஷ்டாஷ்டகம்

பெண் ராசி பிள்ளை ராசி

மேஷம் கன்னி

தனுசு ரிஷபம்

துலாம் மீனம்

கும்பம் கடகம்

சிம்மம் மகரம்

மிதுனம் விருச்சிகம்

-ஆக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் கிடையாது.

7. ராசி அதிபதி

கிரகம் நட்பு சமம் பகை

ஒருவருக்கு ஒருவர் நட்பானால் மிக உத்தமம்.

ஒருவருக்கு சமம், ஒருவருக்கு நட்பானால் உத்தமம்

ஒருவருக்கு பகை, ஒருவருக்கு நட்பானால் மத்திமம்

ஒருவருக்கு சமம், ஒருவருக்கு பகையானால் பொருத்தமில்லை

இருவருக்கும் பகையானால் பொருத்தமேயில்லை.

8. வசியப் பொருத்தம்

பெண் ராசி பையன் ராசி

மேஷம் சிம்மம், விருச்சிகம்
ரிஷபம் கடகம், துலாம்
மிதுனம் கன்னி
கடகம் விருச்சிகம், தனுசு
சிம்மம் மகரம்
கன்னி ரிஷபம், மீனம்
துலாம் மகரம்
விருச்சிகம் கடகம், கன்னி
தனுசு மீனம்
மகரம் கும்பம்
கும்பம் மீனம்
மீனம் மகரம்

- வசியம் பொருத்தமுடையவை. மற்ற ராசிகள் பொருந்தாது.

9. ரஜ்ஜீப் பொருத்தம் (மிக முக்கியமானது)

ரஜ்ஜீ ஐந்து வகைப்படும்.

சிரோ ரஜ்ஜீ

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம்

கண்ட ரஜ்ஜீ

ரோகிணி, அஸ்தம், திருவோணம் - ஆரோஹனம்

திருவாதிரை, சுவாதி, சதயம் - அவரோஹனம்

உதார ரஜ்ஜீ

கார்த்திகை, உத்தரம், உத்ராடம் - ஆரோஹனம்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - அவரோஹனம்

ஊரு ரஜ்ஜீ

பரணி, பூரம், பூராடம் - ஆரோஹனம்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி - அவரோஹனம்

பாத ரஜ்ஜீ

அசுவினி, மகம், மூலம் - ஆரோஹனம்

ஆயில்யம், கேட்டை, ரேவதி - அவரோஹனம்

பெண், பிள்ளைகளுடைய நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜீவாக இல்லாமல் பார்த்துச் செய்தால், பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்.

ஒரே ரஜ்ஜீவில் ஆரோஹனம், அவரோஹனம் என்று இரு பிரிவுகள் உண்டு. சிலர் ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜீவில் இருந்தாலும், ஆரோஹனம், அவரோஹனம் வேறாக இருந்தால் செய்யலாம் என்கிறார்கள்

10. வேதைப் பொருத்தம்

அசுவினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோகிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர் பூசம் - உத்ராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்ரட்டாதி
உத்திரம் - உத்ரட்டாதி
அஸ்தம் - சதயம்

11. நாடிப் பொருத்தம்

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக இருக்க வேண்டும்.

பார்சுவநாடி (அ) வாத நாடி

அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி

மத்தியா நாடி (அ) பித்த நாடி

பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி

சமான நாடி (அ) சிலேத்தும நாடி

கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி

ஆண், பெண் இருவருக்கும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது.

12. விருக்ஷம்

ஆண், பெண் இருவரில் யாருக்காவது பால் மரமாக இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு.

பால் இல்லாதது

கார்த்திகை - அத்தி
ரோகிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்தரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்ராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை

பால் உள்ளது

அசுவினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்வசு - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்ரட்டாதி - வேம்பு

பால் மரம் இருவருக்கும் இல்லாவிட்டால் என்ன செய்வது? மகேந்திரம் இருந்தால் செய்யலாம். மகேந்திரமும் இல்லாவிட்டால் ஆண், பெண் ஜாதகத்தில் ஐந்தாமிடம், ஐந்துக்குரியவர், குரு இவர்களை ஆராய்ந்து பின்பு சேர்க்கலாம்.

இந்த 12 பொருத்தங்களில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜீ இருந்தால் திருமணத்தைத் தாராளமாகச் செய்யலாம்.

பத்துப் பொருத்தம் பார்க்க ஒரு இணையதளம்

சில சோதிடர்கள் இந்தப் பன்னிரண்டு பொருத்தங்களில் பத்துப் பொருத்தம் பார்த்தால் போதும் என்கின்றனர். சோதிடர்கள் இல்லாமலே, தாங்களே மணமகள், மணமகன் ஆகியோரின் நட்சத்திரம், ராசி ஆகியவைகளைக் கொண்டு பத்துப் பொருத்தங்களை இந்த இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி: http://www.10porutham.com/


திருமண பொருத்தம் தமிழில்
Astrology Horoscope Marriage Matching for Groom (Male, Boy) and Bride (Girl, Female) by Star
திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண்களுக்கு

வ.எண் ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் 
1 அஸ்வனி பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம் 
2 பரணி ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி 
3 கார்த்திகை 1 ம் பாதம் சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2 
4 கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4 
5 ரோகிணி மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி 
6 மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி 
7 மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி 
8 திருவாதிரை பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4 
9 புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி 
10 புனர்பூசம் 4 ம் பாதம் பூசம், அனுஷம், பரணி, ரோகிணி 
11 பூசம் உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4 
12 ஆயில்யம் அஸ்தம், அனுஷம், பூசம் 
13 மகம் சித்திரை, அவிட்டம் 3, 4 
14 பூரம் உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம் 
15 உத்திரம் 1 ம் பாதம் பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம் 
16 உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் பூராடம், திருவோணம், ரேவதி 
17 அஸ்தம் உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4 
18 சித்திரை 1, 2 ம் பாதங்கள் விசாகம் 4, திருவோணம், ஆயில்யம் 
19 சித்திரை 3, 4 ம் பாதங்கள் விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம் 
20 சுவாதி அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம் 
21 விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் சதயம், ஆயில்யம் 
22 விசாகம் 4 ம் பாதம் சதயம் 
23 அனுஷம் உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம் 
24 கேட்டை திருவோணம், அனுஷம் 
25 மூலம் அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4 
26 பூராடம் உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம் 
27 உத்திராடம் 1 ம் பாதம் பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம் 
28 உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் பரணி, மிருகசீரிஷம் 1, 2 
29 திருவோணம் உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம் 
30 அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம் 
31 அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4 
32 சதயம் கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4 
33 பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம் 
34 பூரட்டாதி 4 ம் பாதம் உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம் 
35 உத்திரட்டாதி ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4 
36 ரேவதி பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி

திருமண நட்சத்திர பொருத்தம் - பெண்களுக்கு


வ.எண் பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் 
1 அஸ்வனி -பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம் 
2 பரணி -புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி 
3 கார்த்திகை 1 ம் பாதம் -சதயம் 
4 கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் -சதயம் 
5 ரோகிணி -மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி 
6 மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் -உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி 
7 மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் -திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி 
8 திருவாதிரை -பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4 
9 புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் -அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4 
10 புனர்பூசம் 4 ம் பாதம் -பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 
11 பூசம் -ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம் 
12 ஆயில்யம் -சித்திரை, அவிட்டம் 1, 2 
13 மகம் -சதயம் 
14 பூரம் -உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி 
15 உத்திரம் 1 ம் பாதம் -சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம் 
16 உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் -அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம் 
17 அஸ்தம் -பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4 
18 சித்திரை 1, 2 ம் பாதங்கள் -கார்த்திகை 2, 3, 4, மகம் 
19 சித்திரை 3, 4 ம் பாதங்கள் -கார்த்திகை 1, மகம் 
20 சுவாதி -பூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம் 
21 விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் -அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4 
22 விசாகம் 4 ம் பாதம் -அவிட்டம், சதயம், சித்திரை 
23 அனுஷம் -கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி 
24 கேட்டை -கார்த்திகை 2, 3, 4 
25 மூலம் -உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம் 
26 பூராடம் -பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி 
27 உத்திராடம் 1 ம் பாதம் -உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி 
28 உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் -உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம் 
29 திருவோணம் -அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம் 
30 அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் -கார்த்திகை 1, மூலம் 
31 அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் -கார்த்திகை, சதயம், மகம், மூலம் 
32 சதயம் -சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4 
33 பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் -மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம் 
34 பூரட்டாதி 4 ம் பாதம் உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம் 
35 உத்திரட்டாதி -ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதி 
36 ரேவதி -மிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதி 

_______________________________________________________________________________________________________________________________________

திருமண நட்சத்திரப் பொருத்தம்
திருமண நட்சத்திரப் பொருத்தம்
பெண் நட்சத்திரம் ஆண் நட்சத்திரங்கள் பொருத்தம்


அஸ்வினி (மேஷராசி)
உத்தமம் பரணி - திருவாதிரை - பூசம் - அனுஷம் - பூராடம் - திருவோணம் - சதயம் - உத்திரட்டாதி.
மத்திமம் பூரட்டாதி - அவிட்டம் - உத்திராடம் - விசாகம் - பூரம் - புனர்பூசம் – மிருகசீரிஷம் - சித்திரை - ரோகிணி – கார்த்திகை(1வது பாதம்).


பரணி ((மேஷராசி)
உத்தமம் அஸ்வினி - கார்த்திகை 1வது – மிருகசீரிஷம் - புனர்பூசம் - ஆயில்யம் - சித்திரை(3&4வது பாதம்) - விசாகம் - கேட்டை - மூலம் - உத்திராடம் - ரேவதி.
மத்திமம் சதயம் - திருவோணம் - சுவாதி - திருவாதிரை கார்த்திகை(2,3&4வது பாதம்) - மகம் – விசாகம்(4வது பாதம்).


கார்த்திகை (1வது,பாதம்) (மேஷராசி)
உத்தமம் அஸ்வினி - பரணி - திருவாதிரை - பூசம் - அஸ்தம் -சுவாதி - அனுஷம் - மூலம் - சதயம் - உத்திரட்டாதி.
மத்திமம் மிருகசீரிஷம் - மகம் - சித்திரை - கேட்டை - அவிட்டம் - ரேவதி.


கார்த்திகை (2,3,4வது பாதம்) (ரிஷப ராசி)
உத்தமம் அஸ்வினி - பரணி - பூசம் - மகம் - சுவாதி - அனுஷம்-மூலம் - சதயம் - உத்திரட்டாதி.
மத்திமம் ரேவதி - அவிட்டம் - கேட்டை - அஸ்தம் - பூரம் - ரோகிணி.


ரோகிணி (ரிஷப ராசி)
உத்தமம் பரணி - கார்த்திகை - மிருகசீரிஷம் - புனர்பூசம்(4வது பாதம்) - ஆயில்யம் – உத்திரம்(1வது பாதம்) – சித்திரை(3&4வது பாதம்)- விசாகம் - கேட்டை - உத்திராடம் - அவிட்டம் - பூரட்டாதி - ரேவதி.
மத்திமம் உத்திரட்டாதி - அனுஷம் - பூசம் - புனர்பூசம்(1,2&3வது பாதம்) - அஸ்வினி.


மிருகசீரிஷம் (1 & 2வது பாதம்) (ரிஷப ராசி)
உத்தமம் அஸ்வினி - கார்த்திகை - ரோகிணி - பூசம் - உத்திரம் (1வது பாதம்) - அனுஷம் - மூலம் – உத்திராடம்(2,3&4வது பாதம்) - திருவோணம் - சதயம் - உத்திரட்டாதி.
மத்திமம் ரேவதி - பூரட்டாதி - கேட்டை - விசாகம் - ஆயில்யம் - சுவாதி – புனர்பூசம்(4வது பாதம்) - பரணி - பூராடம்.


மிருகசீரிஷம் (3 & 4வது பாதம்) (மிதுன ராசி)
உத்தமம் அஸ்வினி - கார்த்திகை - ரோகிணி - திருவாதிரை - உத்திரம் - அஸ்தம் - அனுஷம் - மூலம் - உத்திராடம் (1வது பாதம்) - திருவோணம் - சதயம் - உத்திரட்டாதி.
மத்திமம் ரேவதி - பூரட்டாதி - கேட்டை - சுவாதி - விசாகம் - பூசம் - பூராடம் – புனர்பூசம்(1,2&3வது பாதம்) - பரணி.


திருவாதிரை (மிதுன ராசி)
உத்தமம் பரணி - மிருகசீரிஷம் – புனர்பூசம்(1,2&3வது)-பூரம் – சித்திரை(1&2வது பாதம்) - பூராடம் - அவிட்டம்-விசாகம்(4வது) - பூரட்டாதி - ரேவதி.
மத்திமம் உத்திரட்டாதி - உத்திராடம் - மூலம் - உத்திரம் - மகம் - புனர்பூசம் (4வது பாதம்) - கார்த்திகை - அஸ்வினி.


புனர்பூசம் (1,2,3வது பாதம்) (மிதுன ராசி)
உத்தமம் அஸ்வினி - மிருகசீரிஷம் - திருவாதிரை - பூசம் - சித்திரை (1&2வது பாதம்) - அனுஷம் - மூலம் - அவிட்டம் - சதயம் - உத்திரட்டாதி.
மத்திமம் ரேவதி - திருவோணம் - பூராடம் - கேட்டை - அஸ்தம் - பூசம் - ஆயில்யம் – சித்திரை(3&4வது பாதம்) - சுவாதி - ரோகிணி.


புனர்பூசம் (4வது பாதம்) (கடக ராசி)
உத்தமம் அஸ்வினி - மிருகசீரிஷம் - திருவாதிரை - பூசம் சித்திரை - சுவாதி - அனுஷம் - மூலம் - அவிட்டம் - உத்திரட்டாதி - சதயம்.
மத்திமம் ரேவதி - திருவோணம் - கேட்டை - பூராடம் - அஸ்தம் - ஆயில்யம் - ரோகிணி - பரணி.


பூசம் (கடக ராசி)
உத்தமம் ரோகிணி - திருவாதிரை - புனர்பூசம் - ஆயில்யம்-அஸ்தம் - சுவாதி - விசாகம் - பூரட்டாதி - ரேவதி சதயம்.
மத்திமம் அஸ்வினி - கார்த்திகை - மிருகசீரிஷம் - உத்திரம் - சித்திரை - மூலம் - உத்திராடம் (2,3&4வது பாதம்) - அவிட்டம் - மகம்.


ஆயில்யம் (கடக ராசி)
உத்தமம் கார்த்திகை - மிருகசீரிஷம் - புனர்பூசம் – பூசம் – சித்திரை – விசாகம்(1,2&3வது பாதம்) - அனுஷம் – அவிட்டம் – பூரட்டாதி – உத்திரட்டாதி.
மத்திமம் பரணி – ரோகிணி –திருவாதிரை – அஸ்தம் – உத்திரம்(2,3&4வது பாதம்)- உத்திராடம் – திருவோணம் - சதயம்.


மகம் (சிம்ம ராசி)
உத்தமம் பரணி – திருவாதிரை – பூசம் – சுவாதி – அனுஷம் – திருவோணம் – சதயம் – உத்திரட்டாதி.
மத்திமம் கார்த்திகை – பூரம் – சித்திரை(3&4வது பாதம்) – அஸ்தம் அவிட்டம் – பூரட்டாதி.


பூரம் (சிம்ம ராசி)
உத்தமம் அஸ்வினி – கார்த்திகை - திருவாதிரை - மகம் – உத்திரம்1 – சித்திரை 3&4 – விசாகம் – கேட்டை – உத்திராடம்(2.3&4வது பாதம்) - அவிட்டம் – பூரட்டாதி – ரேவதி.
மத்திமம் திருவாதிரை - சுவாதி - மூலம் - திருவோணம் - சதயம்.


உத்திரம் (1வது பாதம்) (சிம்ம ராசி)
உத்தமம் அஸ்வினி – பரணி – ரோகிணி – திருவாதிரை – பூசம் – மகம் – பூரம் - சுவாதி – அனுஷம் – திருவோணம் – சதயம் – உத்திரட்டாதி.
மத்திமம் ரேவதி – அவிட்டம் – கேட்டை - ஆயில்யம் – மிருகசீரிஷம் - பூராடம் - மூலம்.


உத்திரம் (2,3&4 பாதம்) (கன்னி ராசி)
உத்தமம் அஸ்வினி – பரணி – ரோகிணி – திருவாதிரை – பூசம் – மகம் –பூரம் - அஸ்தம் – அனுஷம் – மூலம் – பூராடம் – சதயம் – உத்திரட்டாதி.
மத்திமம் ரேவதி – அவிட்டம்(3&4வது பாதம்) – கேட்டை – சுவாதி - ஆயில்யம் – மிருகசீரிஷம்.


அஸ்தம் (கன்னி ராசி)
உத்தமம் பரணி – கார்த்திகை – மிருகசீரிஷம் – புனர்பூசம் – ஆயில்யம் – பூரம் - உத்திரம் – சித்திரை(1&;2வது பாதம்) – விசாகம்(4வது பாதம்) – கேட்டை – பூராடம் – உத்திராடம்(1வது பாதம்) – அவிட்டம்(3&4வது பாதம்) - பூரட்டாதி – ரேவதி.
மத்திமம் பூசம் - மகம் - அனுஷம் - உத்திரட்டாதி.


சித்திரை (1&2வது பாதம்) (கன்னி ராசி)
உத்தமம் அஸ்வினி – கார்த்திகை – ரோகிணி – திருவாதிரை – பூசம் – மகம் – அஸ்தம் – அனுஷம் – மூலம் – சதயம்.
மத்திமம் ரேவதி - விசாகம் – பூரம் – ஆயில்யம் – புனர்பூசம் – பரணி.


சித்திரை (3&4வது பாதம்) (துலாம் ராசி)
உத்தமம் அஸ்வினி – கார்த்திகை – ரோகிணி – திருவாதிரை – பூசம் - அஸ்தம் - சுவாதி – மூலம் – திருவோணம்.
மத்திமம் ரேவதி – விசாகம் – பூரம் – கேட்டை - ஆயில்யம் – புனர்பூசம் – பரணி.


சுவாதி (துலாம் ராசி)
உத்தமம் பரணி – மிருகசீரிஷம்(3&4வது பாதம்) – புனர்பூசம் – ஆயில்யம் - கேட்டை - பூராடம் – பூரம் – சித்திரை - விசாகம் – ரேவதி.
மத்திமம் உத்திரட்டாதி – உத்திரம் – உத்திராடம் – கார்த்திகை - பூசம் - மகம் - மூலம் - பூரட்டாதி - அவிட்டம்(1&2வது பாதம்).


விசாகம் (1,2,3வது பாதம்) (துலாம் ராசி)
உத்தமம் அஸ்வினி – மிருகசீரிஷம் – திருவாதிரை – பூசம் – மகம் - சித்திரை – சுவாதி – மூலம் –அவிட்டம்(1&2வது பாதம்).
மத்திமம் ரேவதி – அஸ்தம் – பூரம் – ஆயில்யம் – ரோகிணி – பரணி - அனுஷம் - கேட்டை – அவிட்டம்(3&4வது பாதம்) - சதயம்.


விசாகம் (4வது பாதம்) (விருச்சிக ராசி)
உத்தமம் அஸ்வினி – மிருகசீரிஷம் – திருவாதிரை – பூசம் – மகம் - சித்திரை - சுவாதி – அனுஷம் – மூலம் – அவிட்டம் – சதயம்.
மத்திமம் கேட்டை – அஸ்தம் – பூரம் – ரோகிணி – பரணி - ஆயில்யம் - ரேவதி.


அனுஷம் (விருச்சிக ராசி)
உத்தமம் ரோகிணி – புனர்பூசம் – ஆயில்யம் – அஸ்தம் –சுவாதி – விசாகம் - சதயம் – திருவோணம் – பூரட்டாதி(1,2&3வது பாதம்).
மத்திமம் ரேவதி - பூரட்டாதி - கேட்டை – சித்திரை – உத்திராடம் (2,3&4 பாதம்)- உத்திரம் – மகம் – மிருகசீரிஷம் – கார்த்திகை - அஸ்வினி.


கேட்டை (விருச்சிக ராசி)
உத்தமம் கார்த்திகை – மிருகசீரிஷம் – புனர்பூசம் – பூசம் – உத்திரம் - சித்திரை – விசாகம் – அனுஷம் –அவிட்டம்.
மத்திமம் உத்திரட்டாதி - பூரட்டாதி - திருவோணம் - உத்திராடம் - அஸ்தம் – சுவாதி - பூரம் – ரோகிணி – பரணி.


மூலம் (தனுசு ராசி)
உத்தமம் திருவாதிரை –பூசம் – பூரம் – அஸ்தம் – சுவாதி – சதயம்.
மத்திமம் உத்திரட்டாதி – விசாகம் – சித்திரை – உத்திரம் – புனர்பூசம் – மிருகசீரிஷம்(3&4வது பாதம்) - பூராடம் திருவோணம் - அவிட்டம்.


பூராடம் (தனுசு ராசி)
உத்தமம் மிருகசீரிஷம் – புனர்பூசம் (1,2&3வது பாதம்) - மகம் – உத்திரம் – சித்திரை - விசாகம் – கேட்டை – மூலம் - உத்திராடம் 1வது – பூரட்டாதி – ரேவதி.
மத்திமம் திருவாதிரை - ஆயில்யம் - புனர்பூசம் (4வது பாதம்) - அஸ்தம் - சுவாதி - உத்திராடம் (2,3&4வது பாதம்) - திருவோணம் - அவிட்டம்.


உத்திராடம் (1வது,பாதம்) (தனுசு ராசி)
உத்தமம் திருவாதிரை – பூசம் – மகம் - பூரம் – அஸ்தம் – சுவாதி – அனுஷம் – மூலம் - பூராடம் – சதயம் – உத்திரட்டாதி.
மத்திமம் அஸ்வினி - பரணி - மிருகசீரிஷம் - ஆயில்யம் - கேட்டை - திருவோணம் - அவிட்டம் - ரேவதி.


உத்திராடம் (2,3,4வது பாதம்) (மகர ராசி)
உத்தமம் அஸ்வினி – பரணி – பூசம் – மகம் – பூரம் – அஸ்தம் – சுவாதி - அனுஷம் – மூலம் - பூராடம் – திருவோணம் – சதயம் – உத்திரட்டாதி.
மத்திமம் ரோகிணி - ஆயில்யம் - கேட்டை - அவிட்டம் - ரேவதி.


திருவோணம் (மகர ராசி)
உத்தமம் பரணி - மிருகசீரிஷம் – புனர்பூசம் – ஆயில்யம் – உத்திரம்(2,3&4வது பாதம்) - சித்திரை – பூரம் - விசாகம் – கேட்டை – பூராடம் - உத்திராடம் – அவிட்டம் – பூரட்டாதி - ரேவதி.
மத்திமம் மகம் - பூரம் - உத்திரம்(1வது பாதம்) - அனுஷம் - மூலம் - உத்திரட்டாதி.


அவிட்டம் (1&2வது பாதம்) (மகர ராசி)
உத்தமம் அஸ்வினி – கார்த்திகை – பூசம் – உத்திரம்(2,3&4வது பாதம்) - அஸ்தம் – சுவாதி – அனுஷம் - மூலம் – உத்திராடம் - திருவோணம் – சதயம்.
மத்திமம் உத்திரட்டாதி – பூராடம் – விசாகம் – ஆயில்யம் – புனர்பூசம் - கார்த்திகை(2,3&4 பாதம்) - கேட்டை - உத்திரம் - மகம்.


அவிட்டம் (3&4வது,பாதம்) (கும்ப ராசி)
உத்தமம் கார்த்திகை - பூசம் - மகம் - உத்திரம் - அஸ்தம் - சுவாதி - அனுஷம் - மூலம் - உத்திராடம் - திருவோணம் - சதயம்.
மத்திமம் பூராடம் - கேட்டை - விசாகம் - பூரம் - ஆயில்யம் - புனர்பூசம்(4வது பாதம்) - திருவாதிரை - ரோகிணி - அஸ்வினி - உத்திரட்டாதி.

சதயம் (கும்ப ராசி)
உத்தமம் மிருகசீரிஷம் – புனர்பூசம் – ஆயில்யம் – பூரம் – சித்திரை – விசாகம் – கேட்டை – பூராடம் - அவிட்டம்.
மத்திமம் ரேவதி – பூரட்டாதி – உத்திராடம் – மூலம் – அனுஷம் – உத்திரம் - பூசம் - புனர்பூசம் - அஸ்வினி.


பூரட்டாதி (1,2,3வது பாதம்) (கும்ப ராசி)
உத்தமம் அஸ்வினி - மிருகசீரிஷம் (1&2 பாதம்)– பூசம் – மகம் - சித்திரை – சுவாதி – அனுஷம் - மூலம் – அவிட்டம் - சதயம்.
மத்திமம் உத்திரட்டாதி – திருவோணம் – பூராடம் – கேட்டை – அனுஷம் – அஸ்தம் - ஆயில்யம்.


பூரட்டாதி (4வது, பாதம்) (மீன ராசி)
உத்தமம் மிருகசீரிஷம் – திருவாதிரை – சித்திரை(1&2 பாதம்) –அனுஷம் - மூலம் – அவிட்டம் – சதயம் – உத்திரட்டாதி.
மத்திமம் திருவோணம் – பூராடம் – கேட்டை - அஸ்தம் – பூசம் - சுவாதி.


உத்திரட்டாதி (மீன ராசி)
உத்தமம் கிணி – திருவாதிரை – புனர்பூசம்(2&3 பாதம்) – அஸ்தம் – கேட்டை - திருவோணம் - சதயம் - பூரட்டாதி – ரேவதி.
மத்திமம் விட்டம் – உத்திராடம் - மூலம் - சுவாதி – ஆயில்யம் - உத்திரம்(3&4வது பாதம்)- புனர்பூசம்(4வது பாதம்) – கார்த்திகை(2,3&4வது பாதம்).


ரேவதி (மீன ராசி)
உத்தமம் ர்த்திகை(2,3&4வது) – மிருகசீரிஷம் – புனர்பூசம்(1,2 &3வது பாதம்) - உத்திரம்(2,3&4வது பாதம்) - சித்திரை(1&2வது பாதம்) - விசாகம் – அனுஷம் – உத்திராடம் – உத்திரட்டாதி.
மத்திமம் சதயம் – திருவோணம் – விசாகம் – அஸ்தம் – பூசம் – பூராடம் - புனர்பூசம்(4வது பாதம்) - ரோகிணி – கார்த்திகை(1வது பாதம்).

-------------------------------------------------------

விவாஹப் பொருத்தத்தின் முக்கிய அம்சங்கள்  
பெற்றோர்களின் பொறுப்பு. 
திருமணத்திற்குரிய காலகட்டம் வந்ததும், அவரவர்களின் பெண்ணிற்கோ அல்லது பிள்ளைக்கோ திருமணம் செய்துவைப்பது பெற்றோர்களின் பொறுப்பும் கடமையும் ஆகும். ஆகையால் தங்கள் மகள் அல்லது மகனுக்கு உரிய வரனைத்தேடி திருமணம் செய்ய முனைகின்றனர். தகுந்த வரன் கிடைத்த பிறகு திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கு ஒரு ஜோசியரை அணுகி சரியான பொருத்தம் அமைந்தால் திருமணம் நடப்பதற்கு வேண்டிய அடுத்த கட்ட முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. தகுந்த வரனை தேடி எடுப்பது எப்படி? பொருத்தம் எவ்வாறு பார்க்கவேண்டும் என்று தெரிந்து கொள்வோமா ?
தகுந்த வரன் தேடுவதில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை. 1. ஜாதி,மதம்,குலம்,கோத்திரம்,உட்பிரிவு,
2. வரன் இருக்கும் ஊர், பூர்வீகம், குடும்ப அந்தஸ்து
3. வயது வித்தியாசம் 
4. பெண் அல்லது பையனின் படிப்புக்கு தகுந்தபடி ஜாதகம் எடுப்பது.
5. அரசாங்க வேலையா, தனியார் கம்பெனியா, நிரந்தர வேலையா ?
6. சொந்த பிஸிநெஸ் அல்லது வியாபாரமா ?
7. போதிய வருமானமும், வசதியும் இருக்கிறதா ?
8. வரனின் குணாதிசயங்களை விசாரிப்பது
9. தனது மகள் அல்லது மகனுக்கு ஏற்ற வரனா ?
10.உயரம், நிறம், அழகு. உடல் வாகு ஒத்துவருமா ?
11.நோய், நொடி ஊனம், இல்லாத வரனா ?
12.பெண் அல்லது பையனின் பிறந்த நக்ஷத்திரத்துக்கு பொருந்தக்கூடிய ஜாதகங்களை எடுப்பது. 

இந்த 12 விஷயங்களையும் ஆராய்ந்து வரன்களின் ஜாதகங்கள் கிடைத்த பிறகு திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கு ஓர் நல்ல ஜோதிடரை அணுகுவது நமது பழக்கத்தில் உள்ளது. 

இப்போது திருமணப் பொருத்தம் பார்ப்பதின் விபரங்களைப் பார்ப்போமா ? திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி ? 
திருமணப்பொருத்தம் பார்ப்பது என்றால் அநேக பொருத்தங்களைப் பலவிதமாக பார்க்கலாம். 
உதாரணமாக கீழ்கண்ட பொருத்தங்களைப் ஒரு ஜோதிடரிடம் சென்று பார்க்கலாம்.
1. ஆண்,பெண் ஜாதகங்களின் சுப, பாவ, சம நிலை ? 
2. நக்ஷத்திரப் பொருத்தம்.
3. செவ்வாய் தோஷப் பொருத்தம்
4. நாக தோஷம் / காலசா;ப்ப nhதஷம்
5. லக்னப் பொருத்தம்/ லக்னாதிபதிப் பொருத்தம்;
6. ராசிப் பொருத்தம் / ராசியாதிபதிப் பொருத்தம்
7. ஆயுள் பொருத்தம் / நாடிப் பொருத்தம்
8. புத்திரபாவப் பொருத்தம்
9. கூட்டு கிரகப் பொருத்தம்
10. களத்திர தோஷம்/ ஷஷ்டாஷ்டகம் /  பஞ்சநவமம்
11. உறவுப் பொருத்தம் /  விதிவழிப் பொருத்தம் 
12. தசா சந்திப்பு
இவ்வாறு பலவித பொருத்தங்களை தனித்தனியாகப் பார்க்கலாம். 

திருமணப் பொருத்தத்தை கீழ்கண்ட முறையிலும் பார்க்கலாம்.
1. நக்ஷத்திரப் பொருத்தம்
2. செவ்வாய் தோஷம்
3. தசா சந்திப்பு
4. பாவ சாம்யம் (தோஷ சாம்யம்)

இந்த 4 வகை பொருத்தங்களும் கட்டாயம் பார்க்கவேண்டும். இவை திருப்திகரமாக அமைந்தால் மட்டுமே விவாகம் செய்யலாம். இந்த 4ல் ஏதாவது ஒன்று சரியாக பொருந்தாது போனால் திருமணம் செய்யக் கூடாது, மேலும் இந்த முறையில் துல்லியமாகவும், சீக்கிரமாகவும், குறைந்த செலவிலும் முடிவைத் தெரிந்து கொள்ளலாம்.

திருமணப்பொருத்தம் பார்ப்பதில் உள்ள விபரங்கள் பல பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. 
ஆகையால் நக்ஷத்திரப் பொருத்தம், செவ்வாய் தோஷம், தசாசந்திப்பு, பாவசாம்யம் (தோஷசாம்யம்), நாகதோஷம் /  காலசர்ப்ப தோஷம் இவைகளைப்பற்றி விவாஹசங்கமம் இணையதயத்தில் தமிழில் வெளியிட்டுள்ளோம்.

விவாஹப் பொருத்தமும் பாபசாம்யமும் பாபசாம்யம் என்றால் என்ன ? பாபசாம்யம் என்பது ஒரு ஜாதகத்தில் உள்ள தோஷம் எந்த அளவில் உள்ளது என்பதை அதற்கான கணக்குகளைப் போட்டு முடிவு செய்ய ஜோதிட சாஸ்திரத்தல் சொல்லப் பட்டுள்ள ஒரு வழி. திருமணப் பொருத்தம் பார்க்கும் போது ஆண்,பெண் ஜாதகங்களில் உள்ள தோஷங்களை துல்லியமாக ஒப்பிட்டு திருமணம் செய்யலாமா கூடாதா என்று தீர்மானம் செய்ய உதவும் ஓர் முக்கியமான அம்சம். இதனை தோஷசாம்யம் என்றும் சொல்வதுண்டு. பாபசாம்யதின் விளக்கம் சனி, ராகு, கேது, செவ்வாய், சூரியன், கெடுதல் செய்யக்கூடிய கிரகங்கள். இந்த ஐவரும் ராசி சக்கரத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரன் இருக்கும் வீடுகளிலிருந்து, 1-2-4-7-8-12 வது இடங்களில் காணப்பட்டால் அந்த ஜாதகருக்கு தோஷங்கள் ஏற்படக்கூடும். இந்த 5 கிரகங்களும் 1-2-4-7-8-12 வது இடங்களில், உச்சமா, நீசமா, நட்பா, பகையா, ஆட்சியா, சமமா என்ற நிலையை பொருத்து தோஷங்களின் வலிமை இருக்கும். திருமணப் பொருத்தம் பார்க்கும் போது சனி, ராகு, கேது, செவ்வாய், சூரியன் கொடுக்கும் தோஷங்கள், யாருக்கு அதிகம், பெண்ணிற்கா, பிள்ளைக்கா என்று பார்க்கும் போது, பெண்ணின் தோஷம் அதிகமாக இருந்தால் பாபசாம்யம் திருப்திகரமாக இல்லை என்று முடிவு செய்யப்படும். ஆணின் தோஷம், பெண்ணை விட அதிகமாகவோ அல்லது சமமாக காணப்பட்டால், திருமணப் பொருத்தம் சிபாரிசு செய்யப்படும். 
  பாபசாம்யத்தை ஒரு உதாரணம் மூலம் விளக்கமுடியுமா ? 
கண்டிப்பாக விளக்கம் தர முடியும். பாபசாம்யம் கணக்கிட 5 முறைகள் உள்ளன.
1. Equal Points Equal Weightage Method. ( சம புள்ளி - சம மதிப்பு )
2. Equal Points unqual Weightage Method  ( சம புள்ளி - வேறுபாடுடைய மதிப்பு )
3. Unqual Points Equal Weightage Method ( வேறுபாடுடைய புள்ளி - சம மதிப்பு )
4. Unequal Points Unequal Weightage method. ( புள்ளி வேறுபாடு - மதிப்பு வேறுபாடு )
5. Point System considering planetary Friendship and positional strength.

இப்போது ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். 
Point System considering planetary Friendship and positional strength.

 பெண் ஜாதகம் லக்னத்திலிருந்து ராசியில் கிரகங்கள் ஆண் ஜகதகம் லக்னத்திலிருந்து 
தோஷம்; நிலை இடம் இடம் நிலை தோஷம்; 
24 உச்சம் 12y; சனி  1 பகை 112 
96 உச்சம் 7 ராகு 3 நட்பு --- 
96 உச்சம் 1 கேது 9 நட்பு --- 
168 பகை 8 செவ்வாய் 9 நட்பு --- 
36 சமம் 8 சூரியன் 11 பகை --- 
சந்திரனிலிருந்து   சந்திரனிலிருந்து 
---- உச்சம் 5 சனி   3 பகை --- 
12 உச்சம் 12 ராகு 5 நட்பு --- 
--- உச்சம் 6 கேது 11 நட்பு --- 
84 பகை 1 செவ்வாய் 11 நட்பு --- 
18 சமம் 1 சூரியன் 1 பகை 28 
சுக்கிரனிலிருந்து   சுக்கிரனிலிருந்து 
--- உச்சம் 3 சனி 5 பகை --- 
24 உச்சம் 8 ராகு 7 நட்பு 8 
06 உச்சம் 4 கேது 1 நட்பு 8 
--- பகை 9 செவ்வாய் 1 நட்பு 12 
--- சமம் 9 சூரியன் 3 பகை --- 
564 564 ஐ 128 ஆல் வகுக்க

4.4 தோஷம் பெண்ணிற்கு   168ஐ 128 ஆல் வகுத்தால்

 1.31 தோஷம் ஆணுக்கு 168
  
  இந்த முறையில் ஆணின் தோஷத்தை விட பெண்ணிற்கு தோஷம் குறைவாக இருக்க வேண்டும். அல்லது சமமாக இருக்க வேண்டும். அப்போது தான் திருமண வாழ்க்கை நலமாக அமையும். இந்த உதாரணத்தில் பெண்ணுக்கு தோஷம் அதிகமாக இருப்பதால் திருமணம் செய்யக் கூடாது. 

விவாஹசங்கமம்,சென்னை,இந்தியா
நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா?

ஆயில்யம்,மூலம்,கேட்டை,விசாகம், பூராடம்                                   15th March 2009 பொதுவாக இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை நமது மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணத்திற்கு தேர்ந்தெடுப்பதற்கு பயப்படுகிறோம். கீழ்கண்ட காரணங்களினால் குடும்பத்திற்கு ஆகாத நக்ஷத்திரங்களாக கருதுகிறோம்.

1. ஆயில்யம் மாமியாரை பாதிக்குமோ என்ற பயம்.
2. மூலம் மாமனாருக்கு ஆபத்து வருமோ என அஞ்சுகிறோம்.
3. கேட்டை மூத்த மைத்துனருக்கு கெடுதல் என்று நம்புகிறோம்.
4. விசாகம் இளைய மைத்துனருக்கு ஆகாது என சொல்லப் படுகிறது.
5. பூராடம் நூலாடாது என்று சொல்கிறார்களே.

இந்த கட்டுரையில் இந்த ஐந்து நக்ஷத்திரங்களைப்பற்றி ஜோதிடத்தில் என்ன
சொல்லப்பட்டிறிக்கிறது என்று தெரிந்து கொள்வோமா? முதலில்

1. இந்த தோஷங்கள் ஆண் நக்ஷத்திரஷங்களுக்க கிடையாது.
2. எந்த நக்ஷத்திரமும் கெட்ட நக்ஷத்திரம் இல்லை.
3. சுத்த ஜாதககங்களானால் இந்த தோஷங்கள் அனுபவத்திற்கு வருவதில்லை.

இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை ஓதுக்காதீர்கள். ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்த பிறகு முடிவு செய்வது நல்லது. 
இந்த நக்ஷத்திரங்களில் பிறந்த பலர் திருமணம் செய்துகொண்டு நன்றாக இருக்கிறார்கள். மேலும் நமது குடும்பத்தில் கூட இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் இருக்கலாம் அல்லவா? 
ஆகையால் இந்த நக்ஷத்திரங்களைப்பற்றி ஜோதிடத்தில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என தெரிந்து கொள்வோம்.
  
1. ஆயில்ய நக்ஷத்திரம்
ஆயில்யம் கடக ராசியில் உள்ளது. கடகம் சந்திரனின் ஆட்சி வீடு. சந்திரன் தாய்க்கு காரகர். மாமியார் மணமகனின் தாய். ஆகவே தாயின் காரகரால் தாயாருக்கு மரணம் ஏற்பட வாய்ப்பு இல்லை. தாயின் காரகர் தன் தாயாரைக் கொல்ல மாட்டார்.
ஆயில்யத்தின் அதிபதி புதன். ராசி சக்கரத்தில் லக்னத்திற்கு 10ம் வீடு மாமியார் வீடு. இந்த வீட்டில் புதபகவான் செவ்வாய் அல்லது ராகு கேதுவுடன் சேர்ந்து நின்றாலோ, அல்லது 4 ம் வீட்டில் இவ்வாறு காணப் பட்டாலோ மாமியாருக்கு கெடுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் புதன் ஆட்சி, உச்சம் பெற்று சுக்கிரனின் சாரம் பெற்று இருந்தால் மாமியாருக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படாது.

ஆயில்ய நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை உடனே ஓதுக்காமல் அந்த ஜாதகங்களை உங்கள் ஜோதிடரிடம் ஆராய்ந்து முடிவு செய்வது நல்லது. சுத்த ஜாதகமானால் தீங்கு எற்பட வாய்ப்பில்லை.


2. மூலம் நக்ஷத்திரம்.
ஆனி மூலம் அரசாளும், பின் மூலம் நிர் மூலம் என்பது ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்று மாறுபட்டதால், மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களின் வரன்களை ஏற்றுக்கொள்ள பயப்படுகிறோம். இதன் உண்மை பின்வருமாறு.

ஆனி மாதம் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, சூரியனும், சந்திரனும் உபய வீடுகளில் இருப்பதால் பௌர்ணமி யோகம் ஏற்படுகிறது. இதனால் பலவிதமான நன்மைகளும் நாடாளும் யோகங்களும் ஏற்படுகின்றன.
இதையே ஆனி மூலம் அரசாளும் என்று சொல்கிறோம். (ஆனி மூலம் என்பது ஆண்மூலம் ஆகியது)

மூலம் நக்ஷத்திரத்தின் 4 வது பாதத்தில் பிறந்தவர்கள் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளை எளிதில் சமாளித்து தனது  எதிரிகளையும் நிர்மூலம் செய்து வெல்லக்கூடிய திறமை உள்ளவர்கள். இதுவே பின்மூலம் நிர்மூலம் எனப்படும். எனவே (பின் மூலம் என்பது பெண் மூலம் ஆகியது)

சரி, ஆனி மாதம் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் தானே மேற்படி விளக்கம், மற்றபடி மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்ணால் யாருக்காவது ஆபத்து வருமா ? என்று ஒரு கேள்வி கேட்கலாம். 
மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்ணால் மாமனாருக்கு ஆபத்து என்பது எல்லா பெண்களுக்கும் பொருந்தாது.
லக்னத்துக்கு 3 ம் வீடு மாமனார் வீடு. இங்கு கேது இருந்தாலோ மற்றும் 4 வது 9 வது வீடுகளில் கேது காணப்பட்டாலோ மாமனாருக்கு கெடுதல் நேரலாம். மற்றபடி மூலம் நக்ஷத்திரத்தால் மட்டும் எநத வித தோஷமும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

பரிகாரம்- கேதுவின் நக்ஷத்திரம் மூலம். திருமணமாகாத பெண்களும், ஆண்களும் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் இருக்கும் வெள்ளை விநாயகரையும், திருப்பதி அருகெ காளஹஸ்த்தியில் இருக்கும் பாதாள விநாயகரையும், மயிலாடுதுறை அருகேயுள்ள கேதுவின் ஸ்தலமாகிய கீழ்பெரும்பள்ளத்திற்கும் சென்று பரிகாரம் செய்துவருவது நன்மை தரும்.

மூலம் நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை உடனே ஓதுக்காமல் அந்த ஜாதகங்களை 
உங்கள் ஜோதிடர் மூலமாக ஆராய்ந்து பார்த்து முடிவு செய்வது நல்லது. சுத்த ஜாதகமானால் தீங்கு எற்பட வாய்ப்பில்லை.

கேட்டை நக்ஷத்திரம் 
கேட்டை மூத்த மைத்துனருக்கு ஆகாது என்று சொல்லப்படுகிறது. ராசி சக்கரத்தில் 5ம் இடத்தில் பாபிகள் இருந்தால் மூத்த மைத்துனருக்கு கெடுதல் ஏற்படலாம். கேட்டையின் அதிபதி புதன். இவருடன் 5ம் வீட்டில், ராகு,கேது,குரு,செவ்வாய், தொடர்பு காணப்பட்டால், மூத்தமைத்துனருக்கு ஏதேனும் துன்பம் ஏற்படலாம். மற்றபடி எந்தவித ஆபத்தும் வர வாய்ப்பு இல்லை.

ஆகையால் கேட்டை நக்ஷத்திரத்தில் பிறநத பெண்களின் ஜாதகங்களை உடனடியாக ஒதுக்காமல், மேற்கண்டவாறு தோஷம் உள்ளதா? மூத்தமைத்துனருக்கு துன்பம் வருமா? என உங்கள் ஜோதிடரை அணுகி முடிவு செய்யவும். சுத்த ஜாதகமானால் தீங்கு எற்பட வாய்ப்பில்லை.

விசாகம் நக்ஷத்திரம்.
  
விசாகம் இளைய மைத்துனருக்கு ஆகாது என்று சொல்லப் படுகிறது. ராசி சக்கரத்தில் 9ம் இடத்தைப் பார்த்து இளைய மைத்துனருக்கு இன்னல் வருமா என்று தெரிந்து கொள்ளலாம். 9ம் வீட்டில் ராகு,கேது,செவ்வாய் நின்றால் இளைய மைத்துனருக்கு ஆயுள் குறைவை ஏற்படுத்தலாம். 
விசாகத்தின் அதிபதி குருபகவான். குருவுடன், புதன் சேர்ந்து காணப்பட்டாலோ அல்லது குரு கெட்டு இருந்தாலோ இளைய மைத்துனருக்கு சில இன்னல்கள் ஏற்படலாம். ஆனால் குருபகவான் வலுவாக இருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.

உங்களிடம் வரும் விசாகம் நக்ஷத்திரத்தில் பிறந்த வரனின் ஜாதகத்தில் இவ்வாறு உள்ளதா என்று ஜாதகத்தை ஓர் நல்ல ஜோதிடர்டம்  பரிசீலித்து முடிவு செய்யுங்கள். விசாகம் என்ற உடனே ஒதுக்காதீர்கள். சுத்த ஜாதகங்களானால் பாதிப்பு இருக்காது.

பூராடம் நக்ஷத்திரம்   ஆயில்யம், மூலம், கேட்டை, விசாகம் நக்ஷ்ததிரங்களுக்கு மேலே சொல்லப்பட்ட விளக்கம் போல் பூராடம் நூலாடாது என்பதற்கு ஜோதிடத்தில் ஆதாரம் எதுவும் தென்படவில்லை. ஆகையால் பூராடம் நூலாடாது என்பது பழக்கத்தில் ஏற்பட்டதாக கொள்ளலாம். பூராடம் நூலாடாது என்றால் தாலி நிலைக்குமா என்று பயப்படுகிறோம். ஆனால் பூராடம் நூலாடாது என்றால் திருமாங்கல்யம் ஆடிப்போகாமல் நிலைத்து நிற்கும் என்று சிலர் நம்புகின்றனர். ஆண் பெண் இருவருக்கும் ஆயுள் பாவம் பலமாக இருந்தால் எந்தவித பாதிப்பு வர வாய்ப்பு இல்லை.

பூராடம் நக்ஷத்திரஙகளின் ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது ஆண் பெண் இருவருடைய ஆயுள் பாவங்கள் நன்றாக இருக்கின்றனவா என உங்கள் ஜோதிடர் மூலம் தெரிந்துகொண்டு முடிவு செய்யவும்.
    
இந்த கட்டுரை சில ஜோதிட நூல்களின் அடிப்படையில் தயாரிக்கப் பட்டது. இதன் நோக்கம் ஆயில்யம், மூலம், கேட்டை, விசாகம், பூராடம் நக்ஷத்திரத்தில் பிறநத ஆண் பெண்களின் ஜாதகங்களை உடனடியாக ஒதுக்காமல், ஓர் நல்ல ஜோதிடரிடம் காண்பித்து முடிவு செய்யலாம் என்பதே. 
தோஷமுள்ள ஜாதகர்கள் பரிகாரம் செயது கொள்வது நலம். சுத்தமான ஜாதகங்களானாலும் எப்போதும் போல திருமணப்பொருத்தம் பார்த்த பிறகுதான் சேர்க்க வேண்டும்.

____________________________________________________________________________________
உங்களுக்கு வரப்போகும் மனைவியின் நட்சத்திரம் என்ன?
(ஜோதிட கட்டுரைகள்)
7 ஆம் அதிபதியின் நட்சத்திராதிபதி
7 ஆம் பாவத்தின் நட்சத்திராதிபதி
7 ஆம் அதிபதி, 7 ஆம் பாவம் இவைகள பார்க்கும் கிரகங்களின் நட்சத்திராதிபதி.
இதுவே உங்களுக்கு வரப்போகும் மனைவியின் நட்சத்திரமாக அமையும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்களுக்கு வரப்போகும் மனைவியின் இராசி என்ன?
(ஜோதிட கட்டுரைகள்)
1. ஜாதகரின் இராசி, நவாம்ச இராசி அல்ல அதற்கு 5 - 9 வது இராசி
2. ஜாதகரின் லக்கணம், நவாம்ச லக்கணம் அல்ல அதற்கு 5 - 9 வது இராசி
3. ஜாதகரின் இராசி, லக்கணத்திற்கு 7 வது இராசி அல்ல 7 - வது இராசிக்கு 5 - 9 வது இராசி
4. லக்கணாதிபதியின் பாகையையும், சுக்கிரனின் பாகையையும் கூட்டி வரும் இராசி அல்லது லக்கணாதிபதி, 7 ஆம் அதிபதி இருவரின் பாகையை கூட்டிவரும் இராசியே மனைவி (அ) கணவரின் இராசியாகும்.
--------------------------------------------------------------------------------------------------------

உங்களுக்கு வரப்போகும் மனைவியின் திசை என்ன?
(ஜோதிட கட்டுரைகள்)
7 ஆம் அதிபதி, சுக்கிரன் இருவரின் பாகையைக் கூட்டி வரும் ராசிக்குரிய நவாம்சம் சரமானால் - அதிக தூரத்திலும்,
ஸ்திரமானால் - அருகிலும் (20.கி.மீ)
உபயமானால் - 50 கி.மீக்குள்ளும், அமைவார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருமணம்:
திருமணம் என்ற சொல்லின் உட்பொருள் மணம். மணம் மலரினின்று தோன்றுவது. திரு என்பது இங்கு அடைமொழி. மணத்தை நுகர்வோன் மணமகன். மலராக மணமகள் குறிக்கப்படுவது மரபு.

தாலி:
தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர்.

அருகு-மணை எடுத்தல்:
தாலிகட்டிய பின்பு வயதும் ஒழுக்கமும் முதிர்ந்த பெரியோர்கள் மணமக்களுக்கு நல்வாழ்த்து கூறுவர். முற்காலத்தில் அருகம்புல்லை மணமக்கள் மீது தூவி ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் சூழ வாழ்வீர் என்று வாழ்த்துவர்.
"அறுகெடுப்பார் அயனும் அரியும்"என்பது திருவாசகம். இதன் உட்பொருள் அருகம்புல் படர்கின்ற இடம் எங்கும் வேரூன்றி நிலைபெறும். மழையின்றி மேல்பாகம் வரண்டாலும் மழைபெய்தால் மீண்டும் தழைத்து வளரும். இத்தகைய அருகுபோன்று வாழ்வின் இடையில் வருகின்ற வறுமை போன்ற துன்பச் சூழலில் அழிந்து போகாமல் ஆண்டவன் அருள்நீரால் எத்தகைய துன்பச் சூழலையும் தாங்கிப் புத்துணர்வுடன் தளிர்த்து மீண்டும் செழிப்புடன் வாழ்வாயாக என்பது இதன் கருத்தாகும்.
பிற்காலத்தில் அறுகு தூவி வாழ்த்துவதற்குப் பதில் மஞ்சள் கலந்த பச்சரிசியைத் தூவும் வழக்கம் வடநாட்டு மக்களின் தொடர்பால் வந்த பழக்கமாகும். அருகைத் தேடும் சிரமம் இல்லாமல் மஞ்சள் அரிசியைத் தூவுதல் சுலபமானதால் மக்கள் எளிதாக இதைப் பின்பற்றினர்.
ஆயினும் மணமக்கள்மீது மலர்தூவி வாழ்த்துவதே சிறப்பான முறையாகும்.

பிள்ளையார் வழிபாடு:
மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வாழை இலைமேல் வைத்து 'இடங்கொண்டருள்க இறைவா போற்றி!' எனவும் 'வடிவத்துறைக வள்ளலே போற்றி!' எனவும் 'அருளொளி தருக அப்பா போற்றி!' எனவும் கூறி மலர்தூவிக் கும்பிட்டுத் தேங்காய் உடைத்துப் பழம் வெற்றிலை பாக்குப் படைத்து நறும்புகை இட்டுக் கற்பூர ஒளிகாட்டிக் கீழ்க்கண்டவாறு போற்றுக:
"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றனனே"
-திருமூலர்.

முகூர்த்தக்கால் நடுதல்:
முகூர்த்தக்கால் திருமணப் பந்தலின் வடகிழக்கு மூலையில் நடவேண்டும். வடகிழக்கு மூலையை "ஈசானதிசை"எனப் போற்றுவர் பெரியோர். ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசை. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மணமக்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.

அரசாணிக்கால் நடுதல்:
மணவறைக்கு முன்னால் அரசாணிக்கால் நடுதல். அதாவது அரச மரத்தின் கிளையையும் பேய்க்கரும்பையும் சேர்த்து நடுதல் அரசாணிக்கால். இந்திரன் கற்பக மரமாகக் கொள்ளப்படுகிறான். மரங்களில் சிறந்தது அரசு. அதனால்தான் அதற்கு அரசு என்று பெயர் வைத்தனர். போகியாகிய இந்திரனை அதில் எழுந்தருளச் செய்து வழிபாடு செய்யப்படுகிறது. மணமக்கள் போகியாகிய இந்திரனைப்போல வாழவேண்டும். மற்றும் அரசமரத்தின் பழங்கள் தித்திப்பு உடையன. பேய்க்கரும்பு கசப்புடையது. நம் வாழ்வில் இன்பமும் துன்பமும், விருப்பான செயல்களும் வெறுப்பான செயல்களும் கலந்தே வருவன. இவை இரண்டையும் சமமாகக்கொண்டு வாழ்க்கையில் சோர்ந்துபோய்விடாமல் கடமைகளைப் பற்றின்றிச் செய்து காலத்தை வென்று நிமிர்ந்து வாழ்வீர்களாக என்று அர்த்தமாகும்.

மணமக்கள் கிழக்குநோக்கி அமர்தல்:
கிழக்கும் வடக்கும் உத்தம திசை என்று போற்றப்படுவன. உலக வாழ்விற்கு இரு கண்கள் போன்று ஞாயிறும் மதியும் தோன்றி உயர்ந்து பல உயிர்களுக்கும் நலம் பயப்பன போன்று உங்கள் வாழ்வு உயர்ந்து சிறந்து நின்று பல்லோருக்கும் பயன்பட நீங்கள் வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும். கிழக்கு இந்திரன் திசை. இந்திரன் போகி. அவனைப்போன்று மணமக்கள் போகத்தை நுகர்தல் வேண்டும் என்பதாகும்.

திருமண வேள்வி:
அத்தி, ஆல், அரசு, மா, பலா முதலிய மரங்களின் உலர்ந்த சுள்ளிகள் கொண்டு தீ வளர்த்துப் பொங்கழல் வண்ணனாகிய இறைவனை எழுந்தருளச் செய்து வணங்கி வாழ்க்கை வளம் பெற வேண்டுதல் வேண்டும். மேற்கண்ட சுள்ளிகளுக்குரிய மரங்கள் தம் வாழ்நாள் முழுவதும் பல்லோருக்கும் பயன்பட்டுத் தாம் எரிந்து மறையும்போதுகூட தெய்வச் சுடரை எழுப்பி மக்கள் வாழத் திருமணத்தைக் கூட்டி வைப்பதுபோல் மணமக்களின் வாழ்க்கை தங்கள் சுயநலத்திற்காக மட்டுமின்றிப் பல்லோருக்கும் பயன்பட்டு சுழல் ஓம்பலுக்கும் பயன்படும் குச்சிகள் போல இறுதியில் இறை அருளுடன் ஒன்றி நிறைவு எய்துவதாக வேண்டும் என்பது கருத்தாகும்.

பாலிகை இடுதல்:
நவதானியங்களைக் கொண்டு பாலிகையிட்டு வளர்த்து மணவறையின் முன்பு வைப்பது பாலிகை இடுதல் எனப்படும். பாலிகை எட்டு மங்கலப்பொருள்களில் ஒன்று. அதில் நவ தானியங்களும் நன்கு வளர்ந்து நாட்டுக்கு நலம் பயப்பது போல உங்கள் வாழ்வு சிறந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நலன் பயப்பதாக இருத்தல் வேண்டும் என்பது கருத்தாகும்.

ஆறு குணங்கள்:
1. உண்மை உரைத்தல்.
2. தர்மம் செய்தல்.
3. சோம்பல் தவிர்த்தல்.
4. பொறாமை விடுதல்.
5. பொறுமை கொளல்.
6. தைரியம் பேணல்.

பதினாறு பேறுகள்:
1. நன்மக்கள்.
2. செல்வம்.
3. அழகு.
4. நோயின்மை.
5. இளமை.
6. கல்வி.
7. வாழ்நாள்.
8. நல்வினை.
9. பெருமை.
10. துணிவு.
11. வலிமை.
12. வெற்றி.
13. நல்லுணர்வு.
14. புகழ்.
15. நுகர்ச்சி.
16. நல்ல நண்பன்.

மஞ்சள், மருதாணியின் சிறப்பு:
1. குளிக்கும்போது தாலிச்சரட்டில் மஞ்சள் பூசுவதால் கழுத்து மற்றும் மார்புப்பகுதியில் மஞ்சள்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
2. மருதாணி மூளையின் செயல்திறனை மேம்படுத்தும். எனவே அடிக்கடி மருதாணி இட்டுக்கொள்ளலாம்.
3. மஞ்சளுடன் மருதாணியும் கலந்து உள்ளங்கையில் பூசுவதால் கருச்சிதைவு ஏற்படாது.
4. கை, கால்களில் மஞ்சள் பூசுவதால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை வராது.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்:
இது மிகத் தொன்மையான பழக்கமாகும். கல்லானது எவ்வளவு பாரத்தையும் தாங்கும். ஆனால் தன் சக்திக்கு மீறினால் பிளந்து போகுமே தவிர வளைந்து கொடுக்காது. இத்தகைய கல்லைப்போல் உன் வாழ்க்கையில் உன் கற்பிற்கு சோதனை வருமானாலும் உறுதியுடன் இருந்து உன் கற்பைக் காத்துக்கொள் என்பதே இதன் பொருள்.
அருந்ததி காணக்கிடைப்பதற்கரிய அருமையான நட்சத்திரம். கற்புடைய பெண் அருந்ததியைப் போல் போற்றப்படுவாள் என்பதே இதன் உட்பொருளாகும்.

சங்குமோதிரம் எடுத்தலின் ரகசியம்:
மணவறை முன் உள்ள நீர் நிறைந்த மண்பானையில் சங்கும் மோதிரமும் இட்டு மணமக்களை எடுக்கச் சொல்வார்கள் பெரியவர்கள். அப்போது மணமகன் பொன்னால் ஆன மோதிரத்தையும் மணமகள் பொன் சங்கையும் எடுக்கவேண்டும். இல்வாழ்க்கைக்கு இன்றியமையாத பொன்னை மணமகன் தேடுதல் வேண்டும். மக்களைப் பாலூட்டி வளர்க்கும் பாங்கினை மணமகள் மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது இதன் உட்பொருள். நீர் நிறைந்த மட்பானை நீரால் சூழப்பட்ட இப்பூவுலகைக் குறிப்பதாகும்.

வெற்றிலைபாக்கு மாற்றுதல்:
மணமகனின் தந்தையும் மணமகளின் தந்தையும் கிழக்கு மேற்காக அமர்ந்து வெற்றிலை பாக்கு வைத்து மூன்று தலைமுறையினரைச் சொல்லி இன்னார் மகளை இன்னார் மகனுக்குக் கொடுக்கின்றோம் என இருவீட்டாரும் கூறி ஏழு பாக்கும் ஏழு வெற்றிலையும் வைத்து மாற்றுதல். எழுவகைப் பிறப்பிலும் இன்று சொன்ன சொல் தவறுவதில்லை என்று பலர் முன்னிலையில் உறுதியளிப்பதாகும்.

உறவின்முறை விளக்கம்:
கணவன், கொழுநன்:
கண் அவன். பெண்ணுக்கு கண் போன்றவன் என்பதாகும். நம்மை நல்வழி நடத்திச் செல்லும் கண்ணைப் போல் பெண்ணை நல்வழிப்படுத்திச் செல்லும் கட்டுப்பாடு உடையவன் கணவன் என்பதாகும்.
கொழுநன் பெண்ணுக்குக் கொழு கொம்பு போன்றவன் என்பதாகும். கொடி படர்ந்து உயர்வதற்குக் கொழு கொம்பு எப்படி இன்றியமையாததோ அதே போல் பெண்மைக்குப் பாதுகாவலுக்குரிய ஆண்மகன் என்பதாகும்.

மனைவி:
மனைவி, துணைவி, இல்லாள் இச்சொற்கள் இல்லறநெறி காப்பவள் என்பதைக் குறிப்பிடுவனவாகும். மனைக்கு உரியவள் மனைவி என்பதாகும்.

கொழுந்தனார்:
கொழுநன் அன்னார்= கொழுந்தனார். கொழுந்தனார் கணவனின் தம்பியைக் குறிப்பது. உன் கண்ணைப்போல் இக்குடும்பத்தில் உரிமை உடையவன் என்பதாகும்.

விளக்கு வகைகள்:
1. வெண்கல விளக்கு ஏற்றினால்- பாபம் போகும்.
2. இரும்பு விளக்கு ஏற்றினால்- அபமிருத்யுவைப் போக்கும்.
3. மண்விளக்கு ஏற்றினால்- வீரிய விருத்தியை அளிக்கும்.

குறிப்பு: மண்ணால் செய்யப்பட்ட அகல் அல்லது வெள்ளி, பஞ்சலோகத்தால் ஆன விளக்குகள் பூஜைக்கு மிகவும் உகந்ததாகும். பஞ்சலோகமானது தங்கம், வெள்ளி, பித்தளை, இரும்பு, செம்பு ஆகும். ஐம்பொன் என்றும் சொல்வதுண்டு.

தீபங்களும் திசைகளும்:
1. கிழக்குத்திசை: கிழக்குத் திசையில் தீபம் ஏற்றி வழிபடத் துன்பம் நீங்கும். கிரகத்தின் பீடை அகலும்.
2. மேற்குத்திசை: மேற்குத் திசையில் தீபம் ஏற்றி வழிபடக் கடன் தொல்லை, சனிபீடை, கிரக தோஷம், பங்காளிப் பகை நீங்கும்.
3. வடக்குத் திசை: வடக்குத் திசையில் தீபம் ஏற்றி வழிபடத் திரவியம், செல்வம், மங்களம் உண்டாகும். திருமணத் தடை நீங்கும். சுப காரியம், கல்வி சம்பந்தமான தடைகளும் நீங்கும். சர்வ மங்களமும் உண்டாகும்.
4. தெற்குத்திசை: தெற்குத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது!

முகங்களுக்குரிய பலன்கள்:
1. விளக்கில் ஒருமுகம் ஏறுவதால்- மத்திம பலன்.
2. இரு முகங்கள் ஏற்றுவதால்- குடும்ப ஒற்றுமை பெருகும்.
3. மூன்று முகங்கள் ஏற்றுவதால்- புத்திர சுகம் தரும்.
4. நான்கு முகங்கள் ஏற்றுவதால்- பசு, பூமி, பாக்கியம் தரும்.
5. ஐந்து முகங்கள் ஏற்றுவதால்- செல்வத்தைப் பெருக்கும்; சகல சௌபாக்கியத்தையும் நல்கும்.
குறிப்பு: விசேட காலங்களில் ஐந்து முகங்களிலும் விளக்கேற்ற வேண்டும்.

தீப வழிபாடு:
அதிகாலை நாலரை மணிமுதல் ஆறுமணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் மாலை ஐந்தரை மணிமுதல் ஆறுமணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளங்களும் பலன்களும் நிச்சயம் கிடைக்கும்.

புரோகிதர், புரோகிதம்:
புரோகிதர் என்றால் முன் நின்று நன்மையைச் செய்கின்றவர் என்று அர்த்தம். புரோ= முன், கிதம்= நன்மை.

ஆபரணங்களால் ஏற்படும் நன்மைகள்:
தங்கம், வெள்ளி நகைகள் அணிவதால் உடல் நலம் சிறக்கும். தங்கம் உடலுக்குச் சூட்டையும் நரம்புகளுக்கு சக்தியையும் கொடுக்கின்றது. தங்கத்துடன் செம்பு சேர்த்து ஆபரணங்கள் உருவாக்கப்படுகின்றன. செம்பு சூரியக் கதிர்களை இழுத்து உடலில் படவைக்கின்றது. இதனால் உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக அமையும். ஆயுர்வேத முறைப்படி இரத்த சுத்தி, மூளைவளர்ச்சியை அதிகப்படுத்துதல், உடலுக்கு நிறம் கிடைத்தல் ஆகியவை தங்கத்தால் கிடைக்கும். வலது கைவிரலில் மோதிரம் அணிந்து சாப்பிடும்பொழுது தங்கத்தின் மிகச்சிறிய பகுதி உடலுக்குள் செல்கின்றது. இதனால் உடல் ஆரோக்கியம் பெருகும். வெள்ளி நகைகளால் இரத்த ஓட்டம் சிறப்பாக அமையும்.

ஆலத்தி எடுத்தல்:
* மங்கள மங்கையர் மணமானவுடன் மஞ்சள் நீர் உள்ள தட்டை மணமக்கள் முன் சுற்றி வாழ்த்துவர்.
* மஞ்சள் நச்சுப் பொருட்களை மாற்றவல்லது. மஞ்சள் திருநீறு இட்டு ஆலத்தி எடுத்து வாழ்த்துவது நச்சுத்தன்மையை நீக்கும்.
* மஞ்சள் நீர் போன்று உங்கள் வாழ்வில் வலம் வரும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகுவதாக என்று அர்த்தம்.

வாழ்வில் முன்னேற பதினெட்டுப் படிகள்:
1. வாழ்க்கை ஒரு சவால்---அதைச் சமாளி.
2. வாழ்க்கை ஒரு பரிசு---அதைப் பெற்றுக்கொள்.
3. வாழ்க்கை ஒரு சாகசம்---அதில் துணிவு காட்டு.
4. வாழ்க்கை ஒரு சோகம்---அதை அடைந்துவிடு.
5. வாழ்க்கை ஒரு கடமை---அதை முடித்துவிடு.
6. வாழ்க்கை ஒரு விளையாட்டு---அதில் பங்கு கொள்.
7. வாழ்க்கை ஒரு துன்பம்---அதை எதிர்கொள்.
8. வாழ்க்கை ஒரு புதிர்---அதற்கு விடை காண்.
9. வாழ்க்கை ஒரு பாடல்---அதைப் பாடிவிடு.
10. வாழ்க்கை ஒரு வாய்ப்பு---அதைப் பயன்படுத்து.
11. வாழ்க்கை ஒரு பயணம்---அதைக் கடந்துவிடு.
12. வாழ்க்கை ஒரு வாக்குறுதி---அதைக் காப்பாற்று.
13. வாழ்க்கை ஒரு காதல்---அதை அனுபவி.
14. வாழ்க்கை ஒரு வனப்பு---அதன் புகழ்பாடு.
15. வாழ்க்கை ஒரு போராட்டம்---அதனுடன் போராடு.
16. வாழ்க்கை ஒரு குழப்பம்---அதைத் தீர்த்துவிடு.
17. வாழ்க்கை ஒரு இலக்கு---அதைத் தொடர்ந்துவிடு.
18. வாழ்க்கை ஒரு தெய்வீகம்---அதைப் புரிந்துகொள்.
____________________________________________________________________________________


_____________________________________________________________
பணீரெண்டாம் பொருத்தம்


பத்து பொருத்தங்களைப் பற்றி கேள்விபட்டுள்ளோம். அது என்ன சார் பணீரெண்டாம் பொருத்தம் என்கீறீர்களா...
ஒருவருடைய வாழ்க்கை மிகச் சிறந்த முறையில் அமைய வேண்டுமானால் அவருக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை நடந்த சிறந்த வாழ்க்கைத் துணை தேவைப்படுகின்றது. பெண்ணுக்கு 21 வயதுக்குள் ஆணுக்கு 27 வயதுக்குள் திருமணம் நடந்து விடுமேயானால் அவர்களது இல்லற வாழ்க்கையின் பின் பாதி அவர்களது மகப்பேறுகளால் காப்பாற்றப்படும் சூழ்நிலைகள் உருவாகி மகிழ்ச்சியை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படி எல்லோருடைய திருமணங்களும் அவர்கள் விருப்படியே நடந்து விடுகின்றனவா என்றால் ‘இல்லை’ என்றே கூற வேண்டியுள்ளது.
ஒருவரது திருமணம் நிச்சியிக்கப்படும்போது ஆண் பெண் இருவர் ஜாதக ரீதியாகவும் திருமண பொருத்த விஷயத்தில் நான்கு இடங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் தரப்படுகின்றது. களத்திரஸ்தானம் எனப்படும் 7ம் இடம், ஆயுள்ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் எனப்படும்.
8ம் இடம், புத்திரஸ்தானம் எனப்படும் 5ம் இடம் மற்றும் குடும்பஸ்தானம் எனப்படும் 2ம் இடம். பொதுவாக எல்லா ஜோதிடர்களும் இந்த நான்கு ஸ்தானங்களுக்கு மிகவும் முக்யத்துவம் கொடுத்து ஜாதகப் பொருத்தங்களைப் பார்த்து தோஷ சாம்யங்களை நிர்ணயம் செய்து முடிவு எடுக்கின்றார்கள்.
பெரும்பாலான ஜாதகர்கள் நல்வாழ்க்கைத் தொடங்கினாலும் சிலரின் அன்னோன்யம், மகிழ்ச்சி இன்மை அவர்களது குடுமப வாழ்க்கையை நரகமாகவும் ஆக்கிவிடுகின்றது.
மேற்சொன்ன நான்கு இடங்களின் பொருத்தம் இருப்பதைத் தவிர மிகவும் முக்யமாக பார்க்கப்பட வேண்டிய ஸ்தானம் 12ம் இடம்.
இந்த இடம் ஸயனஸ்தானம்,மோஷ ஸ்தானம், விரயஸ்தானம் என்று பலவாறாகவும் கூறப்படுகின்றது.பொதுவாக களத்திர அன்னோன்யம் என்பதே
ஸயன அன்னோன்யத்தில் அடிப்படையில் அமைந்த ஒன்று என்றே கூறலாம். ஸயன அன்னோன்யம் இல்லாத தம்பதியர்களிடம் களத்திர அன்னோன்யத்தை எதிர்பார்க்க இயலுமா என்பதை பெரும்பாலான ஜோதிடர்கள் கருத்தில் கொள்வதில்லை. சொல்லப்போனால் திருமணப்பொருத்தம் பார்க்கும் போது முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் சயன அன்னோன்ய பாவமான 12ம் இடமே. சயனஸ்தானம் சரியில்லாதவர்களுக்கு களத்திர அன்னோன்யம் இருக்காது. களத்திர அன்னோன்யம் இல்லாத போது புத்திர சௌக்யமும் (5ம் பாவம்) சரியாக இருக்காது. புத்திர ஸ்தானம் இல்லாத போது குடும்பம் (2ம் பாவம்) எப்படி உருவாகும் எனவே இனிமையான இல்லற வாழ்க்கை அமைய சயனஸ்தானம் சரியாக இருந்தால்தான் மற்ற பாவங்களின் பலங்களும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாக அமையும்.எனவே 2,5,7,8 ம் இடங்களில் தோஷ சாம்யம் இருந்தாலும் 12ம் இடத்தின் பொருத்த விஷயம் இருவர் ஜாதக ரீதியாகவும் சரியாக இல்லை என்றால் அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சி இன்றியே தான் இருக்கும்.
ஆக அன்னோன்யமான.. தாம்பத்ய வாழ்க்கையை நிர்ணயிக்க இதன் அடிப்படையான ஸயன பாவத்தை (12ம் இடம்) ஆராயாமல் மற்ற பாவங்களைப் பார்த்து முடிவு செய்யும் ஜோதிட அன்பர்கள் சற்று சிந்திக்க வேண்டிய விஷயம் இது என்று புரிந்துகொண்டால் சரி..
களத்திர அன்னோன்யத்தை எந்த எந்த கிரகங்கள் முக்கியமாக பாதிக்கின்றன என்று பார்க்கலாம்.
12ம் இடமான சயனஸ்தானத்தில் பாபகிரகங்களான செவ்வாய், சூரியன், சனி, ராகு, கேது இருப்பது.
சயனஸ்தானத்துக்கு மேற்சொன்ன பாபிகளீன் பார்வை இருப்பது.
களத்திர ஸ்தானம் என்ப்படுன் 7ம் இடத்தில் பாபகிரகங்களான செவ்வாய், சூரியன், சனி இருக்கும் நிலை.
7ம் இடத்துக்கு செவ்வாய், சூரியன் சனி பார்வை இருக்கும் நிலை.
8ம் இடத்தில் பெண்ணுக்கு செவ்வாய்,ராகு இருக்கும் நிலை.
பூர்வ புன்ய ஸ்தானாதிபதி (5க்குடைய கிரகம்) களத்திரஸ்தானம் (7ம் இடம்) அடையும் நிலை. இதே போல் 7க்குடைய கிரகம் 5ம் இடம் அடையும் நிலை.
குடும்பஸ்தானம் எனப்படும் 2ம் இடத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது இருக்கும் நிலை.
இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு அன்னோன்யமான வாழ்க்கை பொதுவாக இருப்பதில்லை என்றாலும் இதே போன்ற கிரக நிலை இருவர் ஜாதக ரீதியாகவும் அமைந்துவிட்டால் அன்னோன்யமான தாம்பத்திய வாழ்க்கை நிச்சியம் இருக்கும் என்பது உண்மை. “தோஷ சாம்யாத் தம்பதி பாக்யவான்” என்ற ஜோதிட சாஸ்திர வாக்யத்தின் படி தம்பதிகள் இருவர் ஜாதகத்திலும் தோஷங்களை ஏற்படுத்தும் கிரக நிலைகள் ஒத்துப்போனால் அந்த தம்பதிகள் இணைபிரியாத தம்பதிகளாகவே என்றும் இருப்பர்கள் என்பதும் உண்மை.சகல நன்மைகளையும் வாழ்க்கையில் அனுபவிப்பார்கள் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.
அருகில் இருந்த என் நண்பர் சொன்னார், எனக்கு இந்த கவலை எல்லாம் இல்லை...
ஏன்... என்றேன். எனக்குதான் திருமணமே ஆகவில்லையே... என்றார். அதற்கும் இந்த 12ம் பாவம் தான் காரணம். என்றேன். எப்படி சொல்கின்றீர்கள்... என்னுடைய ஜாதகம் சுத்தமான தோஷமே இல்லாத ஜாதகம் என்று அல்லவா நினைத்துக் கொண்டும் இருக்கின்றேன். என்றார்.
12ம் இடத்தில் உமது ஜாதகத்தில் கேது பகவான் இருக்கின்றார். சன்பாயோகம் உடைய நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டுமா...
இந்த கருத்துகள் அவரது மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்த தொடங்கியதை பார்த்த அடியேனது மனம் சற்று கனக்கத்தான் செய்தது. 

---------------
திருமண தோஷம் -- ராகு கேது


மூன்றாம் வீட்டில் ராகு இருந்தால் ஒன்பதாம் வீட்டில் கேது இருப்பார். மூன்றாம் வீட்டில் கேது இருந்தால் ஒன்பதாவது வீட்டில் ராகு இருப்பார் இப்படி இருந்தால் கடுமையான பித்ரு தோஷத்தை ஏற்படுத்தும்.
பாக்கிய ஸ்தானத்தில் ஒரு தீயகிரகம் இருந்தால் பித்ரு வழியில் அதாவது தந்தை வழியிலும் பிரச்சனையை திருமணத்தில் ஏற்படுத்தும் அமைப்பாக இருக்கிறது. 
உங்களின் தந்தை கெட்டுவிடுவார் அல்லது தந்தை இறந்துவிடுவார். தந்தை மூலம் உங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது. தானே முயன்று திருமணத்தை நடத்துவது என்பது எவ்வளவு கடினமான ஒன்றாக தானே இருக்கும் அதனால் இதனை சொல்லிருப்பார்கள். 
இந்த தோஷம் இருந்தால் ஒன்று உங்களின் தந்தையை கெடுக்கும் அப்படி இல்லை என்றால் உங்களின் எந்த செயலுக்கும் தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் நீங்கள் எந்த முயற்சி செய்தாலும் அதில தடை ஏற்பட்டு மனதில் எரிச்சலை ஏற்படுத்தும் அதனால் திருமண வாழ்வில் பாக்கிய ஸ்தானம் என சொல்லக்கூடிய ஒன்பதாவது வீடும் கெடுதல் அடைதல் கூடாது.
நமக்கு இருக்கும் பாக்கியத்தை காட்டக்கூடிய வீடாக இருப்பதால் திருமண வாழ்வும் நமக்கு கிடைத்த பாக்கியம் தானே எத்தனையே பேர் திருமண வாழ்வு கிடைக்கவில்லை என்று ஏங்குகிறார்கள் அல்லது திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துவிடுகிறார்கள் அதனால் பாக்கியஸ்தானம் எனும் ஒன்பதாவது வீடும் திருமண வாழ்வில் முக்கியமாக பார்க்க வேண்டிய ஒன்று.

No comments:

Post a Comment