jaga flash news

Saturday 30 March 2013

கிராஜுவிட்டி தொகையை எவ்வாறு கணக்கிடுவது?


கிராஜுவிட்டி தொகையை எவ்வாறு கணக்கிடுவது?


How Calculate Gratuity
கிராஜுவிட்டி = கடைசியாக வாங்கிய சம்பளம் x 15/26 x பணியாற்றிய மொத்த ஆண்டுகள். இவ்வாறு கணக்கிட்டு அதில் கிடைக்கும் தொகை கிராஜுவிட்டியாக வழங்கப்படும். அதாவது 10000x15/26x10 = Rs 57,692 வழங்கப்படும்.
ஒரு சில காரணங்களுக்காக 5 வருடம் வேலை செய்த தொழிலாளிக்கு கிராஜுவிட்டி தொகையை வழங்க மறுக்கலாம். ஒருவேளை அந்த தொழிலாளி நிறுவனத்தின் சொத்துக்களுக்கோ அல்லது அங்குள்ள பொருள்களுக்கோ ஏதாவது சேதத்தை ஏற்படுத்தினால் அதைக் காரணம் காட்டி அவருக்கு கிராஜுவிட்டித் தொகைய வழங்காமல் இருக்கலாம்.
ஆகவே இந்த கிராஜுவிட்டித் தொகைய ஒரு தொழிலாளி பெற வேண்டும் என்றால் அவர் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 5 ஆண்டுகளாவது தொடர்ந்து வேலை செய்திருக்க வேண்டும். ஆனால் ஒரு வேளை 5 ஆண்டுகளுக்குள் ஒருவர் இறந்துவிட்டால் அவர் அந்த நிறுவனத்தில் 1 ஆண்டு முழுமையாக வேலை செய்திருந்தாலும் அவருக்கு அந்த கிராஜுவிட்டித் தொகை வழங்கப்படும். எனவே இந்த கிராஜுவிட்டித் தொகையை தொழிலாளிகளின் ஒரு வரப்பிரசாதம் என்றே அழைக்கலாம்.

Friday 29 March 2013

வாழ்க்கை

வாழ்க்கையில் உயர வேண்டுமானால் உழைப்பு மிக அவசியம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கடுமையாக உழைப்பது மட்டுமே உயர்வுக்கு உத்திரவாதமாகுமா என்றால் இல்லை என்பதே உண்மை. 
உயர வைக்கும் உழைப்பு எப்படி இருக்க வேண்டும்?

*செய்யும் செயல் நமது அறிவுக்கும் திறமைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.

*என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், கிடைக்கக்கூடிய பலன் என்ன, அது உழைப்பிற்குப் போதுமானது தானா என்பதை எப்போதும் தெளிவாக அறிந்திருங்கள்.

*நாம் செயல்புரிகிற விதம் கச்சிதமானது தானா, மற்றவர்கள் எப்படிச் செய்கிறார்கள், நம்மை விட அவர்கள் செயல்புரிகிற விதம் சிறந்ததாக உள்ளதா என்பதை விருப்பு வெறுப்பில்லாமல் பார்க்க வேண்டும்.

*செய்யும் செயலில் ஈடுபாடும், முழுக் கவனமும் இருக்க வேண்டும்.

*நம் தொழில் சம்பந்தமாக புதிது புதிதாக வரும் மாற்றங்களை கண்டிப்பாக கவனித்து வர வேண்டும்.

*சரியாகச் செய்தும், முயன்றும் போதிய பலன் தராத தொழிலை விட்டுவிடத் தெரிய வேண்டும். 'செண்டிமெண்டல்' காரணங்களுக்காக அதைத் தொடர்ந்து செய்வது முட்டாள்தனம்.

எவ்வளவோ பாடுபட்டு உழைப்பவர்களை நாம் பார்த்திருக்கிறோம். பலர் எத்தனை காலமாக அப்படி உழைத்தாலும் துவக்கத்தில் இருந்தது போலவே பலகால உழைப்பிற்குப் பின்பும் இருக்கிறார்கள். உழைப்பு உயர்வுக்கு உத்திரவாதமென்றால் அவர்கள் எத்தனையோ உயர்ந்திருக்க வேண்டுமே, ஏன் அவர்கள் அவ்வாறு உயரவில்லை? காரணம் அவர்கள் செக்கு மாடாகத் தான் உழைத்திருக்கிறார்கள்.

செக்குமாடு ஒரு நாள் நடக்கும் தூரத்தைக் கணக்கிட்டால் அது மைல் கணக்கில் இருக்கும். ஆனால் அது ஒரே இடத்தில் தானே சுற்றி நடக்கிறது. அப்படித்தான் பலருடைய உழைப்பும் இருக்கிறது. இந்த செக்குமாடு உழைப்பில் சிந்தனை இல்லை. நாளுக்கு நாள் வித்தியாசம் இல்லை. புதியதாய் முயற்சிகள் இல்லை. மாற்று வழிகள் குறித்த பிரக்ஞை இல்லை. இது போன்ற உழைப்பு உங்கள் நாட்களை நகர்த்தலாம், ஆனால் வாழ்க்கையை நகர்த்தாது.

Monday 25 March 2013

குங்கும பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாக பிறக்குமா?


குங்கும பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாக பிறக்குமா?



குழந்தைக்கு நிறம் தரும் சக்தி, குங்குமப் பூவிடம் இல்லை. இதுதான் உண்மை. ஒருசிலருக்கு பாலின் வாடை பிடிக்காது. இப்படிப்பட்டவர்களுக்கு மசக்கை நேரத்தில், இன்னும் அதிகமாக வயிற்றைப் புரட்டும். அதனால்தான் மாறுதலான மணம்-சுவைக்காக குங்குமப்பூவை பாலில் கரைத்துக் குடிக்கும் பழக்கம் வந்தது.
அதையும் குடிக்கமறுக்கும் பெண்களுக்கு என்ன செய்வது? அதனால்தான் குழந்தையின் கலர் என்ற சொக்கவைக்கும் வார்த்தையை சொல்லி, அந்த காலத்தில் குடிக்க வைத்திருப்பார்கள் போலும். மற்றபடி, குழந்தைகளின் நிறத்துக்கு காரணம் பரம்பரை மரபணுக்கள்தான்! கர்ப்பம் உறுதியானதுமே டாக்டர்கள் பட்டை பட்டையாக இரும்பு சத்து மாத்திரைகளை அள்ளிக் கொடுத்து தொடர்ந்து சாப்பிட சொல்கிறார்கள்.
ஆனால், `இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்டால் குழந்தை கறுப்பாக பிறக்கும்’ என்கிறார்களே? கர்ப்ப காலம் பற்றி சொல்லப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்று. அதை நம்ப வேண்டாம். ரத்த விருத்திக்காக கொடுக்கப்படுவதுதான், இரும்பு சத்து மாத்திரைகள். இதனால் கர்ப்பிணிகளுக்கு போலிக் ஆசிட் பற்றாக்குறையால் ஏற்படும் ரத்தசோகை நோயை, முளையிலேயே கிள்ளி எறிய முடியும்.
ஒரு கர்ப்பிணி சரிவிகித உணவுகளை தவறாமல் சாப்பிடுபவராக இருந்தாலும், மேற்கொண்டு டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரை-மருந்துகளையும் கட்டாயம் சாப்பிட வேண்டும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் தலைவலி, காய்ச்சல் போன்ற தொல்லைகளுக்கு வழக்கமான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாமா? கூடாதா?
பெரும்பாலான பெண்கள் கர்ப்பகாலத்தில் வரும் காய்ச்சல், தலைவலிக்குகூட, `வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு வந்துவிடுமோ?’ என்கிற பயத்தில், மருந்துகளை சாப்பிட மறுக்கிறார்கள். மருந்து கடைகளில் கேட்டு எதையாவது வாங்கி விழுங்குவதுதான் தவறேதவிர, டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதில் ஒரு தவறும் இல்லை.
காய்ச்சலை சரிப்படுத்த கர்ப்பிணி சாப்பிடும் மருந்தால் கருவுக்கு பாதிப்பு வராது. ஆனால், மருந்து சாப்பிடாமல் காய்ச்சலை வளரவிடும்போதுதான் அந்தக் காய்ச்சல் கிருமிகளால் கருவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். கர்ப்பகாலத்தில் என்ன பிரச்னை என்றாலும் உங்கள் உடல்நிலையை நன்கு பரிசோதித்த பிறகே மருத்துவர்கள் எந்த மாத்திரையும் கொடுப்பார்கள். ஆகவே தேவையற்ற பயம் வேண்டாம்.

நெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா?


நெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா?


நெய் உடலுக்கு ஆரோக்கியமற்றது என்று தான் அனைவரும் நினைக்கின்றோம். ஆனால் அது அளவுக்கு அதிகமானால் தானே தவிர, குறைவான அளவில் எடுத்தால் அல்ல.
ஏனெனில் சுத்தமான நெய்யில் ஃபேட்டி ஆசிட் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகள் 89 சதவிகிதம் குறைவாக உள்ளது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
வீட்டிலேயே வெண்ணெயை உருக்கி நெய்யாக மாற்றுவது தான், சுத்தமான நெய்.
இதய நோய் மற்றும் அதிக எடை இல்லாமல் இருப்பவர்கள், சுத்தமான நெய்யை சாப்பிடலாம்.
அதுவே உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், முற்றிலும் நெய்யை தவிர்க்க வேண்டும்.
மேலும் ஒரு நாளைக்கு ஒருவர் 10-15 கிராம் நெய் தான், உடலில் சேர்க்க வேண்டும்.
நெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா?
தொடர்ச்சியாக நெய்யை உடலில் சேர்த்து வந்தால், உடல் மற்றும் மனம் உறுதியடையும், மற்றும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இதை சாப்பிட்டால் உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். அதிலும் பார்வை, தசைகள் போன்றவை ஆரோக்கியமாக இருக்கும்.
கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு, நெய் ஒரு சிறந்த வழி. ஏனெனில் அவர்கள் வெண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயமின்றி சாப்பிடலாம். வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைந்துவிடும்.
சுத்தமான நெய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து சேகரிக்க வேண்டும் என்பதில்லை.
நெய்யானது உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, தினமும் உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.
நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும், கரையக்கூடிய கொழுப்புகள். ஆகவே தான் இது உடல் எடையை அதிகரிக்காது என்று சொல்கின்றனர் நிபுணர்கள். சொல்லப்போனால் நெய்யில் செறிவூட்டப்பெற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளதால், இது உடலில் வைட்டமின்களை உறிஞ்சிக் கொள்கிறது.
சமையலில் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை விட நெய் மிகவும் சிறந்தது. ஏனெனில் அந்த எண்ணெய்கள் அதிக வெப்பத்தில் கருகிவிடும்.
ஆனால் நெய்யானது அவ்வாறு இல்லை, அது எவ்வளவு வெப்பத்திலும் வாசனையுடன் இருக்குமே தவிர, கருகாமல் இருக்கும்.
உடலுக்கு ஒரு சில கொழுப்புகளானது மிகவும் அவசியமானது. ஏனெனில் அந்த கொழுப்புகள் தான் செரிமான மண்டலத்தில் இருந்து வெளிவரும் ஆசிட், குடல் வாலை பாதிக்காமல் தடுக்கிறது. மேலும் இது நரம்பு, சருமம் மற்றும் மூளையை வலுவாக்குகிறது.

LPG க‌‌சிவா? 24 மணி நேர தொலைபேசி வசதி:



FILE
சமைய‌ல் எ‌ரிவாயு ‌சி‌லி‌ண்ட‌ரி‌ல் க‌சிவஏ‌ற்ப‌ட்டா‌ல் அதனை உடனே ச‌ரி செ‌ய்ய தமிழகம் மற்றும் புதுவை வாடிக்கையாளர்களு‌க்காக இ‌ந்‌திய‌னஆ‌யி‌ல் கா‌ர்‌ப்பரேஷ‌ன் 24 மணி நேர இலவச தொலைபேசி வசதியை அ‌றிமுக‌ப்படு‌த்‌தியு‌‌ள்ளது. 

வாடிக்கையாளர்கள் 1800-425-247-247 என்ற எண்ணிற்கு அழைத்து புகாரை பதிவு செய்யலாம். இந்த தொலைபேசி வேலை நாட்களில் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை செயல்படும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 24 மணிநேரமும் இயங்கும் என்பதே இதன் சிறப்பு அம்சமாகும்.

தமிழ்நாடு முழுவதும் 80 லட்சம் கே‌ஸ் இணைப்புகள் உள்ளன. 475 ஏஜென்சிகளின் கீழ் இந்த வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். தற்போது அவசர தேவைக்கு 3 செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டிஸ்ட்ரிபியூட்டர்கள் கையாளுகிறார்கள். அலுவலக நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவசர உதவிக்கு புகார் செய்ய முடியாத நிலை இதுவரையில் இருந்தது. இனி இந்த நிலை மாற்றப்படும் என்று எதிர்பார்கப்படுகிறது.

கேஸ் கசிவு பற்றி இரவு நேரத்தில் புகார் செய்தாலும் அந்த பகுதியின் மெக்கானிக்கிடம் உடனடியாக தகவல் கொடுக்கப்படும். அவர் வந்து பார்த்ததன் அடையாளமாக உடனடியாக கால்சென்டருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

இந்த புதிய இலவச தொலைபேசி வசதியை இந்தியன் ஆயில் கா‌ர்‌ப்பரேஷ‌ன் நிறுவன செயல் இயக்குனர் வி.கே. ஜெயச்சந்திரன் இன்று மாலையில் தொடங்கி வைக்க உள்ளார்.

Wednesday 20 March 2013

எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?


சுய விவரங்கள்:

உங்களை பற்றிய முழுமையான சுய விவரங்களை பகிரவே தேவையில்லை. சிலர் வீட்டு முகவரி முதல், செல்போனின் எண்கள் வரையிலும் ஃபேஸ்புக்கில் போட்டிருப்பார்கள். சிலர் அவற்றை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. எதை ஷேர் செய்யவேண்டும் என்பதில் கவனம்செலுத்துங்கள்.

இருப்பிடம்:

ஃபேஸ்புக்கில் ஒரு சிறப்பம்சம் உள்ளது. அதாவது தற்பொழுது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை 'சுவற்றில்' எழுதும்பொழுது குறிப்பிடமுடியும். அதுவே சில நேரங்களில் சிரமங்களை உருவாக்கும் என்பதை நினைவில்கொள்க!

புகைப்படங்கள்:

ஃபேஸ்புக் பக்கங்களில் உங்களுடைய புகைப்படங்களை பயன்படுத்துவதில் கவனம்தேவை. அதிலும் பெண்கள் என்றால் அதிக கவனம்தேவை. உங்களால் வெளியிடப்படும் புகைப்படங்கள் சில தீயவர்களால் தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத சிரமத்தை தவிர்க்க, தெரிந்த நண்பர்கள், ஃபேஸ்புக் பிரைவசி ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.

குடும்ப படங்கள்:

உங்களுடைய குடும்ப படங்கள், ஃபேஸ்புக் போன்ற திறந்தவெளி குப்பைமேட்டில் பகிர்வதில் மிகுந்த கவனம்தேவை. மனைவி, குழந்தைகள் படங்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம். அப்படியே பயன்படுத்தினாலும் தெரிந்தவர்களுடன் மட்டும் பகிருங்கள்.

நிறுவனங்கள்:

ஃபேஸ்புக்கில் நீங்கள் வேலைசெய்யும் நிறுவனங்கள் பற்றி தவறாக எழுதாதீர்கள். ஒருவேளை அது மற்றவர்களுக்கு உங்கள்மேல் கீழ்த்தரமான என்னத்தை ஏற்படுத்துவதுடன், சில நேரங்களில் சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம் அவதூறு வழக்கு தொடர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனவே அம்மாதிரி நிகழ்வுகளை கவனமாக கையாளுங்கள்.

அரசியல்:

அரசியல் பற்றியோ, அரசியல் தலைவர்கள் பற்றியோ தவறாக ஃபேஸ்புக்கில் எழுதவேண்டாம். உங்கள்மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

60 ways to look young (and feel great)


'Beauty is what health and happiness look like on the outside,' Good Housekeeping told readers in 1916.

Our advice has changed little since because we've always extolled the fundamentals: The right diet, exercise and spirit promote long life - and keep you looking and feeling young. (Of course, a fabulous haircut, lipstick, and the right pair of jeans can't hurt, either.)

Here's the ultimate clock-resetting guide - beauty how-to and health must-do.

Mind your brain
These strategies will help keep you sharp-witted(and healthy, too!) throughout your life

Drink up


Your coffee, that is. Swedish and Finnish researchers found that moderate consumption of coffee (3-5 small cups a day) cuts the risk of dementia by 65 percent.

Get moving

Middle-aged women and men who exercise 5-6 times a week (brisk walking is okay) are far less likely to develop mild cognitive impairment later in life.

Check your numbers 


High cholesterol in your 40s can up your chances of developing Alzheimer's later in life, researchers reported at a 2008 meeting of the American Academy of Neurology.

Also Keep an eye on


Your high-density lipoprotein (HDL). Low levels are linked to memory loss and dementia, a University College, London, study of 3,673 participants found.

Watch your weight

Obesity can increase the dementia risk by 80 percent, a Johns Hopkins, US, study found. Most dangerous: fat around your middle.

Be a groupie
Payoffs from having a circle of friends or people you see regularly at a club or other gathering:
Lower blood pressure
Delayed memory loss
Reduced risk of recurrent stroke and even the common cold

Save your skin

Choose the right products but follow through with some mustdos as well... Your chest is thin-skinned, making it susceptible to sun damage. to renew it, gently exfoliate regularly with a face scrub. Wear a hat that has at least a three-inch brim in order to shade your face. or carry a parasol. on cold days, give your face extra protection with a super-rich thick moisturiser. Use sunscreen with a minimum spf of 15 - no matter where you live or what your skin colour, use every day, whether it's winter or summer. and don't forget the after-sun face wash.

Keep an eye on your vision

Dark green leafy vegetables are prime sources of both lutein and zeaxanthin, plant pigments that protect your eyes from uv damage. make lettuce salads - and make sure spinach is on the menu, too.

Happy birthday!
Celebrating one of these milestones? Gift yourself new cosmetics and a new look. Move beyond the bare essentials.

Don't hold back - treat yourself to...

AT 30 tinted moisturisers, loose body powders and shimmers.
AT 40 lengthening mascara, eyelid primer.
AT 50 rosy blush, glowy foundation.
AT 60 shimmery shadow, hydrating lipstick.

Dress code

7 fashion tricks that will make you look younger-instantly

1. Try the new black - It's actually black and white; the combination makes you look sophisticated but still playful.
2. Experiment with a new trend - It updates your look and gives you a more youthful vibe.
3. Learn the power of shapewear - They can give you a sleeker line by invisibly smoothing the areas that bulge out a bit. A more supportive bra adds lift - and subtracts years.
4. Show some leg - Who said that once you're 40, hems should be below the knee? At the knee or just above is most flattering.
5. Skip the Mommy jeans - A dark wash, lower waist, and slimmer-cut jeans will give you the impression of legs you had in high school.
6. Go casual - A T-shirt under your jacket instead of a buttondown shirt, for example, can make you look younger.
7. Keep it in proportion - A slim pant, paired with a longer tunic, will take away years (and conceal extra pounds).

Go fish
For omega-3-rich sources. The fatty acids in these cold-water fish fight inflammation (precursor to heart disease, arthritis, diabetes) and boost mood.

Best high-in-fat: 
  • Salmon (canned is fine)
  • Mackerel
  • Sardines
  • Pomfret
  • Rohu
If you can't find these fish, or your tastes are more turf than surf, then take fish oil supplements containing 500mg of EPA (Eicosapentaenoic acid) and DHA (Docosahexaenoic acid). Seven Seas Seacod and Maxepa are locally available brands. While you can get omega-3s from plant sources, they're in a form that don't give you similar protection.

Love lessons
A study conducted at Columbia and Yale Universities found that elderly women who named their husbands as their primary confidants had a reduced risk of dying over the next six years. Bonus: Their husbands lived longer, too.The give-and-take of couple-dom may help keep the neurons firing, say Scandinavian researchers whose study of 1,400 men and women found that people who live alone at mid-life are twice as likely to develop cognitive impairment later in life as against those who are paired up.

A hand up

Pure lemon juice is one of the finest things for the hands,' Good Housekeeping reported in 1897, foreshadowing today's fruit-acid craze. While citric acid remains a great slougher, here are two more smooth moves: To avoid chapping, always dry hands thoroughly and follow with a hand cream. Keep gloves in your kitchen and bathrooms, to protect your hands whenever you're washing or cleaning.

Build a better memory
Our ability to commit new information to memory - and then retrieve it when we need it - slows down over the years. 

To minimise the decline: 

Practise paying attention Forcing yourself to observe and recall the details of your day - which tie did your husband wear? Did the supermarket cashier have her hair up or brushed back - sharpens your memory, even if you never need the information.

Watch TV, or unwind in whatever way works for you - a long walk, a chat with a girl friend. Stress hormones (cortisol) may interfere with encoding and retrieving information; as you age, chronic elevated cortisol levels are linked to memory impairment.

Do crossword puzzles, or learn a new instrument or language. Mentally challenging activities build fresh connections in your brain, creating "cognitive reserves" that may protect memory later in life.

Shine on


'The price of a head of good hair is never ending vigilance,' warned Good Housekeeping in 1910. Today, thanks to new techniques and products, you can drop your guard but keep your looks.

1. Gray hair, which can be coarse, needs extra conditioning. Try hair products which soften hair. Hot oil treatments are still your best bet.
2. Hair becomes drier as you age; keep it healthy-looking with frequent trims and deep-conditioning.

A cut above

Ask your hair stylist for bangs. They look young and fun, and hide forehead lines.Make waves. Stick-straight hair can look severe (read: older); gentle curls soften the contours of your face.

Short cuts create the illusion of more hair. If you prefer to keep your hair long, add face-framing layers for a subtle lift.

A la smart menu


'Proper diet? will tend to ward off diseases,' Good Housekeeping said in 1919. Today, research has identified specific foods that can help you stay healthy and happy:? Berries of all hues are rich in antioxidants. They combat chemicals that can cause cell-damage and chronic inflammation. Spinach and other dark leafy greens deliver Vitamin K, which strengthens bones. Red wine contains resveratrol, an antioxidant, inflammation-deterrent, and artery-protector. Curd and other dairy products are a terrific source of bone-building protein and calcium. 

In a Japanese study conducted recently, eating 1/4 cup of curd a day led to a 50 percent reduction in tooth loss, possibly because of the probiotics in curd. Whole grains can protect against diabetes, heart disease, stroke, colon cancer, and gum disease. Dark chocolate helps keep your arteries functioning well. But have no more than 42gm a day. Too much will pack on the heartdamaging kilos.

Keeping lips luscious


Whatever your challenge - dryness, shape - there is a solution.

Lift droopy corners, apply a basic colour first, then go over the centre of lips with a slightly deeper shade.Prevent the lipstick from melting away into lines. Use a pencil to line lips before you apply lipstick. Then, avoid too-creamy or glossy formulations, which tend to migrate or melt into those lines.

Soften your pout. Gently rub a warm, damp washcloth over your lips to slough dead skin. Follow with a balm.

What's so funny about that 
A University of Maryland, US, research found that laughing can increase blood flow by 22 percent and may protect against heart problems. It also relieves stress.

As the crow's(feet) fly
In 1931, Good Housekeeping referred to them as those "hateful little lines," and advised - as a deterrent - avoiding 'visual strains of all kinds,' including 'lack of glasses when they are not needed.' Besides not smoking, here's how you can minimise the dreaded crinkles:
After you've washed your face, pat around your eyes to dry the delicate skin - rubbing stretches it.
Even if you have oily skin and don't use a face cream, moisturise around your eyes twice a day. Apply moisturiser with your ring finger; it's your weakest one and thus least likely to cause damage to your eyes, or result in wrinkles.

Master your metabolism
You'll reverse middle-aged spread - and help keep your body slim and strong for years to come. Shed pounds slowly Crash dieting leads to greater loss of metabolism-boosting muscle. A fast-like diet will drop the average woman's metabolic rate by at least 25 percent.

Pump iron 
Adding weight training to your cardio routine helps you avoid losing the 2.3kg muscle that otherwise disappear every decade, simply from getting older.
Switch it up 
Trying different routines keeps muscles from getting bored - they have to work in new(challenging) ways.

4 Eye-Openers
1. Curl your lashes.
2. Cover dark undereye circles without telltale chalkiness - apply powder foundation in a shade that matches your skin tone to the darkened areas, then pat with a damp sponge.
3. Liner trick - choose a creamy eyeliner pencil. Hard pencils can pull at delicate skin.
4. Because of its texture, the skin around your eyes looks youngest with just a bare minimum of setting powder.

Make your home a vibrant space


In an ideal world, a home should be a labour of love, a sanctuary you come back to after a hectic day of  facing the world. Unfortunately, most of us live in structures of brick and mortar that really cannot be called homes. The love, warmth and joy that characterises a home has gone missing in our fast-paced life.
windowThe reason for this is that in the hectic course of our lives, we have deviated from the ancient principles of Vaastu.

Vaastu Shastra is based on the principle that a home is an abode of a living soul, the dwelling place of the entity called the Vaastu Purush.

The Vaastu Purush, according to the Matsya Purana , was born out of the sweat of Lord Shiva when he was dueling with a demon. The droplet fell on earth and turned into the prostrate figure of the cosmic man, or the Vaastu Purush.

The resting form of this cosmic man has been the basis of Hindu architecture.

The figure is lying down on earth with his head towards the north- east, feet towards south- west, and the hands pointing north- west and south- east. It is these magnetic directions that turn a house into a home.

Here are some other tips for building a house according to the principles of Vaastu Shastra and thereby ensuring a confluence of positive energies: The kitchen should be built in the south- east corner of the house with the cooking area facing east.

The bedroom should be located in the south- west with the headboard of the bed facing the south.

The bathroom should be in the east and if for some reason that’s not possible, then the geyser should be installed in the south-east corner.

Tuesday 19 March 2013

இறைவனுக்கு சாப்பாடு அவசியமா?


இறைவனுக்கு சாப்பாடு அவசியமா?
Temple images
ஐயையோ! இவ்வளவு பாலைக் கொண்டு போய், சுவாமியின் தலையில் கொட்ட வேண்டுமா! இந்தியாவின் பொருளாதாரத்தை வீணடிக்கிறீர்களே! நாலு குழந்தைகளுக்கு இதைக் கொடுத்தால் பசியாறுமே! என்று எச்சில் கையால் காக்கை ஓட்டாத நாத்திகன் பேசுவான். ஏன்...நாத்திகம் பேசாதவர்களுக்கு கூட இதில் ஏதோ நியாயம் இருப்பது போல் தெரிகிறது. சுவாமிக்கு கொழுக்கட்டை, புளியோதரை, தயிர்சாதம் படைத்தால், இதை மட்டும் அந்த சுவாமி நேரில் வந்து எடுத்து சாப்பிடட்டும்.அப்புறம் யாராவது நிவேதனம்செய்கிறானா பார்க்கலாம், என்று மார் தட்டுபவர்களும் பூமியில் உண்டு.
இந்த நிவேதனம், அபிஷேகமெல்லாம் எதற்கு? இதை பக்தன் செய்யாவிட்டால் பகவான்சாப்பிடாமல் போய் விடுவானா! அல்லது யாரிடமாவது இதை நீ எனக்கு நிவேதனம் செய்தே ஆக வேண்டுமென கட்டாயப்படுத்தினானா?நிவேதனம் என்றால் அர்ப்பணித்தல். வெறும் சோறும் கறியும் இறைவனுக்கு படைப்பது நிவேதனமல்ல! நம் ஆத்மாவைஇறைவன் முன்னால் வைத்து, இதை நீ ஸ்வீகரித்துக் கொள் என்று சொல்ல வேண்டும். நானே ஒருவகை அன்னம் (சோறு) தான். இந்த அன்னத்தை நீ எடுத்துக் கொள், என்று கெஞ்ச வேண்டும். இவ்வாறு, ஆத்மாவை அவன் முன்னால் வைக்க வேண்டுமானால் மனப்பக்குவம் வர வேண்டும். அந்த பக்குவத்தை வரவழைப்பதற்கான பயிற்சி தான் சுவாமிக்கு உணவு படைப்பது.

Monday 18 March 2013

ஆண்மைகுறைபாடு நீக்கும் தொட்டாற்சுருங்கி!


ஆண்மைகுறைபாடு நீக்கும் தொட்டாற்சுருங்கி!

காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி காந்த சக்தி உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்டு தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி.
தெய்வீக மூலிகை
‘நமஸ்காரி’ என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி உடையது. வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். நாளும் தொட வாய்ப்பாகும். மாத விலக்காகும் பெண்கள் இச்செடியின் அருகில் செல்லக் கூடாது. தெய்வீக மூலிகையான இதனை தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும். மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை அதிகரிக்கும். அதனால் ‘காமவர்த்தினி’ என்றும் கூறுவர்.
மாந்திரீகத் தன்மை
இதன் வேரை வழிபாடு செய்து பிடுங்கி மாந்திரீகம் செய்யப் பயன்படுத்துவர். இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ்வாதம் கரையும். இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். 10 முதல் 20 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட உடலில் கிளர்ச்சி பெருகும்.
சிறுநீர் கல் கரையும்
தொட்டாற் சுருங்கி மேகமூத்திரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டுகின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும் ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரினை பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு கால் படி தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி சுண்டக் காய்ச்சவும், பின்னர் இதனை வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும்.
ஆண்மை பெருகும்
ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்.
சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும்.
மூலநோய் நீங்கும்
இதன் இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம், பவுத்திரம் போம். இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். இதன் இலையை மெழுகு போலரைத்து விரை வாதம், கை,கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகட்கு வைத்துக் கட்ட குணமாகும். இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு உட செலுத்தி வைக்க ஆறிவரும். இதன் இலையை ஒரு பெரிய மண்கலயத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி, குணமாகும்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த எளிய தீர்வு இதோ..!


நீரிழிவு நோயை கட்டுப்படுத்த எளிய தீர்வு இதோ..!

நீரிழிவு நோய் தற்போது அனைவரின் உடலிலும் வந்துவிடுகிறது. இத்தகைய நீரிழிவு உடலில் வந்துவிட்டால், அதனை முற்றிலும் சரிசெய்ய முடியாது. ஆனால் அவற்றை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமாக வாழ முடியும். அதற்கு இன்சுலின் ஊசி தான் ஒரே வழி என்று நினைக்க வேண்டாம். அத்தகைய நீரிழிவை இயற்கை முறையிலும் கட்டுப்படுத்தலாம். அதிலும் காய்கறிகளில் வெண்டைக்காயை சாப்பிட்டால், நீரிழிவு கட்டுப்படும்.
நீரிழிவை கட்டுப்படுத்த எப்படி வெண்டைக்காயை பயன்படுத்த வேண்டும்..
* இரண்டு வெண்டைக்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும்.
* முனைகளை நறுக்கியப்பின் அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அப்போது அதனை கழுவிடாமல், ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும்.
* பின் காலையில் எழுந்து, அந்த துண்டுகளை நீக்கி, அந்த நீரை குடிக்க வேண்டும்.
* இதனை தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.
* சொல்லப்போனால் வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான், சிறந்த பலனைத் தரும்.
ஆகவே வெண்டைக்காயை குழம்பு, பொரியல் என்று சாப்பிடுவதை தவிர்த்து, மேற்கூறியவாறு சாப்பிட்டால், நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம். வெண்டைக்காய் எப்படி நீரிழிவைக் கட்டுப்படுத்தும்?
* வெண்டைக்காயில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. ஆகவே இதனை அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு, வயிறும் நிறைந்துவிடும். இதை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.
* நீரிழிவில் வகை-2 நீரிழிவு என்று ஒன்று உள்ளது. இது சிறுநீரகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த வகையான நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டைக்காயை சாப்பிட்டால், சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.
* எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இந்த சத்து உடலில் இருக்கும் கார்போஹைட்ரேட்டின் செரிமான நேரத்தை குறைத்து, அவை இரத்தத்தில் கலக்காமல் தடுக்கிறது. இத்தகைய சத்து வெண்டைக்காயில் அதிகம் உள்ளது.
எனவே, வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்து, நீரிழிவைக் கட்டுப்படுத்துங்கள்.

காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் எடை குறையுமாம் ஆய்வில் தகவல்


காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் எடை குறையுமாம் ஆய்வில் தகவல்

அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு குறித்து அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை விரிவான ஆய்வு நடந்தது.
காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு அதிக புரோட்டீன் கிடைக்கிறது. அது உடலில் தெம்பை நீடிக்கச் செய்து நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தரும்.
அதன்மூலம், மதிய உணவு, மாலை சிற்றுண்டி ஆகியவற்றில் கலோரிகள் நிறைந்த அதிக உணவுகளை சாப்பிட வேண்டியிருக்காது. அதனால், உடலில் கலோரிகள் குறையும். மதியம், மாலை உணவுகளின் அளவு, கலோரி குறைவதால் எடை உயர்வது தடுக்கப்படுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
“உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது. குறிப்பாக, புரோட்டீன் அதிகமுள்ள முட்டையை காலை உணவில் சேர்க்கலாம்.
இரண்டு விதமான அமெரிக்க உணவுமுறையை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்தது. காலை உணவில் முட்டையை சேர்த்தவர்களுக்கு மதிய உணவு மட்டுமின்றி நாள் முழுவதும் பசியின் அளவு குறைந்திருந்தது. இதனால் உட்கொள்ளும் கலோரிகள் குறைந்து எடையை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது”

பொடுகை நீக்க சிறந்த வழி – எண்ணெய் மசாஜ்.


பொடுகை நீக்க சிறந்த வழி – எண்ணெய் மசாஜ்.

குளிர் காலம் வந்தாலே கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பொடுகு. இது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை தான். இத்தகைய பொடுகை நீக்க பல வழிகள் உள்ளன.
மேலும் இந்த பொடுகுத் தொல்லை நீண்ட நாட்கள் நீடித்தால், முகப்பரு, சரும வறட்சி போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே பொடுகு இருந்தால், சாதாரணமாக நினைக்காமல், அதனை உடனடியாக நீக்க முயற்சிக்க வேண்டும். அதிலும் ஒரு முறை அதனை நீக்க முயற்சித்தால், அது மறுமுறையும் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே அது சருமத்தை பாதிப்பதற்கு முன், பொடுகை நீக்கிவிட வேண்டும்.
அதற்கு சிறந்த வழி எண்ணெய் மசாஜ் தான். மேலும் அந்த பொடுகை நீக்குவதற்கு நிறைய எண்ணெய்கள் வீட்டிலேயே இருக்கின்றன. அது என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை பயன்படுத்தி பொடுகை நீக்குங்கள்.
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு:-
அனைத்து வீடுகளிலுமே தேங்காய் எண்ணெய் இருக்கும். அந்த தேங்காய் எண்ணெயை வைத்து சூப்பராக பொடுகை நீக்கலாம். அதிலும் அந்த தேங்காய் எண்ணெயுடன், எலுமிச்சை சாற்றை கலந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு தேங்காய் எண்ணெயை லேசாக சூடேற்றி, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து, அந்த கலவையை தலையில் தடவி, விரல்களால் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும். அதிலும் இதனை குளிப்பதற்கு 2 மணிநேரத்திற்கு முன் செய்ய வேண்டும்.
தயிர், பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு:-
பொடுகை நீக்கும் பொருட்களில் சிறந்தது தான் தயிர். இது பொடுகை மட்டும் நீக்குவதோடு, கூந்தலை மென்மையாகவும், பட்டுப் போன்றும் மாற்றும். பாதாம் எண்ணெய் கூந்தல் வளர்ச்சியை அதிகரித்து, வறட்சியை நீக்கும். எலுமிச்சை இறந்த செல்கள் மற்றும் பொடுகை போக்கும். ஆகவே அந்த மூன்று பொருட்களையும் கலந்து, தலைக்கு குளிப்பதற்கு முன் 1 மணிநேரம் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
செம்பருத்தி எண்ணெய்:-
குளிர் காலங்களில் எண்ணெய் மிகவும் அவசியமானதாக இருக்கும். ஏனெனில் அப்போது சரும வறட்சி அதிகமாக இருக்கும். இதனால் கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை போன்றவை அதிகம் ஏற்படும். எனவே அப்போது செம்பருத்தியை கொதிக்கும் நீரில் போட்டு, பின் அதனை அரைத்து, சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். பின் அதனை குளிர வைத்து, இதவில் படுக்கும் போது தலைக்கு தடவி தூங்கி, மறுநாள் காலையில் எழுந்து குளிக்க வேண்டும்.
வெந்தயம் மற்றும் தேங்காய் எண்ணெய்:-
வெந்தயம் பொடுகை எளிதில் நீக்கிவிடும். அதற்கு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் செய்து, பின் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் கலந்து, தலைக்கு தடவி, 2 மணிநேரம் ஊற வைத்து, பிறகு மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் வெந்தயத்தில் உள்ள கசப்புத்தன்மையால், பொடுகு நீங்கி, கூந்தல் உதிர்தல் நின்றுவிடும். பின் கூந்தலும் வலுவடையும்.
நல்லெண்ணெய்:-
கூந்தல் வறட்சியை போக்கும் எண்ணெய்களில் நல்லெண்ணெயும் சிறந்த ஒன்று. இந்த எண்ணெயை அடிக்கடி தடவி வந்தால், வறட்சி நீங்கி, பொடுகு வராமல் இருக்கும். அதிலும் இதனை லேசாக சூடேற்றி, வேண்டுமென்றால் எலுமிச்சையை சேர்த்து கலந்து, தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளித்தால், கூந்தல் நன்கு பொலிவோடு பொடுகின்றி இருக்கும்.
மேற்கூறியவாறெல்லாம் செய்தால், பொடுகுத் தொல்லையின்றி இருக்கலாம்.

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா இருக்கா? ஈஸியா தடுக்கலாம்!!!


சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா இருக்கா? ஈஸியா தடுக்கலாம்!!!

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது கழித்தப் பின்போ, ஒருவித எரிச்சல் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், அதற்கு உடனே சிறுநீர் பாதையில் தொற்றுநோய் என்று அர்த்தம் இல்லை. அதிலும் இந்த மாதிரியான பிரச்சனையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே அவஸ்தைப்படுகின்றனர்.
ஏனெனில் அவர்கள் அடிக்கடி கழிவறைக்கு செல்ல முடியவில்லை என்று வெளியேறும் கழிவுகளை அடக்கி வைக்கின்றனர். இதனை சரிசெய்தால் மட்டும், எரிச்சல் ஏற்படுவதை தடுக்க முடியாது. இந்த மாதிரியான பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று தெரிந்து கொள்வதோடு, அதற்கான வீட்டு மருத்துகளையும் தெரிந்து கொண்டு, பின்பற்றி வந்தால், சிறுநீர் கழித்தப் பின் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம்.

எரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள்:
* சிறுநீர் பாதை தொற்றுநோய்
* உடலில் நீர் வறட்சி
* சிறுநீரக கற்கள்
* கல்லீரல் பிரச்சனை
* அல்சர்
* பிரசவத்திற்கு முன்னோ அல்லது பின்போ நரம்புகளில் பாதிப்பு இருப்பது
* விந்து அல்லது விரைகளில் உள்ள தொற்றுநோய்
* பால்வினை நோய்
* பெரிதான புரோஸ்டேட்
* நீரிழிவு
* ஊட்டச்சத்துக் குறைவு
* குறுகிய சிறுநீர் பாதை
எரிச்சலைத் தடுக்கும் சிறப்பான வீட்டு மருந்துகள்:
* அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும இருக்கும். ஆகவே ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும். இருப்பினும் எரிச்சலுடன் இருந்தால், அது சிறுநீர் பாதையில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.
* குருதிநெல்லிக் கனியின் (cranberry) ஜூஸை சாப்பிட வேண்டும். பெரும்பாலான சிறுநீர் பாதை தொற்றுநோய்கள் மற்றும் குறுகிய சிறுநீர் பாதையினால் ஏற்படும் எரிச்சலை, இந்த சிட்ரஸ் பழத்தின் ஜூஸானது சரிசெய்யும். வேண்டுமெனில் எலுமிச்சை ஜூஸ் கூட குடிக்கலாம். ஏனெனில் சிட்ரஸ் பழ ஜூஸ்கள், பாக்டீரியாவை அழிக்கவல்லது.
* நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம். சொல்லப்போனால், நெல்லிக்காய் பெரும்பாலான ஆயுர்வேத மருந்துவத்தில் நோயை குணமாக்கப் பயன்படுகிறது.
* தேங்காய் நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது. அதிலும் இவற்றை மயக்க நிலை மற்றும் நீர் வறட்சியின் போது 2-3 டம்ளர் குடித்து வந்தால், அந்த எரிச்சலானது போய்விடும். வேண்டுமென்றால் அத்துடன் வெல்லம் மற்றும் மல்லி தூளை சேர்த்து குடிக்கலாம். இதனால் வலியுடன் சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.
* ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால், சரியாகிவிடும்.
* எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆகவே தினமும் இரண்டு அல்லது மூன்று முறை, கருப்பை வாய்க்குழாய் (vagina) மற்றும் ஆண்குறியை (penis) கழுவ வேண்டும். இதனால் பாக்டீரியாவானது தங்காமல் தடுக்கலாம்.
* சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும் எரிச்சலுடன் கூடிய சிறுநீர் வெளியேறும். ஆகவே பீர் குடித்தால், அந்த கற்கள் கரைந்துவிடும். அதையே காலையில் குடித்தால், உடலில் வறட்சி ஏற்படும். ஆகவே அப்போது அத்துடன் தேங்காய் நீர் மற்றும் அதிக தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும்.
மேற்கூறியவாறெல்லாம் செய்தால், எரிச்சலுடன் கூடிய சிறுநீர் வெளியேற்றம் சரியாகிவிடும். வேறு என்னவெல்லாம் செய்தால், சரியாகும் என்பது உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உடல் உஷ்ணத்தை தணிக்க இலகு வழி!


உடல் உஷ்ணத்தை தணிக்க இலகு வழி!

simple-way-for-reduced-human-heatஉடலில் அதிகப்படியான உஷ்ணம் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன் இருக்க மாட்டார்கள். இவர்களின் தோல் கூட பளபளப்பாக இருக்காது.
வெங்காயம் மற்றும் தேனை முடிந்தவரை உணவில் எடுத்துக் கொள்ளவும். தலை முதல் கால் வரை நல்லெண்ணையைத் தேய்த்து குளிப்பதால் உடலில் இருந்து தேவையற்ற சூடு நீங்கி விடும்.
பெண்கள் செவ்வாய், வெள்ளியும், ஆண்கள் புதன், சனிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளித்து வரவும். எண்ணெய் தேய்த்துக் குளித்தபின்பு, இஞ்சி கஷாயம் (அ) சீரககஷாயம் (அ) சுக்குப் பொடியை வெல்லமோ, நெய்யோ கலந்து சாப்பிடவும்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் இதை கடைப்பிடித்தல் மிகவும் முக்கியம். இம்முறையினால் உடலில் உள்ள அதிகப்படியான சூடு வெளியேறி நல்ல ஆரோக்கியம் இயற்கையாக கிடைக்கும்.

கற்றாழை உடல்நல நன்மைகள்..


கற்றாழை உடல்நல நன்மைகள்..

health-benefits-of-aloeகற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.
கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.
சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.
தாம்பத்திய உறவு மேம்பட
சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.
கூந்தல் வளர
சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.
கண்களில் அடிபட்டால்
கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.
குளிர்ச்சி தரும் குளியலுக்கு
மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.
முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.
இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.
பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.
கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.
கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.
தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.
நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.
சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.
இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.