jaga flash news

Saturday 10 May 2014

பிரம்ம விவாகம்,தெய்வ விவாகம்,அர்ஷ விவாகம்,ப்ரஜபத்ய விவாகம்,அசூர் விவாகம்,கந்தர்வ விவாகம்,ரக்ஷாஸ் விவாகம்

பிரம்ம விவாகம்
 எட்டு வகையான திருமணங்களில் இதுவே உச்ச உயர்வான திருமண வகையாக விளங்குகிறது. இந்த வகையான திருமணத்தில், தங்கள் மணமகனின் குடும்பம், தங்கள் மகனுக்கு தகுந்த பெண்ணை தேடுவார்கள். அதன் பின், மணமகளின் தந்தை தகுந்த மணமகனை வீட்டிற்கு அழைப்பார். தனக்கு வரப்போகும் மருமகன் நன்கு படித்து, நல்ல பழக்க வழக்கங்களுடன் இருப்பவரா என்பதை உறுதி செய்த பிறகு, தன மகளை அவருக்கு மணம் முடித்து வைப்பார்.


தெய்வ விவாகம்
 இது ஒரு தாழ்ந்த திருமண வகையாகும். மணமகளின் குடும்பம் தங்கள் பெண்ணுக்கு திருமணம் ஆவதற்கு குறிப்பிட்ட காலம் வரை காத்திருப்பார்கள். அந்த நேரத்திற்குள் அவளுக்கு தனக்குகந்த மணமகன் அமையவில்லை என்றால் தியாகமாக கருதி அவளை சமயகுருவிற்கு மணம் முடித்து வைப்பார்கள்.

அர்ஷ விவாகம் 
இந்த வகையான திருமணத்தில், பெண்ணை முனிவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். இரண்டு மாடுகளை வாங்கிக் கொண்டு பெண்ணை மணம் முடித்து விடுவார்கள். இந்த வகையான திருமணத்தில் வணிக பரிமாற்றம் இருப்பதால், இதனை ஒரு உயர்ந்த வகை திருமணமாக கருதுவதில்லை.


ப்ரஜபத்ய விவாகம் 
இந்த வகையான திருமணத்தில், தன் பெண்ணுக்கு தகுந்த பையனை தேடி பெண்ணின் தந்தை செல்வார். பையனை தேடி பெண்ணின் தந்தை செல்வதால், இதுவும் கூட ஒரு வகையில் தாழ்த்தப்பட்ட திருமண வகையாகும்.



அசூர் விவாகம் 
இந்த வகையான திருமணத்தில், மணமகனிடம் இருந்து பரிசுகளையும் பணத்தையும் பெற்றுக் கொள்ளும் பெண்ணின் குடும்பம். இந்த காரணத்தினால், பல நேரங்களில் பெண்ணுக்கு தகுந்த மணமகன் அமைவதில்லை. பெண்ணின் குடும்பம் பணம் பெறுவதால், பொருத்தமில்லாத பையனை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்படுவாள்.



கந்தர்வ விவாகம்
 நாகரீக காலத்தில் இதனை காதல் திருமணம் என்று அழைக்கிறோம். ஒரு ஆணும் பெண்ணும், அவர்கள் குடும்பம் ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி, இரகசியமாக மணம் முடிந்து கொள்வார்கள்.



ரக்ஷாஸ் விவாகம் 
இந்த வகையான திருமணத்தில், மணப்பெண்ணின் குடும்பத்தோடு மணமகன் சண்டையிடுவார். பெண்ணின் சம்மதமில்லாமல் அவளை மணம் முடித்து கையோடு அழைத்து செல்வார்.


பிஷாஷ் விவாகம்
 இந்த வகையில், மணப்பெண்ணை கவனமாக மயக்கி, அவள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவளை மணம் முடித்துக் கொள்வார். இல்லையென்றால் அவளை மயக்கியோ அல்லது ஊனமாக்கியோ அவளை மணம் முடிப்பார்.

Friday 9 May 2014

ஜென்ம நட்சத்திரத்தை வைத்துப் பெண்களின் குணாதிசயங்களைக் கணிக்க முடியும்.

1.அசுவினி: கவர்ச்சியானவர்கள். கனிவானவர்கள். சுத்தமானவர்கள். காம வேட்கை, கடவுள் பக்தி அதிகமிருக்கும்.
2.பரணி: சுத்தமில்லாதவர்கள். சண்டைகளை விரும்புபவர்கள். வஞ்சகம் மிக்கவர்கள். திரை மறைவில் தீமை புரிபவர்கள்.
3.கிருத்திகை: கொள்கைப் பிடிப்பற்றவர். கோபம் அதிகமிருக்கும். சண்டை போடுபவர்கள். சுற்றத்தை வெறுப்பவர்கள்.
4.ரோகிணி: செல்வம் படைத்தவர்கள். அழகானவர்கள். மூத்தோரை மதிப்பவர்கள்.
5.மிருகசிரிடம்: சுகாதாரமானவர்கள். அழகானவர்கள். ஆடை, ஆபரண யோகம் பெற்றவர்கள். தரும காரியங்களில் ஈடு பாடு உடையவர்.
6.திருவாதிரை: குரோத குணமும், நய வஞ்சகமும் படைத்தவர்கள். ஆத்திரம் மிக்கவர்கள். வீண் செலவு செய்பவர்கள்.
7.புனர்பூசம்: பண்பானவர்கள். அடக்க மானவர்கள். அழகும், லட்சணமும் மிக்க கணவரைப் பெறுவார்கள். சுய கவுரவம் படைத்தவர்கள்.
8.பூசம்: வீடு, நிலம், வாகனம் ஆகிய வளங்களைப் படைத்தவர்கள். அழகானவர்கள்.
9 ஆயில்யம்: அழுது ஆர்ப்பரிப்பவர். ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசுபவர். விசுவாசமில்லாதவர்கள். ரகசியம் காக்கத் தெரியாதவர்கள்.
10.பூரம்: சந்தோஷ சல்லாபம் மிக்கவர். செல்வாக்கு மிக்கவர். நீதி நெறி வழி நடப்பவர். தைரியமானவர்கள்.
11.உத்திரம்: சரச சல்லாபத்தை அனுபவிப்பவர். ஒழுக்கமானவர்கள்.
12.அஸ்தம்: சுகபோகமாக வாழ்வார்கள். கவர்ச்சியானவர்கள். நுண்கலை வல்லுநர்கள்.
13.சித்திரை: வனப்பும், வசீகரமும் உடையவர்கள். அழகானவர்கள்.
14.சுவாதி: ஒழுக்கமானவர், நல்லோர் நட்பைப் பெற்றவர். எதிர்ப்பை வெல்லும் குணமுடையோர்.
15.விசாகம்: சாஸ்திர, சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப் பவர். அறிவாற்றல் மிக்கவர்கள்.
16.அனுஷம்: தியாக குணம் படைத்தவர்கள். பொதுச் சேவையில் நாட்டம் உடையவர்கள்.
17.கேட்டை: சத்திய நெறி காப்பவர். சந்தோஷமானவர்கள். சுற்றத்தாரை நேசிப்பவர்.
18.மூலம்: குரோதமானவர்கள். வெறுப்பும், விகற்பமும் மிக்கவர்கள்.அழகானவர்கள்
19.பூராடம்: குடும்பத்தில் சிறந்தவர்கள். அதிகார அந்தஸ்து மிக்கவர்கள்.
20.உத்திராடம்: பேரும், புகழும் மிக்கவர்கள். சந்தோஷமும், சல்லாபமும் அனுபவிப்பவர்கள். உல்லாசவாசிகள்.
21.திருவோணம்: பிறருக்குச் சேவை செய்பவர்கள். நம்பிக் கையும், நேர்மையும் மிக்கவர்கள். இரக்க மனம் படைத்தவர்கள்.
22.அவிட்டம்: சகல சவுபாக்கியங்களையும் பெற்றவர்கள். பெருந் தன்மையானவர்கள். கருணை மிக்கவர்கள். நேர்மையானவர்கள்.
23.சதயம்: பிற பெண்களை நேசிப்பவர்கள். சுற்றத்தாரால் விரும்பப்படுபவர்கள். கலகலப் பாக இருப்பவர்கள்.
24.பூரட்டாதி: சமுதாயத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்கள். அறிவானவர்கள். கல்வி மற்றும் கலைகளில் வல்லவர்கள்.
25.உத்திரட்டாதி: பாசமானவர்கள். அறிவும், ஆற்றலும் மிக்கவர்கள். உண்மையை விரும்புபவர்கள்.
26.ரேவதி: சம்பிரதாயங்களை மதிப்பவர்கள். கட்டுத்திட்டங்களுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். நேசம் மிக்கவர்கள்.
27.மகம்: ஆசார, அனுஷடானங்களை அனுசரிப்பவர்கள். பாசம் மிக்கவர்கள்.

Monday 5 May 2014

சனாதன தர்மத்தின்படி

ஆஸ்தீக அன்பர்களுக்கு நமஸ்காரம்,
நமது சனாதன தர்மத்தின்படி ஒரு குழந்தை பிறந்தது முதல் அதன் அந்திம காலம்
வரை அந்த குழந்தையை முன்னிட்டும்,அக்குழந்தை வளர்ந்தபின் அதன் சந்ததியை
முன்னிட்டும் பல சுப நிகழ்வுகள் செய்யப்படுகிறது.அப்படிப்பட்ட சுப
நிகழ்வுகள் குறிப்பிட்ட சுப முகூர்த்தத்தில்தான் நிகழ்த்தப்பெறவேண்டும்
என நம் தர்ம சாஸ்திரங்கள் வகுத்துள்ளன.

அப்படிப்பட்ட சுப நிகழ்வுகளுக்கான சுப முகூர்த்தத்தை நிர்ணயம்
செய்யும்போது கீழ்கண்ட 21 விதிகளை அவசியம் கடைபிடிக்கவேண்டும் என கால
விதானம் எனும் நூல் கூறுகிறது.அவற்றை இனி காண்போம்.

1.உல்கா:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 19 வது நட்சத்திரம் உல்கா
எனப்படும்.இதில் சுப முகூர்த்தம் கூடாது.



2.பூகம்பம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 9வது நட்சத்திரம் பூகம்பம்
எனப்படும்.இதுவும் சுபமுகூர்த்தத்திற்கு ஆகாது.


3.உபாகம்:
சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் ஏற்படும் நாளும் அதற்கு முன் மூன்று
நாட்களும்,பின் மூன்று நாட்களும் சுப முகூர்த்தத்திற்கு ஆகாத நாட்கள்.


4.குளிகன்(அ)மாந்தி:
ஒவ்வொரு நாளிலும் குளிகன் அல்லது மாந்தி உதயமாகும் நேரத்திற்குறிய
லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.


5.சஷ்டாஷ்டம அந்திய இந்து:
முகூர்த்த லக்னத்திற்கு 6-8-12-ல் சந்திரன் இருக்கக்கூடிய காலம்
முகூர்த்தத்திற்கு ஆகாது.

6.அசத் திருஷ்டம்:
முகூர்த்தம் வைத்துள்ள நேரத்திற்கு உரிய லக்னத்தை பாபக்கிரகங்களான
சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர் பார்க்கக்கூடாது.அவ்வாறு
பாபக்கிரகங்கள் பார்க்கும் லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.


7.அசத் ஆரூடம்:
பாபக்கிரகங்கள் அமர்ந்துள்ள ராசியில் முகூர்த்த லக்னம் அமைக்கக்கூடாது.


8.அசத் விமுக்தம்:
பாபக்கிரகங்களாகிய சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர்
அமர்ந்திருந்து பெயர்ச்சியான ராசியில் முகூர்த்த லக்னம்
வைக்கக்கூடாது.எனினும் இந்த ராசியில் சந்திரன் அமர்ந்திருக்குமானால் அந்த
தோஷம் பரிகாரமடைகிறது.


9.சித த்ருக்:
சுக்கிரன் பார்க்கும் ராசியை முகூர்த்த லக்னமாக அமைப்பது தோஷம்.ஆயினும்
சாந்தி முகூர்த்தத்திற்கு இந்த விதி பொருந்தாது.

10.சந்தியா காலம்:
சூரிய உதயத்திற்கு முன் இரண்டு நாழிகையும்(48 நிமிஷம்),சூரிய அஸ்தமனம்
அடைந்த பின் இரண்டு நாழிகையும் சந்தியா காலம் எனப்படும்.இதில் சுப
முகூர்த்தம் வைக்கக்கூடாது.


11.கண்டாந்தம்:
அஸ்வினி,மகம்,மூலம் ஆகிய நட்சத்திரங்களின் முதல் பாதமும்
ஆயில்யம்,கேட்டை,ரேவதி ஆகிய நட்சத்திரங்களின் நான்காம் பாதமும்
கண்டாந்தமாகும்.இதில் சுப முகூர்த்தம் வைக்கக்கூடாது
12.உஷ்ணம்:
பின்வரும் நட்சத்திரங்கள் தொடங்கியது முதல் அதில் கொடுக்கப்பட்டுள்ள
நாழிகை வரை உஷ்ண காலமாகும்.இதில் சுப முகூர்த்தம் வைப்பது தோஷமாகும்.
A.அஸ்வினி,ரோகிணி,புனர்பூசம்,மகம்,ஹஸ்தம்(7.30 to 15)
B.பரணி,மிருகசீர்ஷம்,பூசம்,பூரம்,சித்திரை(55 to 60)
C.கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,உத்திரம்,சுவாதி(21 to 30)
D.விசாகம்,மூலம்,திருவோணம்,பூரட்டாதி(0 to 6)

E.அனுஷம்,பூராடம்,அவிட்டம்,உத்திரட்டாதி(52 TO 60)
F.கேட்டை,உத்திராடம்,சதயம்,ரேவதி(20 TO 30)


13.விஷம்:
தியாஜ்ஜிய காலமே விஷம் எனப்படும்.இதிலும் சுப முகூர்த்தம் கூடாது.


14.ஸ்திர கரணம்:
சகுனி,சதுஷ்பாதம்,நாகவம்,கிம்ஸ்துக்னம் ஆகிய நான்கும் ஸ்திர
கரணங்களாகும்.இதிலும் முகூர்த்தம் கூடாது.


15.ரிக்தை:
சதுர்த்தி,நவமி,சதுர்தசி இவை ரிக்தை எனப்படும்.இதுவும் விலக்கத்தக்கதே


16.அஷ்டமி:
அஷ்டமியிலும் முகூர்த்தம் கூடாது.தேய்பிறை அஷ்டமி சுபம் என்பது சிலர் கருத்து.


17.லாடம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து மூல நட்சத்திரம் வரை எண்ணி வந்த
தொகையை பூராடம் முதல் எண்ணினால் கிடைக்கும் நட்சத்திரம் எதுவோ அதுவே லாட
நட்சத்திரமாகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.


18.ஏகார்க்களம்:
அன்றைய சூரிய ஸ்புடத்தை 360 பாகையிலிருந்து கழித்து வரும் ஸ்புடத்திற்கு
உதய நட்சத்திரத்திலிருந்து 1,2,7,10,11,14,16,18,20 ஆகிய நட்சத்திரங்கள்
ஏகார்க்களம் ஆகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.


19.வைதிருதம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 14 வது நட்சத்திரம் வைதிருதம்
ஆகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.


20.அஹிசிரசு:
வியதீபாத யோகத்தின் பிற்பகுதி அஹிசிரசு எனப்படும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.


21.விஷ்டி:
வளர்பிறை அஷ்டமி,ஏகாதசியில் 6 முதல் 12 நாழிகை வரையிலும் பௌர்ணமியில்
18முதல் 24 நாழிகை வரையிலும் சதுர்தசியில் 24முதல் 30 நாழிகை வரையிலும்,
தேய்பிறை திருதியையில் 30முதல் 36 நாழிகை வரையிலும் சப்தமியில் 12முதல்
18 நாழிகை வரையிலும் தசமியில் 42முதல் 48 நாழிகை வரையிலும் சதுர்தசியில்
முதல் 6 நாழிகை வரையும் விஷ்டி எனப்படும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.

1.அம்ஹஸ்பதி:
ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் ஏற்படுமாயின் அது அம்ஹஸ்பதி
எனப்படும்.இதனை அதிமாதம் என்றும் சொல்லுவர்.இந்த மாதத்தில் முகூர்த்தம்
செய்யக்கூடாது.
ஆனால் சித்திரை,வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.



2.மலமாதம்:
ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் ஏற்பட்டால் அது மலமாசம் எனப்படும்.இந்த
மாசத்திலும் சுப முகூர்த்தம் செய்யக்கூடாது.
ஆனால் சித்திரை,வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.


3.சமசர்ப்பம்:
அமாவாசையே நேரிடாத மாதம் சமசர்ப்பம் எனப்படும்.இந்த மாதத்திலும் சுப
முகூர்த்தம் கூடாது.


4.திர்சியதாஹி குரு சிதயோஹோ:
சங்கவ காலமென்று சொல்லக்கூடிய சூரியன் உதித்து 6முதல் 12நாழிகைக்குள்
குரு,சுக்கிரர் தோன்றும் காலம் முகூர்த்தத்திற்கு கூடாது.


5.குரு,சுக்கிர மௌட்யம்:
குருவும்,சுக்கிரனும் அஸ்தமனம் அடைந்துள்ள காலம் சுப முகூர்த்தம்
வைக்கக்கூடாது.(ஒன்று அஸ்தமனமாகி மற்றது நட்பு,ஆட்சி,உச்சம்
பெற்றிருந்தால் அது தோஷமில்லை)

6.குரு சுக்கிர மிதோ திருஷ்டி:
குருவும் சுக்கிரனும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ளும் காலம்
முகூர்த்தத்திற்கு உகந்த காலம் அல்ல.மேலும்
கீழ்கண்ட கிழமைகளுக்கு எதிரில் கொடுக்கப்பட்டுள்ள திதி,நட்சத்திரங்கள்
அமையுமானால் அந்த நாளில் திருமணம் முதலிய சுப காரியங்களை செய்யக்கூடாது.
A.ஞாயிறு-பரணி
திங்கள்-சித்திரை
செவ்வாய்-உத்திராடம்
புதன்-அவிட்டம்
வியாழன்-கேட்டை
வெள்ளி-பூராடம்
சனி-ரேவதி

B.ஞாயிறு-பஞ்சமி&கிருத்திகை
திங்கள்-த்விதீயை&சித்திரை

செவ்வாய்-பௌர்ணமி&ரோகினி
புதன்-சப்தமி&பரணி
வியாழன்-த்ரயோதசி&அனுஷம்
வெள்ளி-ஷஷ்டி&திருவோணம்
சனி-அஷ்டமி&ரேவதி
C.ஞாயிறு-பஞ்சமி&அஸ்தம்
திங்கள்-ஷஷ்டி&திருவோணம்
செவ்வாய்-சப்தமி&அஸ்வினி
புதன்-அஷ்டமி&அனுஷம்
வியாழன்-திருதீயை&பூசம்
வெள்ளி-நவமி&ரேவதி
சனி-ஏகாதசி&ரோகினி
D.ஞாயிறு-சதுர்த்தி
திங்கள்-சஷ்டி
செவ்வாய்-சப்தமி
புதன்-த்விதீயை
வியாழன்-அஷ்டமி
வெள்ளி-நவமி
சனி-சப்தமி

திருமண பொருத்தம்

திருமண பொருத்தம் -
===============================
ஒருவருக்கு வாழ்க்கையில் முக்கியமான மற்றும் திருப்பு முனையாக இருப்பது இந்த திருமண பந்தம். சிலர் திருமண வாழ்க்கை இனிக்கிறது சிலர் வாழ்க்கை கசக்கிறது சிலருக்கு முறிவு (விவாகரத்து) ஏற்படுகிறது. இதற்கு பல காரணங்கள் சொல்ல படுகிறது. ஆனால் இதற்கு அடிப்படை காரணமாக இருப்பது மணமக்கள் ஜாதகத்தை சரியாக பொருத்தாமல் / ஆராயாமல் திருமணம் செய்வது முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே தங்கள் குழந்தைகளின் திருமண ஏற்பாடு செய்யும் போது கீழ்க்கண்ட ஜாதக ஒற்றுமை உள்ளதா என்பதை சரிபார்த்து வாழ்க்கையை அமைத்து கொடுத்தால் மிக சிறப்பாக அவர்கள் வாழ்க்கை நடத்த உதவியாக இருக்கும்.
திருமண பொருத்தம் பார்க்கும் போது இந்த இருவகை பொருத்தம் பார்க்க வேண்டும்
1. நட்சத்திர பொருத்தம்
2. ஜாதக பொருத்தம்
தற்போது நடைமுறையில் தசவித (1௦ பொருத்தம்) களை வைத்து திருமணங்கள் நிச்சயம் செய்யப்படுகிறது.
(நட்சத்திர பொருத்த நூல்கள்
முகூர்த்த சிந்தாமணி, முகூர்த்த சாரம், முகூர்த்த ரத்னம், முகூர்த்த தத்துவம், முகூர்த்த சங்கீரம், முகூர்த்த தத்துவம், முகூர்த்தம் மாதவியம்,
கால விதானம், காலம்ருதம், ஆசார சங்கீரம், காலப்பரகாசிகை இன்னும் பல)
மேற்கூறிய நூல்களில் பரஸ்பர முரண்பாடுகள் நிறையவே உள்ளன. இவைகளில் 36 பொருத்தங்கள் கொடுக்கப்பட்டு அவைகளில் 23 (ராசி அடிப்படையில் 4 + ராசி அதிபதி 1 + நட்சத்திர அடிப்படையில் 18). தற்காலத்தில் அதுவும் சுருங்கி தசவித பொருத்தம் மட்டும் பார்க்க படுகிறது
அவை
தினம்,கணம்,மாகேந்திரம்,ஸ்தீரி தீர்க்கம்,யோனி,ராசி,ராசிஅதிபதி,வசியம்,ரஜ்ஜு,வேதை
இவைகளை தவிர ஜாதக பொருத்தம் கண்டிப்பாக பார்க்க பட வேண்டும்
அவைகள்
1. எல்லா பாவங்களுக்கும், கிரகங்களுக்கும் உள்ள தொடர்பு
2. சஷ்டாங்கம்
3. சூரிய தோஷம்
4. செவ்வாய் தோஷம்
5. 7மிட தோஷம்
6. 7மிட அதிபதி தோஷம்
7. சுக்ரன் தோஷம்
8. பாவகிரக தோஷம்
9. புத்திர தோஷம்
10. பஞ்சனை தோஷம்
11. திசா சந்தி
12. கோச்சர குரு, சனி நிலை
13. நடக்கும் திசா புத்திகள்
14. யோகி அவயோகி நிலை
15. தோஷ சாம்யம் உண்டா
16. பரிகாரம் உண்டா
ஆகியவைகள் கணக்கில் கொண்டு பொருத்தினால் நல்ல பலன்கள் கிட்டும்

மறைந்த புதன் நிறைந்த கலை

மறைந்த புதன் நிறைந்த கலை -
========================================
ஒருவருடைய ஜாதகத்தில் புதன் வக்கிர அஸ்தமனம் ஆகும் போது அதிபுத்திசாலியாக இருப்பார்கள் இதையே மறைந்த புதன் நிறைந்த கலை என்கிறோம்.இதுவே சில சமயங்களில் இவர்களுக்கு சட்ட விரோத நடவடிக்கைகளில், தீவிரவாத தொடர்புகளில் துணை போக வாய்ப்புகள் ஏற்படுத்திவிடும.
புதன் வக்கிர அஸ்தமனம்
==========================
புதன் சூரியனை சுற்றி வரும் போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் புதன் வருகின்றது. பூமியின் வேகமும் புதனின் வேகமும் வித்தியாசம் ஏற்படுகிறது. இதனால் புதன் வக்கிரகதியில் பின்னோக்கி வருவது போல் தோன்றுகிறது.
இவ்வாறு புதன் வக்கிர கதியில் சஞ்சரிப்பது போல் தோன்றும் காலத்தில் கிட்டத்தட்ட சூரியனுக்கும் பூமிக்கும் நேர்கோட்டில் புதன் சஞ்சரிக்கும் நிலை ஏற்படும். இப்படி வரும் போது புதனின் ஒரு பகுதி சூரியனை நோக்கி இருக்கும் மற்றொரு பகுதி பூமியை இருக்கும். சூரியனை நோக்கி உள்ள புதன் அதிக பிரகாசமாக இருக்கும் பூமியை நோக்கி உள்ள பகுதி இருட்டாக இருக்கும். இதன் காரணமாக நமக்கு புதன் புலப்படுவதில்லை. இதை தான் நாம் மறைந்த புதன் நிறைந்த கலைஎன்கிறோம்.
இதை பெரும்பாலும் ஜோதிடர்கள் ஜாதக்க்தில் குறிப்பிடுவதில்லை .
புதனின் – வக்கிரம் , அஸ்தமனம் – நான்கு நிலை
1. சகஜ நிலை
2. மகா அஸ்தமனம்
3. வக்கிரம்
4. வக்கிர அஸ்தமனம்