jaga flash news

Sunday 28 February 2016

மனித உறவுகள் மேம்பட.....!!!

மனித உறவுகள் மேம்பட.....!!!
1.தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். (Ego)
2. அர்த்தமில்லாமிலும்,தேவையில்லாமிலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள். (Loose Talks)
3.எந்த விடயத்தையும் பிரச்சனையும் நாசூக்காகக் கையாளுங்கள். (Diplomacy)
4.விட்டுகொடுங்கள். (Compromise)
5.சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆகவேண்டும் என்று உணருங்கள். (Tolerate)
6.நீங்கள் சொன்னதே சரி செய்வதே சரி என்று கடைசிவரை வாதாடதீர்கள். (Adamant Arguments)
7.குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். (Narrow Mindedness)
8.உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். (Carrying Tales)
9.மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வபடாதீர்கள். (Superiority Complex)
10. அளவுக்கு அதிகமாய்,தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள். (Over Expectation)
11.எல்லோரிடத்திலும் எல்லா விடயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
12.கேள்விப்படுகிற எல்லா விடயங்களையும் நம்பிவிடாதீர்கள்.
13.அற்ப விடயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.
14.உங்கள் கருத்துகளில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள். (Flexibility)
15.மற்றவர் கருத்துக்களை, செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். (Miss understanding)
16.மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள். (Courtesy)
17. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
18.பேச்சிலும், நடத்தையிலும் திமிர்த்தனத்தையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பாட்டையும் காட்டுங்கள்.
19.பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள். (Initiative)
20. தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள். பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை. அதுவே உங்களுக்கு வெற்றியாக அமையும்

உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.

 காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே
* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா
* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.
* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல
* தன் காயம் காக்க வெங்காயம் போதும்
* வாழை வாழ வைக்கும்
* அவசர சோறு ஆபத்து
* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்
* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு
* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை
*இருமலை போக்கும் வெந்தயக் கீரை
* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.
* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி
* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்
* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை
* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை
* சித்தம் தெளிய வில்வம்
* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி
* சூட்டை தணிக்க கருணை கிழங்கு
* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்
* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு
* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை
* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு
* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
* வாத நோய் தடுக்க அரைக் கீரை
* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்
* பருமன் குறைய முட்டைக்கோஸ்
* பித்தம் தணிக்க நெல்லிக்காய்
” உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.
நலம் உடன் வாழ்வோம்.

Saturday 27 February 2016

மூன்று விஷயங்கள்

1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை...
👉நேரம்
👉இறப்பு
👉வாடிக்கையளர்கள்
2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்...
👉நகை
👉பணம்
👉சொத்து
3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது...
👉புத்தி
👉கல்வி
👉நற்பண்புகள்
4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்...
👉உண்மை
👉கடமை
👉இறப்பு
5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை...
👉வில்லிலிருந்து அம்பு
👉வாயிலிருந்து சொல்
👉உடலிலிருந்து உயிர்
6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்...
👉தாய்
👉தந்தை
👉இளமை
7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது...
👉சொத்து
👉ஸ்திரி
👉உணவு
8.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு...
👉தாய்
👉தந்தை
👉குரு
நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி-
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு
வழிகாட்டும் ஏழு விஷயங்கள்
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்
கவனிக்க ஏழு விஷயங்கள்
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை..

முட்டைகோஸை ஜூஸ் போட்டு குடித்தால் அல்சர் குணமாகும்

முட்டைகோஸை ஜூஸ் போட்டு குடித்தால் அல்சர் குணமாகும்.

உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் வேக வைத்த

முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட வேண்டும்.

முட்டைகோஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இவை 

செரிமான மண்ட‌லத்தை சீராக இயக்கி மலச்சிக்கல் பிரச்‌சனையை குணமாக்கும்.

மேலும் உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய்


ஆகியவற்றை குணப்படுத்தும்.

சில பழக்கங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

சில பழக்கங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
* தியானத்தின் போது மூளை அணுக்களின் பலம் கூடுகிறது. தினமும் பதினைந்து நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டியது அவசியமாகும். காலையிலோ மாலையிலோ எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். தியானத்தின் போது அவசரம் இருக்கவே கூடாது. ஏதாவது ஒரு வேலையச் செய்ய மனதில் நினைத்துக் கொண்டு தியானம் செய்ய ஆரம்பிக்கக் கூடாது. உணவு உட்கொள்வதற்கு முன் செய்ய வேண்டும். உண்ட பின் மூன்று மணிநேர இடைவெளியின் பின் தியானம் செய்யலாம்.
* யார் வாழை இலையில் சாப்பிட்டு வருகிறார்களோ அவர்களுக்குத் தலைமுடி கறுப்பாகவே இருக்கும். சீக்கிரத்தில் நரைக்காது. வாழையிலையில் தனலஷ்மி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை, கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப் பழக்கம் மேற்கொண்டவர்கள் லஷ்மி கடாட்சம் பெறுவார்கள் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். பித்த - சிலேட்டும வியாதிகள் தணியும். ( தற்போது வாழை இலை கிராம பகுதிகளில்தான் கிடைக்கின்றது, பண்டிகை நாட்களில் நகரத்தில் கிடைக்கின்றது. மேலைநாடுகளிலோ இலை கிடைப்பது இன்னமும் அரிது. ஆகையால் வாழை இலை கிடைக்கக் கூடியவர்கள் மட்டும் வாழை இலையில் உண்பது நன்று. இலை கிடைத்தும் உண்ணாது இருத்தல் போல் ஒரு அறிவற்ற செயல் வேறு எதுவும் இருக்கமுடியாது. இலை கிடைக்காதவர்கள் அவர்கள் முறைப்படியே உணவருந்தலாம். தவறில்லை.)
* சுமங்கலிப் பெண்கள் ஸ்நானம் செய்யும் போது வெறும் தலையில் குளிக்கக் கூடாது. சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டுதான் தலை முழுக வேண்டும்.
* துளசி மாடத்திலிருந்து பூஜைக்கு வேண்டிய துளசியை ஒடிக்கக்கூடாது. துளசி மாடம் பூஜைக்குரியது. பூஜைத் தேவைக்கு வேண்டிய துளசியை தனியாக வேறு துளசிச் செடிகளில் இருந்து பறிக்க வேண்டும்.
* சுபகருமங்களுக்கெல்லாம் முதல் தேவையான பொருள் மஞ்சள், மங்கல கருமங்களுக்கு சிட்டை எழுதும்போது முதலில் எழுதப்படுவது மஞ்சள்தான்.
* மஞ்சள் பூசிக்குளிப்பது சுமங்கலிகள் மரவு. மஞ்சள் பூசிக் குளித்துவர துர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக வசீகரமுண்டாகும்.
* இல்லங்களில் காலை, மாலை மஞ்சள் நீர் தெளித்து வர லஷ்மி கடாட்சமுண்டாகும்.
* கணபதி, சூரியன், அம்பிகை, மஹாவிஷ்ணு, பரமசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஒரேயிடத்தில் வைத்துப் பூஜிப்பதே பஞ்சாயன பூஜையாகும்.
ர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக வசீகரமுண்டாகும்.
* இல்லங்களில் காலை, மாலை மஞ்சள் நீர் தெளித்து வர லஷ்மி கடாட்சமுண்டாகும்.
* கணபதி, சூரியன், அம்பிகை, மஹாவிஷ்ணு, பரமசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஒரேயிடத்தில் வைத்துப் பூஜிப்பதே பஞ்சாயன பூஜையாகும்.
* சூரியனால் உடலாரோக்கியம் பெற்று அம்பிகை ஆகிய தாயின் ஆசியால் கிடைக்கும் சிறந்த வாழ்வை அடைந்து விஷ்ணுவினால் இம்மையின்பம் பெற்று சிவபிரானால் காமக் குரோதாதி புறப்பகைகளை வென்று அஞ்ஞானம் நீக்கி மோஷத்தை அடைவதற்கு வாழ்வில் வரும் தடைகளை கணபதி அருளால் நீக்கி நற்கதி அடைவதே பஞ்சாயதன பூஜைச் சிறப்பாகும்.
* வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்வது நல்லதல்ல. இதனால் லஷ்மிதேவி சஞ்சலமான நிலையைப் பெற்று வீட்டிலுள்ளவர்களின் ஐஸ்வர்யங்களை ஏற்றத்தாழ்வுக்கு இடமாக்குவாள்.
* தீபத்தின் ஜூவாலை கிழக்குமுகமாக இருந்தால் சர்வபீஷ்டங்களும் ஐஸ்வரியமும் உண்டாகும். வடக்கு முகமாக எரிந்தால் நோய் நீங்கிச் சுகமுண்டாகும். வடகிழக்கு முகமானால் ஷேமலாபமுண்டாகும்.
* மேல் நோக்கி நெடிதாயெரியும் ஜூவாலை ஆரோக்கியத்திற்கும் சரீர சுக போகங்களுக்கும் அறிகுறியாகும்.
* சக்தி, திறமை, வீர்யம் இவற்றைச் சகல ஜீவராசிகளுக்கும் வழங்கி என்றும் மாறா இளமையுடன் திகழ்வது சூரியன். சூரிய வழிபாடு கர்மவினைகளையும், நாகதோஷம் முதலியவற்றையும் பிற சோதிடரீதியான தோஷங்களையும் நீக்கும்.
* சூரிய வழிபாடு கண்பார்வை விருத்திக்கும், இரத்த விருத்திக்கும் உகந்ததென விஞ்ஞானம் நிரூபிக்கின்றது. உடலில் சூரியஒளி படுவதால் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ஆயுள் கூடும். விற்றமின் டி சூரியனின் ஒளியில் உண்டு. இதனால்தான் மேலைநாட்டவர் சூரிய குளிப்பு செய்கின்றனர்.
* குழந்தைகள் பிறந்தபின் ஜாதகர்மம், நாமகரணம் என்பவற்றின் போது உபநிஷ்க்ரமணம் என்ற கிரியையில் குழந்தையை சூரிய வெளிச்சம் படும்படி முதன்முதல் வீட்குக்கு வெளியே கொண்டுவருதல் உண்டு. உடல்முழுதும் நல்லெண்ணய் பூசி வெற்றுடம்புடன் இளவெயிலில் கிடத்துதலும் குறிப்பிடத்தக்கது.
* இல்லங்களில் மாலைநேரத்தில் விளக்கேற்றும்போது பூஜையறை ஜன்னலை மூடிவிட வேண்டும். வீட்டின் முன்புற வாசலை திறந்திருத்தலும், பின்பக்க வாசலை பூட்டியிருத்தலும் வேண்டும்.
* வழிபாடு முடிந்த பின் விளக்குச் சுடர் மீது சில அட்சதை மணிகளைத்தூவி அல்லது மலரொன்றை வைத்து மெதுவாக அணைத்து விடலாம். வீசி அணைத்தலும் ஊடுபற்றி எரிய விடுதலும் ஆகாது.
* அரசமரம் வழிபாட்டுக்கு உகந்ததெனினும் சனிக்கிழமை காலை வேளையில் மட்டுமே அதைப் பிரதஷணம் செய்வதும் தொட்டு வணங்குவதும் செய்யலாம். அந்நாளில் மட்டுமே லஷ்மி நாராயணரின் பிரசன்னம் அங்கு இருக்கும். மற்ற நாட்களில் தொடக் கூடாது.
* சமுத்திர ஸ்நானம் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே செய்யலாம்.

அரோகரா' என்றால் என்ன?

அரோகரா' என்றால் என்ன?
'அரோஹரா' அல்லது 'அரோகரா' என்பது 'அர ஹரோ ஹரா'
என்ற சொற்களின் சுறுக்கம். இதற்கான பொருள்,
'இறைவனே, துன்பங்களை நீக்கி
எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக'
... என்பதாகும்.
முன்பு, சைவர்கள் (சைவ சமயத்தினர்) இதனைச்
சொல்வது வழக்கமாக இருந்தது. திருஞானசம்பந்தர் ஒருமுறை
பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்யும்போது, அவரைச் சுமந்துகொண்டு
வந்தவர்கள் 'ஏலே லோ ஏலே லோ' என்று களைப்பைக்
குறைப்பதற்காக பாடிக்கொண்டு வந்தனர். இதைச் செவிமடுத்த
திருஞானசம்பந்தர், பொருளற்ற ஒன்றைச் சொல்வதைவிட
பொருளோடு ஒன்றைச் சொன்னால் நல்லது என்று, 'அர ஹரோ
ஹரா'என்பதைக் கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு 'அர ஹரோ
ஹரா' என்றுச் சொல்வது வழக்கமாயிற்று. காலப்போக்கில் சைவர்கள்
இதனைச் சொல்லும் பழக்கம் குறைந்தது. ஆனால், கௌமாரர்கள்
(முருகனடியார்கள்),
'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா'.
... என்றுச் சொல்லி வந்ததால் இச்சொற்கள் முருகனோடு
இணைந்துவிட்டன! பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா' என்றுச் சொல்வது,
'வெற்றி வேலைக் கொண்ட முருகனே, எங்கள்
வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களைப் போக்கி,
நற்கதியை அருள்வாயாக'
... என்று உரிமையோடு முறையிடுவதாகும்.
முருகனே முழுமுதல் இறைவன் என்ற நம்பிக்கையைக்
கொண்டவர்கள் இனி,
'வெற்றிவேல் இறைவனுக்கு அரோகரா'.

சாப்பிடுவது எப்படி

சாப்பிடுவது எப்படி ..
சமைப்பது எப்படி?' படித்திருக்கிறோம். "சாப்பிடுவது எப்படி?' அதற்கும் சாஸ்திரம் இருக்கிறது.
* பகலில் ஒரு வேளையும், இரவில் ஒரு வேளையும் மட்டுமே போஜனம் செய்ய வேண்டும். சந்தியா காலம், விடியற்பொழுது, நடுநிசி ஆகிய வேளைகளில் எதையும் புசிக்கலாகாது.
* தாமரை இலை தவிர, வேறு எந்த இலையிலும் பின்புறத்தில் சாப்பிடக் கூடாது.
* போஜன காலத்தில் பேசினால், ஆயுள் குறையும்.
* ஈர வஸ்திரத்துடனும், ஒற்றை வஸ்திரத்துடனும் சாப்பிடக் கூடாது.
* மனைவி சாப்பிடும் போது, கணவன் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
* பந்தி போஜனம் பண்ணும்போது, முன்னதாக எழுந்து விடலாகாது. அப்படி எழுந்து விட்டால், அந்தப் பந்தியைச் சேர்ந்த மற்றவர்களின் பாவத்தை அவன் அடைய வேண்டும்.
* பழம், பட்சணம் இவைகளைக் குழந்தைகளுக்கு முதலிலும், மற்ற பதார்த்தங் களைப் பெரியவர்களுக்கு முதலிலும் பரிமாற வேண்டும்.

Friday 26 February 2016

nataraja

விருப்பு வெறுப்பற்ற தன்மை

ஒரு கிராமத்தில் ஒர் நாகபாம்பு இருந்தது. அந்த பாம்பு வழியிலே யாரையும் செல்லவிடாது..அங்கு சென்ற பலரை தீண்டி கொன்றது. கிராமத்தினர் அந்த வழியை உபயோகிக்கவே அஞ்சினர். ஒரு நாள் அந்த வழியாக ஒரு குரு வந்தார்.. அந்த வழியை அவர் கடக்க முற்பட்ட போது எல்லோரும் அவரை தடுத்தார்கள் ஆனாலும் அவர் போனார்.
★அவரை தீண்ட அந்த நாகம் வந்தது.. ஆனால் அவர் தன்மை நாகபாம்பையே அமைதியடைய செய்தது. அந்த நாகபாம்பிடம் குரு "ஏன் நாசம் செய்கிறாய், கொலையாளி ஆகி என்ன அடையப்போறாய், அதில் என்ன பயன்" என கூறி அதற்கு அமைதியை கற்றுக் கொடுத்தார்..அன்றில் இருந்து அந்த நாகம் அமைதி காக்க தொடங்கியது.!
★யாரையும் அதற்கு தீண்ட பிரியம் இல்லையென அறிந்த கிராம மக்கள் தைரியம் பெற்று அந்த நாகபாம்பை கல்லெறிவதும் குச்சி கொண்டு அடிப்பதுமாக துன்புறுத்தினார்கள். அது துன்பம் தாங்க முடியாது புற்றில் உணவின்றி ஒளிந்து இருந்தும் அதை கொடுமைப் படுத்தினார்கள்.
★ஒரு வருடத்துக்கு பின் அந்த குரு அந்த பக்கமாக வந்தார். பரவசத்தோடு அவர்பாதத்தில் வந்து பணிந்து நின்றது. அதன் உடலில் தழும்புகளை கண்ட குருக்கு எல்லாம் புரிந்து. "உனக்கு என்ன நடந்தது என்றார்..?" அது யார்மீதும் குற்றம் சுமத்தாத தன்மை அடைந்ததால் ,நான் சாப்பிடாமல் பலவீனமாகி விட்டேன்"என்றது.. அது மட்டுமல்ல உடலில் என்ன தழும்பு என கேட்டார். உள்ளூரில் இருப்பவர்கள் என்னை அடித்து சந்தோசம் அடைகிறார்கள் என்றது.
★உன்னை யாரையும் தீண்ட வேண்டாம் என்றுதான் சொன்னேன் சீறவேண்டாம் என்று சொல்லவே இல்லையே, சீறாமல் இருப்பதுதான் ஆன்மீகம் என்றல்ல, நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு விட்டாய். நீ சீற வேண்டிய நேரத்தில் சீறாவிட்டால் உன்னை பாம்பு என்பதையே மறந்து விடுவார்கள் என கூறி அன்போடு தடவி விட்டு போனார் குரு.
★ஆம். நாமும் இந்த உலகில் சிலசமயம் சீறவேண்டிதான் உள்ளது.. ஆனால் அதில் ஒரு கிராமத்தில் ஒர் நாகபாம்பு இருந்தது. அந்த பாம்பு வழியிலே யாரையும் செல்லவிடாது..அங்கு சென்ற பலரை தீண்டி கொன்றது. கிராமத்தினர் அந்த வழியை உபயோகிக்கவே அஞ்சினர். ஒரு நாள் அந்த வழியாக ஒரு குரு வந்தார்.. அந்த வழியை அவர் கடக்க முற்பட்ட போது எல்லோரும் அவரை தடுத்தார்கள் ஆனாலும் அவர் போனார்.
★அவரை தீண்ட அந்த நாகம் வந்தது.. ஆனால் அவர் தன்மை நாகபாம்பையே அமைதியடைய செய்தது. அந்த நாகபாம்பிடம் குரு "ஏன் நாசம் செய்கிறாய், கொலையாளி ஆகி என்ன அடையப்போறாய், அதில் என்ன பயன்" என கூறி அதற்கு அமைதியை கற்றுக் கொடுத்தார்..அன்றில் இருந்து அந்த நாகம் அமைதி காக்க தொடங்கியது.!
★யாரையும் அதற்கு தீண்ட பிரியம் இல்லையென அறிந்த கிராம மக்கள் தைரியம் பெற்று அந்த நாகபாம்பை கல்லெறிவதும் குச்சி கொண்டு அடிப்பதுமாக துன்புறுத்தினார்கள். அது துன்பம் தாங்க முடியாது புற்றில் உணவின்றி ஒளிந்து இருந்தும் அதை கொடுமைப் படுத்தினார்கள்.
★ஒரு வருடத்துக்கு பின் அந்த குரு அந்த பக்கமாக வந்தார். பரவசத்தோடு அவர்பாதத்தில் வந்து பணிந்து நின்றது. அதன் உடலில் தழும்புகளை கண்ட குருக்கு எல்லாம் புரிந்து. "உனக்கு என்ன நடந்தது என்றார்..?" அது யார்மீதும் குற்றம் சுமத்தாத தன்மை அடைந்ததால் ,நான் சாப்பிடாமல் பலவீனமாகி விட்டேன்"என்றது.. அது மட்டுமல்ல உடலில் என்ன தழும்பு என கேட்டார். உள்ளூரில் இருப்பவர்கள் என்னை அடித்து சந்தோசம் அடைகிறார்கள் என்றது.
★உன்னை யாரையும் தீண்ட வேண்டாம் என்றுதான் சொன்னேன் சீறவேண்டாம் என்று சொல்லவே இல்லையே, சீறாமல் இருப்பதுதான் ஆன்மீகம் என்றல்ல, நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு விட்டாய். நீ சீற வேண்டிய நேரத்தில் சீறாவிட்டால் உன்னை பாம்பு என்பதையே மறந்து விடுவார்கள் என கூறி அன்போடு தடவி விட்டு போனார் குரு.
★ஆம். நாமும் இந்த உலகில் சிலசமயம் சீறவேண்டிதான் உள்ளது.. ஆனால் அதில் ஒரு கிராமத்தில் ஒர் நாகபாம்பு இருந்தது. அந்த பாம்பு வழியிலே யாரையும் செல்லவிடாது..அங்கு சென்ற பலரை தீண்டி கொன்றது. கிராமத்தினர் அந்த வழியை உபயோகிக்கவே அஞ்சினர். ஒரு நாள் அந்த வழியாக ஒரு குரு வந்தார்.. அந்த வழியை அவர் கடக்க முற்பட்ட போது எல்லோரும் அவரை தடுத்தார்கள் ஆனாலும் அவர் போனார்.
★அவரை தீண்ட அந்த நாகம் வந்தது.. ஆனால் அவர் தன்மை நாகபாம்பையே அமைதியடைய செய்தது. அந்த நாகபாம்பிடம் குரு "ஏன் நாசம் செய்கிறாய், கொலையாளி ஆகி என்ன அடையப்போறாய், அதில் என்ன பயன்" என கூறி அதற்கு அமைதியை கற்றுக் கொடுத்தார்..அன்றில் இருந்து அந்த நாகம் அமைதி காக்க தொடங்கியது.!
★யாரையும் அதற்கு தீண்ட பிரியம் இல்லையென அறிந்த கிராம மக்கள் தைரியம் பெற்று அந்த நாகபாம்பை கல்லெறிவதும் குச்சி கொண்டு அடிப்பதுமாக துன்புறுத்தினார்கள். அது துன்பம் தாங்க முடியாது புற்றில் உணவின்றி ஒளிந்து இருந்தும் அதை கொடுமைப் படுத்தினார்கள்.
★ஒரு வருடத்துக்கு பின் அந்த குரு அந்த பக்கமாக வந்தார். பரவசத்தோடு அவர்பாதத்தில் வந்து பணிந்து நின்றது. அதன் உடலில் தழும்புகளை கண்ட குருக்கு எல்லாம் புரிந்து. "உனக்கு என்ன நடந்தது என்றார்..?" அது யார்மீதும் குற்றம் சுமத்தாத தன்மை அடைந்ததால் ,நான் சாப்பிடாமல் பலவீனமாகி விட்டேன்"என்றது.. அது மட்டுமல்ல உடலில் என்ன தழும்பு என கேட்டார். உள்ளூரில் இருப்பவர்கள் என்னை அடித்து சந்தோசம் அடைகிறார்கள் என்றது.
★உன்னை யாரையும் தீண்ட வேண்டாம் என்றுதான் சொன்னேன் சீறவேண்டாம் என்று சொல்லவே இல்லையே, சீறாமல் இருப்பதுதான் ஆன்மீகம் என்றல்ல, நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு விட்டாய். நீ சீற வேண்டிய நேரத்தில் சீறாவிட்டால் உன்னை பாம்பு என்பதையே மறந்து விடுவார்கள் என கூறி அன்போடு தடவி விட்டு போனார் குரு.
★ஆம். நாமும் இந்த உலகில் சிலசமயம் சீறவேண்டிதான் உள்ளது.. ஆனால் அதில்
 விருப்பு வெறுப்பற்ற தன்மையில் சீறவேண்டும் இல்லாவிட்டால் நாம் மனிதர் 
என்பதையே மறந்து விடுவார்கள் .யில் சீறவேண்டும் இல்லாவிட்டால் நாம் மனிதர் என்பதையே மறந்து விடுவார்கள் . இல்லாவிட்டால் நாம் மனிதர் என்பதையே மறந்து விடுவார்கள் .

பெரிய புராணங்கள் 18

பெரிய புராணங்கள் 18 ஒரு பார்வை:-
வேதங்கள், உபநிஷத்துகள், இதிகாசங்கள் ஆகியவற்றிற்கு அடுத்த இடத்தில் இருப்பவை புராணங்கள்.
நான்கு வேதங்களும் அநாதி காலந்தொட்டு ‘ஸ்ருதி’களாக இருந்து வருபவை.
‘உபநிஷத்துகள்’ ஒவ்வொரு வேதத்தின் ‘ஆரண்யகம்’ பகுதியில் பல இடங்களில் விரவியிருக்கின்றன. சில நேரங்களில் ‘உபநிஷத்துகளும்’, ‘ஆரண்யகம்’ என்றும் ‘வேதாந்தம்’ என்றும் அழைக்கப்படும்.
வால்மீகி இராமாயணம், வியாச மகாபாரதம் இரண்டு மட்டுமே இதிகாசங்கள் என்றழைக்கப்படுகின்றன. இதிகாசம் என்றால் இப்படித்தான் நடந்தது என்று பொருள் படும். அதாவது அவை உண்மை வரலாறுகள். அவற்றில் கற்பனைக்கு அதிக இடமில்லை.
அடுத்து வருபவை புராணங்கள். வேதங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றில் உள்ள உட்பொருளை சற்றுக் கற்பனையும் கலந்து யாவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய கதை வடிவில் உள்ளவை புராணங்கள். ‘புராண’ என்ற சொல்லுக்கு மிகப் பழைமையானது என்ற பொருள் உண்டு. வேதங்களின் அங்கங்களாக உள்ள பிராம்மணங்களில் கூட புராணங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
நான்கு வேதங்களையும் தொகுத்த வேதவியாசரே புராணங்களையும் தொகுத்துக் கொடுத்துள்ளார்.
திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகிய மூவரும் உருவாகக் காரணமாக இருந்த வேதவியாசரே அவர்களின் உண்மை வரலாற்றை உடனிருந்து மகாபாரதம் என்ற இதிகாசமாக இயற்றியதுடன் ஸ்ரீமத் பாகவத புராணம் என்பதையும் இயற்றியுள்ளார்.
புராணங்களில் 18 பெரிய புராணங்களும் 18 சிறிய உபபுராணங்களும் இருக்கின்றன. பதினெட்டுப் பெரிய புராணங்களைப் பற்றிய விவரங்களை இனி பார்ப்போம்.
விஷ்ணுவையும் அவரது அவதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டவை: 1.விஷ்ணு புராணம். 2.மத்ஸ்ய புராணம். 3.கூர்ம புராணம். 4.வராஹ புராணம். 5.வாமன புராணம். 6.கருட புராணம். 7.ஸ்ரீமத் பாகவத புராணம்.
சிவபெருமானைக் குறித்த புராணம்: லிங்க புராணம்.
பிரம்மனுடன் தொடர்புடைய புராணங்கள்: 1.பிரம்ம புராணம். 2.பத்ம புராணம். 3.பிரம்ம வைவர்த்த புராணம். 4. பிரம்மாண்ட புராணம்.
மற்ற புராணங்கள்: 1.அக்னி புராணம். 2.வாயு புராணம். 3.பவிஷ்ய புராணம். 4.நாரதீய புராணம். 5.ஸ்காந்தம் (கந்த புராணம்). 6.மார்க்கண்டேய புராணம்.
விஷ்ணு புராணம்
இது மிகவும் பழைமையானது. ஆறு காண்டங்களையும், ஒவ்வொரு காண்டத்திலும் ஐந்து பெரும் பிரிவுகளையும் கொண்டது. பராசர மகரிஷி, மைத்ரேயருக்கு உபதேசம் செய்ததே விஷ்ணு புராணமாகும்.
மத்ஸ்ய புராணம்
விஷ்ணுவின் முதலாவது அவதாரமான ‘மத்ஸ்யம்’ (மீன்) தன்னைக் குறித்து மனுவிடம் விவரிப்பதாக உள்ளது இப்புராணம். பதிமூன்றாயிரம் ஸ்லோகங்களை உள்ளடக்கிய இப்புராணம் பல மன்னர்களின் வரலாறுகளைக் கதைபோல விவரிக்கிறது.
கூர்ம புராணம்
விஷ்ணுவின் இரண்டாவது அவதாரமான கூர்மம் (ஆமை) இந்திரத்யும்னன் என்று மன்னனிடம் விவரிப்பது போல அமைந்துள்ளது. இதில் எட்டாயிரம் ஸ்லோகங்கள் உள்ளன. இப்புராணத்தில்தான் முதன் முதலாக ஜம்புஸ்த்வபம் என்பதாக நமது பரதக்கண்டத்தின் பூகோள அமைப்பு விவரிக்கப்படுகிறது.
வராஹ புராணம்
விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராஹ அவதாரத்தை பதினான்காயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கிறது இப்புராணம்.
வாமன புராணம்
பத்தாயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட இப்புராணம் வாமன அவதார வரலாற்றை மட்டுமல்லாது பரமேஸ்வரன்-பார்வதி ஆகியோரின் திருமண வரலாற்றையும் கூட விரிவாக விவரிக்கிறது.
கருட புராணம்
மகாவிஷ்ணுவானவர், தமது வாகனமாகிய கருடனுக்கு எட்டாயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கும் செய்திகளே இப்புராணம். இதில் மருத்துவம், வான் ஆராய்ச்சி, மரணத்திற்குப் பின் மனிதர்கள் அடையும் நிலைகள் ஆகியவையும் விளக்கப்படுகின்றன.
ஸ்ரீமத் பாகவத புராணம்
வியாசரே எழுதியது. மகாபாரதத்தில் முழுமையாக இடம் பெறாத ஸ்ரீகிருஷ்ணரின் முழு வரலாறும், விஷ்ணுவின் பிற அவதாரங்கள் குறித்த செய்திகளும், பன்னிரண்டு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டு பதினெட்டாயிரம் ஸ்லோகங்களாக விவரிக்கப்பட்டுள்ளன.
லிங்க புராணம்
சிவபெருமானைக் குறித்தும் அவரது 28 வடிவங்களைப் பற்றியும் பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கிறது இப்புராணம். லிங்க வழிபாட்டின் தோற்றமும், காரணமும், சிவபெருமானின் அவதார லீலைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
பிரம்ம புராணம்
பிரம்மன் தட்சப் பிரஜாபதிக்கு விவரிப்பதாக உள்ள இப்புராணத்தில் 25,000 ஸ்லோகங்கள் உள்ளன.
பத்ம புராணம்
ஆறு காண்டங்களில் 55,000 ஸ்லோகங்களைக் கொண்ட பெரிய புராணம் இது. பிரம்மனின் பத்மாசனம் விவரிக்கப்படுவதால் இது பத்ம புராணம் என்று பெயர் பெற்றது.
பிரம்மவைவர்த்த புராணம்
பிரம்மகாண்டம், ப்ரக்ருதி காண்டம், கணேச காண்டம், கிருஷ்ண ஜன்ம காண்டம் ஆகிய பிரிவுகளுடன் பதினெட்டாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. இதில் உள்ள கணேச காண்டம் என்ற பகுதிதான் விநாயக புராணம் என்ற உபபுராணமாக பின்னர் உருவானது. “கிருஷ்ண ஜன்ம காண்டம்” என்ற பகுதிகளில் உள்ள தகவல்களை ஸ்ரீமத் பாகவத புராணத்திலும் காணலாம்.
பிரம்மாண்ட புராணம்
பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட இப்புராணம் ஒரு பொன்னிற முட்டையிலிருந்துதான் நமது பிரபஞ்சம் (பிரம்மாண்டம்-ஹிழிமிக்ஷிணிஸிஷிணி) தோன்றி விரிவடைந்தது என்று விவரிக்கிறது. நவீன விஞ்ஞானம் தற்காலத்தில் நம்பும் பெருவெடிப்பு (ஙிவீரீ ஙிணீஸீரீ) என்ற நிகழ்வை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தொகுக்கப்பட்ட இப்புராணத்தில் காணலாம்.
அக்னி புராணம்
அக்னிதேவன் வசிஷ்ட மகரிஷிக்கு விவரித்தது இப்புராணம். சிவலிங்கம், துர்க்கை, இராமர், கிருஷ்ணர் ஆகியோரைப் பற்றியும், நாடகம், சிற்பம், ஜோதிடம் போன்ற கலைகளைப் பற்றியும் விவரிக்கிறது என்பது இப்புராணத்தின் சிறப்பாகும்.
வாயுபுராணம்
பதினான்காயிரம் ஸ்லோகங்களைக் கொண்டு இப்புராணத்தில் கி.பி. நான்காம் நூற்றாண்டில் ஆண்ட குப்த வம்சத்து மன்னர்களைப் பற்றியும், கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணபட்டர் என்பவரைப் பற்றியும் கூட தகவல்களைத் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பவிஷ்ய புராணம்
வருங்காலத்தில் என்னென்ன நிகழ்வுகளெல்லாம் நடக்க இருக்கின்றன என்று சூரியன் முன் கூட்டியே மனுவுக்குத் தெரிவிப்பதாக அமைந்தது இப்புராணம். ஸ்தலங்களைப் பற்றியும் அங்கெல்லாம் யாத்ரிகர்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகளைப் பற்றியும் கூட இப்புராணம் விவரிக்கிறது.
நாரதீய புராணம்
நாரத மகரிஷியானவர் சனத்குமாரருக்கு உபதேசித்தது இப்புராணம். 25,000 ஸ்லோகங்கள் இதில் உள்ளன.
ஸ்காந்தம்
முருகனின் வரலாற்றை விவரிப்பதுதான் இப்புராணம்
மார்க்கண்டேய புராணம்
மிகப்பழைமையான புராணம் இது. இதிலுள்ள தேவி மகாத்மியம் என்ற பகுதிதான், பின்னர் தனியான ஓர் உப புராணமாக உருவெடுத்தது.
மேற்குறிப்பிட்ட பதினெட்டு பெரிய புராணங்களும் தேவபாஷையாகிய சம்ஸ்கிருதத்தில்தான் உள்ளன என்றாலும் பிற்காலங்களில் பாரத நாட்டின் பல்வேறு பாஷைகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ஸ்காந்தம் தமிழில் கச்சியப்ப சிவாச்சாரியரால் கந்தபுராணம் என்ற பெயரில் வழிநூலாக எழுதப்பட்டது. ஹாலாஸ்ய மகாத்மியம் என்ற உப புராணம் தான் பின்னர் திருவிளையாடற் புராணம் என்ற பெயரில் தமிழில் உருவெடுத்தது.

குணங்களில் பிணைக்கப்பட்டுள்ள மனிதன் கா்மங்களை விட்டுவிடுவதால் என்ன நடக்கும் ?

குணங்களில் பிணைக்கப்பட்டுள்ள மனிதன் கா்மங்களை விட்டுவிடுவதால் என்ன நடக்கும் ?
கா்மேந்திாியங்களை அடக்கி, இந்திாிய விஷயங்களை மனதால் எண்ணிக் கொண்டிருக்கும் மூடன் பொய்யொழுக்கமுடையவன் என்று கூறப்படுகிறான். 3.6
இரு சக்கர வாகனத்தில், எாி சக்தியானது ஒரு புறம் வாகனத்தை உந்தித் தள்ளுகிறது. மற்றொரு புறம் வாகனத்தின் இயக்கத்தை நாம் தடுப்பது முறையற்ற செயல். முதலில் திரவ வடிவிலான எாி சக்தி வாகனத்துக்கு கிடைப்பதை நிறுத்த வேண்டும். பின்பு வாகனத்தை நிறுத்த வேண்டும்.
அது போன்றே, முக்குணங்களில் கட்டுப்பட்டிருக்கும் போது ஆன்மாவுக்கு, மனம் என்ற ஒன்று இருக்கிறது. மனம் ஒயாமல் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஐம்புலன்களை மட்டும் தடுக்க முயற்சிப்பது முறையற்ற செயல். மனிதனுடைய பாவ புண்ணியங்கள் அவனுடைய செயல்களைச் சாராமல் அவன் மன நிலைமையைத்தான் சாா்ந்துள்ளன.

எல்லாம் விதியின்படிதான் நடக்கும்…!



எல்லாம் விதியின்படிதான் நடக்கும்…!
ஒரு நாள் …எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் :
“மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் ”
மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !!
எமதர்மன் சொன்னான் : ” நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது …..”
மனிதன்: ” சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் ”
எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் !
அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!!
மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் ….
எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான் “நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய் ,அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன்…என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து இல்லாமல் ,பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான் “!!!
கதையின் நீதி :
எல்லாம் விதியின்படிதான் நடக்கும் …….
நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட ……

அடங்கிய மனதால் இந்திாியங்களை கையாளுவது எப்படி ?


அடங்கிய மனதால் இந்திாியங்களை கையாளுவது எப்படி ?
அா்ஜுனா, இந்திாியங்களை மனதினால் அடக்கிப் பற்றற்று, கா்மேந்திாியங்களை கொண்டு கா்மயோகம் செய்பவன் மேலானவன் 3.7
இறைவனுக்கு நைவேத்தியமாக உணவு சமைக்கும் போது மனஈடுபாட்டுடன் தயாா் செய்கிறோம். இது பூஜைக்காக தயாாிக்கப்படும் உணவு என்பதால் அதன் மேல் ஆசை உண்டாவதில்லை. பிறகு உண்ணும் போது இறைவனுடைய பிரசாதம் என்ற அமைதியோடு அதை ஏற்கிறோம்.
உண்பது கா்மம், சுவைப்பது ஞானம், தனக்கேற்ற இன்பம் தருவது என்று ரசிப்பது போகம், அதே சுவையை ஈசுவரப் பிரசாதமாக போற்றுவது யோகம். இதுவே இந்திாியங்களை கையாளும் முறை.
நித்திய கா்மமும், யக்ஞ கா்மமும்…

எது தானம் ? எது தர்மம் ?

எது தானம் ? எது தர்மம் ?
~~~~~~~~~~~~~~~~~~~
மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது.
சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.
இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார்.
சூரியனே,
என்ன தடுமாற்றம் உன் மனதில் ?
கேட்டது ஈசன்.
பரம்பொருளே..
பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன்.
ஆனால்,
எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது?
இது அநீதி அல்லவா? என
கேட்டார் சூரியத் தேவன்.
இறை சிரித்தது.
சூரியனே...
நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது, சொல்கிறேன் கேள்...
தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட....
ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.
கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை.
எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்.
அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா ?
கேட்ட ஈசனை வணங்கிய சூரியத் தேவன்.
புரிந்தது இறைவா !
தானமும்
தர்மமும்
பாவமும்
புண்ணியமும்
எல்லாமும் நீயே
என்பதும் புரிந்தது என்றார்.
கேட்டு கொடுப்பது தானம் !
கேட்காமல் அளிப்பது தர்மம் !

சர்ப்ப தோஷம் விலக 8 வெள்ளிக்கிழமை கால பைரவர் வழிபாடு

சர்ப்ப தோஷம் விலக 8 வெள்ளிக்கிழமை கால பைரவர் வழிபாடு
ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் லக்னம் அல்லது 2 ஆம் இடத்தில் ராகு அல்லது கேது நின்றால் அது சர்ப்ப தோஷம் ஆகும். வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் கால பைரவருக்கு பாலபிஷேகம் செய்து புனுகு பூச வேண்டும்; பிறகு நாகலிங்கப்பூமாலை சார்த்தி பால் பாயாசம், பால் சாதம் இவைகளை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். யாருக்கு சர்ப்ப தோஷம் இருக்கிறதோ, அவர் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்; அதன்பிறகு, கால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து கொண்டு காலபைரவர் 108 போற்றி அல்லது காலபைரவர் அஷ்டோத்திரத்தை மனதுக்குள் ஒருமுறை ஜபிக்க வேண்டும். பிறகு நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும். இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்தால் நிம்மதியும், சிறந்த வாழ்க்கைத்துணையும் அமைந்துவிடும். லக்னம் அல்லது இரண்டாமிடத்தில் ராகு அல்லது கேது இருந்து ராகு மஹாதிசை அல்லது கேது மஹாதிசை வந்தால், அந்த திசை முழுவதும் வாரம் தவறாமல் இந்த வழிபாட்டைச் செய்து வர வேண்டும். இந்த திசை முழுவதுமே அசைவம், மது, போதைப்பொருட்களை கைவிட வேண்டும். அவ்வாறு கைவிட்டு இந்த வழிபாட்டைச் செய்து வந்தால், ராகு மற்றும் கேதுவால் ஏற்பட இருக்கும் அவமானங்கள் படிப்படியாக விலகிவிடும்.

kaluthai

உறவுகள் புனிதமானவை

எல்லா உறவுமுறைகளையும் ஒருவித கட்டுக்குள் கொண்டுவர முடியும் ஆனால் தாய் தந்தைக்கு பிறகு உங்களால் வரையறுக்கவே முடியாத அளப்பறிய பாசத்தை கொண்டது தாய்மாமன் உறவு! 
என்னுடைய பள்ளிக்காலங்களில் கோடைவிடுமுறை வந்துவிட்டால் நான் என்னுடைய தம்பி தங்கை மூவரையும் தூரத்தில் இருக்கும் பாட்டிவீட்டில் கொண்டுபோய் விட்டு விடுவார்கள்!
இது தொடர்ந்து ஏழெட்டு வருடங்கள் நடந்தது அப்போதெல்லாம் தாத்தா பாட்டி இருந்தார்கள் எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் தாத்தா பாட்டியே செய்துவிடுவார்கள் அதனால் மாமாவைப்பற்றி அதிகம் தெரியவில்லை ஒவ்வொரு தீபாவளிக்கும் தாத்தா வெல்லத்தால் செய்த அதிரசத்தை கொண்டுவந்து கொடுப்பார்
தாத்தா பாட்டி இறந்ததும் அந்த ஊர் உடனான எல்லா தொடர்பும் அறுந்துவிட்டதாக உணர்ந்தேன்
தாத்தா பாட்டியை மாமா சரியாக பார்த்துக்கொள்ளவில்லை என்ற கோபம் அம்மாவுக்கு இன்னும் இருக்கிறது !
ஆனால் தாத்தாவிற்கு பிறகு ஒவ்வொரு தீபாவளிக்கும் மாமா அதிரசம் கொண்டுவருவார்
ஒரு நாள் கூட தவறாமல் சரியாக தீபாவளி அமாவாசையன்று இங்கு இருப்பார், இது ஒருவருடம் இரண்டு வருடம் இல்லை
15 வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது
அம்மா மாமாவோடு சரியாக பேசுவதில்லை
ஆனாலும் வருவார்
அவரின் இரண்டு மகள்களில் ஒருவரை எங்கள் வீட்டில் திருமணம் செய்துகொடுக்க ஆசைப்பட்டார்
முடியாமல் போனது, ஆனாலும் வருகிறார் !
மாமாவின் மகள்களுக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்து மாமா இப்போது தாத்தாவாகிவிட்டார்! ஆனாலும் அவர் வருவது நிற்கவில்லை!
மாமா படிப்பறிவு இல்லாதவர், வெகுளியான குணம் கொண்டவர்,
நான்கு பஸ்கள் மாறிதான் அவர் எங்கள் ஊருக்கு வரவேண்டும், இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட அவரோ அவர் கொண்டுவரும் அதிரசமோ வரத்தவறியதே இல்லை,
தன்னுடைய வாழ்நாள் கடமையாக நினைத்து இதை செய்துகொண்டு இருக்கிறார் என்றே தோன்றுகிறது
சிறுசிறு சண்டைகளுக்கெல்லாம் உறவுகளை முறித்துக்கொள்ளும்
இந்த காலத்தில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் விட்டுக்கொடுக்காமல் எப்படியாவது உறவை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று பதினைந்து வருடங்களாக அதிரசத்தோடு பயணித்து கொண்டிருக்கும் இந்த தாய்மாமனை என்னவென்று சொல்வது!!
அவரோடு பயணிப்பது அதிரசமல்ல, அதிரசம் என்கின்ற பெயரில் 


வரையறுக்க முடியாத பேரன்புதான்! அவருடைய பயணத்தை மென்மையாக்க பலவருடங்களுக்கு


 பிறகு பாட்டிதாத்தா வாழ்ந்த ஊருக்கு செல்ல இருக்கிறேன்! 

உறவுகள் புனிதமானவை பணம், நகை, நிலம், சொத்து, கோபம், பிடிவாதம், வெறுப்பு போன்றவற்றால் 


சேதப்படுத்திவிடாதீர்கள்!
உடைந்த உறவுகளை ஒட்டவைக்க பாலங்கள் தேவையில்லை,
ஒளித்து வைத்த பாசமும்
ஒருதுளி கண்ணீரும் போதும்!
முயன்றுபாருங்கள் !!

ஹிந்து

வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு
பெருமை ஹிந்து மதக் கடவுளுக்கு
உண்டு...ஏன்னா கடவுளை எல்லா
விதமாகவும் வழிபடும் தன்மை ஹிந்து மதத்தில்
மட்டும் தான்
1. தாயாக = அம்மன்
2. தந்தையாக = சிவன்
3. நண்பனாக = பிள்ளையார், கிருஷ்ணன்
4. குருவாக = தட்சிணாமூர்த்தி
5. படிப்பாக = சரஸ்வதி
6. செல்வமகளாக = லக்ஷ்மி
7. செல்வமகனாக = குபேரன்
8. மழையாக = வருணன்
9. நெருப்பாக = அக்னி
10. அறிவாக = குமரன்
11. ஒரு வழிகாட்டியாக = பார்த்தசாரதி
12. உயிர் மூச்சாக = வாயு
13. காதலாக = மன்மதன்
14. மருத்துவனாக = தன்வந்திரி
15. வீரத்திற்கு = மலைமகள்
16. ஆய கலைக்கு = மயன்
17. கோபத்திற்கு = திரிபுரம் எரித்த சிவன்
18. ஊர்க்காவலுக்கு = ஐயனார்
19. வீட்டு காவலுக்கு = பைரவர்
20. வீட்டு பாலுக்கு = காமதேனு
21. கற்புக்கு = சீதை
22. நன் நடத்தைகளுக்கு = ராமன்
23. பக்திக்கு = அனுமன்
24. குறைகளை கொட்ட =
வெங்கடாசலபதி
25. நன் சகோதரனுக்கு = லக்ஷ்மணன்,
கும்பகர்ணன்
26. வீட்டிற்கு = வாஸ்த்து புருஷன்
27. மொழிக்கு = முருகன்
28. கூப்பிட்ட குரலுக்கு = ஆதி மூலமான
சக்கரத்தாழ்வார், மாயக் கிருஷ்ணன்
29. தர்மத்திற்கு = கர்ணன்
30. போர்ப்படைகளுக்கு = வீரபாகு
31. பரதத்திற்கு = நடராசன்
32. தாய்மைக்கு = அம்பிகை
33. அன்னத்திற்கு = அன்ன பூரணி
34. மரணத்திற்கு = யமன்
35. பாவ கணக்கிற்கு = சித்திர குப்தன்
36. பிறப்பிற்கு = பிரம்மன்
37. சுகப் பிரசவத்திற்கு = கர்ப்ப ரட்சாம்பிகை
இது சின்ன சாம்பிள் தான்.
இன்னும் நிறையாக உள்ளது பெருமைப்
பட்டுக் கொள்வோம் தவறில்லை

ஓர் பெரியவர்

அன்று ஒரு குடும்பத்துக்கு
ஓர் பெரியவர் இருந்து நல்லது கெட்டது சொல்லி வழி நடத்தினர் குடும்பமும் ஒற்றமையுடன் இருந்ததது
இன்றோ எல்லோருக்குமே
பெரியமனிதர் என்ற நினைப்பில் வாழும் காலமாக அமைந்து விட்டதால் யாருடைய
அறிவுரையும் ஏற்றுகொள்ளாமல்
குடும்ப ஒற்றுமை சிதைகிறது

ஆன்மிக தகவல்கள்;-

ஆன்மிக தகவல்கள்;-
‪#‎கோயில்‬ கொடிமரத்தைத் தாண்டித் தான் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டுமா? ஆமாம்.
‪#‎கோயிலில்‬ ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனியாக நமஸ்காரம் செய்யக் கூடாது.
‪#‎கொடிமரத்திற்கு‬ வெளியில் செய்தால் எல்லா சுவாமிக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்த புண்ணியம் கிட்டும்.

‪#‎இரட்டைத்திரி‬ போட்டுத் தான் விளக்கேற்ற வேண்டுமா? அப்படி ஒன்றும் விதி கிடையாது. விளக்கின் அளவிற்கு ஏற்றாற்போல் ஒரே திரியாகப் போட்டு ஏற்றினால் போதுமானது.

‪#‎குளித்து‬ விட்டு ஈரத்துணியுடன் வழிபாடு செய்யலாமா? ஈரத்துணியுடன் எந்த நல்ல செயல்களும் செய்யக்கூடாது.
‪#‎துவைத்துக்‬ காய்ந்த தூய்மையான ஆடைகளை அணிந்தே வழிபாடு செய்ய வேண்டும்.

‪#‎நாம‬ சங்கீர்த்தனம் சிறப்பானது என்று சொல்வது ஏன்? பகவான் நாமத்தைச் சொல்லிக் கொண்டே இருப்பதையே நாம சங்கீர்த்தனம் என்பர்.

‪#‎கலியுகத்தில்‬ நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடின்றி எல்லோருக்கும் கஷ்டங்கள் ஏற்படத்தான் செய்கிறது.
இதிலிருந்து ஓரளவாவது நம்மைக் காப்பாற்றக் கூடியது இதுதான்.


‪#‎சந்திராஷ்டமம்‬ இருந்தால் சுபவிஷயம் செய்யலாமா? கூடாதா? சந்திராஷ்டம தினத்தில் மனக்கசப்பு, சண்டை முதலியன ஏற்பட வாய்ப்புண்டு என்பார்கள். எனவே, தான் சுபநிகழ்ச்சிகள் செய்யவேண்டாம் என்று கூறுகிறார்கள்.
‪#‎செய்து‬ தான் ஆக வேண்டும் என்ற சூழலில் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபட வேண்டும். அன்று கூடுமானவரை மவுனமாக இருப்பது நல்லது.

Tuesday 23 February 2016

மோட்சத்திரிகோணம்

மோட்சத்திரிகோணம்= இதன் நிலை எல்லாவற்றையும் விட மேலானது. என்று கொள்ளல் வேண்டும். பாக்கியவான்கள் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் வணங்குவதற்க்கும், உறிய மணிதர்களை அடையாளம் காட்டுவது மோட்சத்திரிகோண்மே. தன்னிடம் உள்ளதை தாரைவார்க்கச் செய்வதும் தனக்கென்றதனித்துவத்தை ஏற்படுத்திக்கொண்டு த்த்து வார்த்தங்களை சிறப்புறச்செய்வது மோட்சத்திரிகோண்மாகும்

காமத்திரிகோணம்

காமத்திரிகோணம்= வாழ்வில் முயற்ச்சிகளுக்கு வழிகாட்டுதலும் துணை நிற்க்க்க்கூடிய நல்ல மணிதர்களையும் முயற்ச்சிகளில் நாம் அடையும் வெற்றியையும், நமக்களீக்கும் காமத்திரிகோணம் நம்மை எந்த அளவுக்கு விட்டு கொடுத்து வாழும் மணமுடையவர்கள் என்பதையும் தன்னைப் போன்று எல்லோரையும் சம்மாக பாவிக்கும் மனோநிலையையும், நாம் சார்ந்துள்ளவர்களையும் நம்மை சார்ந்துள்ளவர்களையும் முற்ப்போக்கு அல்லது பிற்ப்போக்கான வாழ்வினை அளிப்பது கானத்திரிகோணம்.

அர்த்த்திரிகோணம்

அர்த்த்திரிகோணம்= வாழ்வில் கர்ம்மேன்மையை அளித்து அதனால் பெறும் அனைத்து சுகங்களையும் பெறச்செய்கிறது. அவ்வாறு கிடைக்க்கூடிய சுக போகங்கள் எந்த மார்க்கமாக கிடைக்கப்பெறுகிறது என்பதையும், அர்த்த திரிகோணம் நமக்கு வழங்குகிறது. இதில் பொருள்மேன்மை, ம்ற்றும் கர்ம்மேன்மையை விளக்குவதாக அமைகிறது.

தர்மதிரிகோனம்

தர்மதிரிகோனம்= அறநெறியையும், ஒழுக்கத்தையும், இறையாண்மையையும், பகுத்தறிவு அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஏற்றுக்கொள்ளல், தர்மத்தையும்,தயாள குணத்தையும் போதிப்பது மட்டுமல்லாமல்,இய்ற்க்கை இவர்களுக்கு நிலையான புகழையும் கௌரவத்தையும், அளித்து மேன்மை படுத்துகின்றது. மேலும் ஆன்மாவின் முந்தைய நிலைகளையும் வரும் ஜென்மத்தையும் வாழ்வியலோடு ஒத்து பயண்பெறுவதை தர்மத்திரிகோணம் விளக்குகிறது.

சனி, சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்

சனிஆதிக்கம் உடையவர்கள் தகப்பன் உடன் பிறந்தோறால் ஆதரிக்கப்படுவதும் வயதான காலங்களில் தன் உடன் பிறந்தவ்வர்களின் குழந்தைகளால் பராமரிக்கப்படுவதும் அனுபவத்தில் கானமுடிகிறது. சுக்கிரனின் ஆதிக்கம் உடையவர்கள் சிற்றன்னையால் ஆதரிக்கபடுவதும் ஆய்வில் அறிகமுடிகிறது.
சனி, சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் பாசத்தால் அதிகமாக பாதிக்க்ப்படுவது தெரிகிறது. இவர்கள் உறவைவிட்டு மனதை விலக்கி பழ்கத்தெரிதல் வேண்டும். பாசத்தில் முழ்கி பின்பு வேதனைபடுவதை குறைப்பதற்க்கு பொதுவாழ்வில் நாட்டம் செலுத்துவது நன்மை தரும். சனிபகவான் தன்னலமற்ற தியாக சொரூபம். அவரின் ஆதிக்கம் அர்ப்பனிப்பே என்பதை அற்ந்து எல்ல உயிர்களீட்த்தும் அன்புசெய்தால் சனிபகவானின் அருளை பெறலாம்.

அடுத்த ஜென்மா கிடையாது

உலகில் பூசம், அனுசம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் உதித்தவர்களும், மகரம் கும்பம் ராசி லக்கனத்தில் பிறந்தவர்களும், சனி லக்கனத்தில் இருக்க பிறந்தவர்களும், லக்னத்தையோ, லக்னாதிபதியையோ சனி பார்க்க பிறந்தவர்கள், சனிதசையை கடந்தவர்களுக்கு அடுத்த ஜென்மா கிடையாது. இந்த ஜென்மத்தில் எல்லா வினைகளையும் அனுபவித்து இறைவனடி சாரும்.
அதேபோன்று சனிஆதிக்கம் உடையவர்கள் தகப்பன் உடன் பிறந்தோறால் ஆதரிக்கப்படுவதும் வயதான காலங்களில் தன் உடன் பிறந்தவ்வர்களின் குழந்தைகளால் பராமரிக்கப்படுவதும் அனுபவத்தில் கானமுடிகிறது. சுக்கிரனின் ஆதிக்கம் உடையவர்கள் சிற்றன்னையால் ஆதரிக்கபடுவதும் ஆய்வில் அறிகமுடிகிறது.
சனி, சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் பாசத்தால் அதிகமாக பாதிக்க்ப்படுவது தெரிகிறது. இவர்கள் உறவைவிட்டு மனதை விலக்கி பழ்கத்தெரிதல் வேண்டும். பாசத்தில் முழ்கி பின்பு வேதனைபடுவதை குறைப்பதற்க்கு பொதுவாழ்வில் நாட்டம் செலுத்துவது நன்மை தரும். சனிபகவான் தன்னலமற்ற தியாக சொரூபம். அவரின் ஆதிக்கம் அர்ப்பனிப்பே என்பதை அற்ந்து எல்ல உயிர்களீட்த்தும் அன்புசெய்தால் சனிபகவானின் அருளை பெறலாம்.

ஶ்ரீ அரங்கநாதசாமி கோவில், காரமடை

 
ஶ்ரீ அரங்கநாதசாமி கோவில், காரமடை
அரங்கநாதசாமி கோவில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடை என்னும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோவில் ஏறக்குறைய 1000 வருடங்கள் பழமை வாய்ந்தது. கொங்கு நாட்டு பகுதிகளில் இருக்கும் வைணவ தலங்களில் புகழ்பெற்றது. மூலவர் பெருமாள் சுயம்புவடிவில் சிவலிங்கம் வடிவில் காணப்படுகிறார் 
🌺தல வரலாறு 🌺
இப்பகுதியில் அதிகமாக காரைப் பசுக்கள் மற்றும் காரை மரங்கள் இருந்ததன் காரணமாக இவ்வூருக்கு இப்பெயர் வந்தது. ஒருகாலத்தில் இங்குள்ள தொட்டியர் பிரிவைச் சேர்ந்த மக்கள் ஆடு, மாடுகளை அதிக அளவில் வைத்து இருந்தனர். அந்த கூட்டத்தில் இருந்த ஒரு காரைப் பசு தனியாக சென்று வருவதைக் கால்நடைகளை மேய்க்கக் கொண்டு சென்ற ஒருவர் கண்டார். அவர் அம்மாட்டினைப் பின் தொடர்ந்து சென்றார். அது ஓரிடத்தில் காரைப்புதரில் பால் சொரிவதைப் பார்த்த அவர் கோபத்தில் புதரை வெட்ட ரத்தம் சொட்டியது. இதனைக் கண்ட அந்த தொட்டியர் தனது கண்பார்வையை இழந்தார். அவ்விடத்தில் கோவில் கட்டி வழிபடும்படி அசிரிரீ ஒலித்தது. அப்பசுவின் உரிமையாளருக்கும் கண்பார்வை திரும்பியது. சந்தனக் காப்பிட்டுப் பார்த்தபோது பெருமாள் சுயம்புவடிவில் காணப்பட்டார். அவ்விடத்தில் பெருமாளுக்குக் கோயில் எழுப்பப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இன்றும் பெருமாளின் மீது வெட்டுக்காயம் காணப்படுகிறது.

உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?
🍴🍹🍡
அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் & ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.
🍴🍹🍡
பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.
🍴🍹🍡
மிளகு சேர்ப்பதால், உணவில் உள்ள விஷம் நீங்குவதோடு உடலில் உள்ள விஷமும் முறிகிறது.
🍴🍹🍡
உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல்; குளிர்ச்சியையும் தருகிறது.
🍴🍹🍡
வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் அது உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.
🍴🍹🍡
கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.
🍴🍹🍡
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.
🍀🌹
உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.
🍀🌹
காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.
🍀🌹
உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது.
🍀🌹
இடதுகையை கீழே ஊன்றிக் கொண்டை சாப்பிடக்கூடாது.
🍀🌹
சாப்பிடும் சமயம் டி.வி பார்க்கக் கூடாது.
🍀🌹
வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.
🍀🌹
காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.
🍀🌹
சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.
🍀🌹
உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். தயவுசெய்து வலைத்தளம் முதலியன அப்போது வேண்டாமே!
🍀🌹
இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.
🍀🌹
சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது.
🍀🌹
நின்று கொண்டு சாப்பிக் கூடாது.
🍀🌹
அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.
🍀🌹
சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது.
🍀🌹
தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.
🍀🌹
இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்.
🍀🌹
ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.
🍀🌹
எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.
🍀🌹
வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.
🍀🌹
புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.
🍀🌹
வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.
🍀🌹
நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.
🍀🌹
இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.
🍀🌹
உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.
🍀🌹
அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.
🔥🔥🍍
உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்
💖💖💖🍎🍏🍑🍉🌺🌸

Monday 22 February 2016

கொளரி யோகம்

ஒரு ஜாதகத்தில் இருக்கவேண்டிய யோகத்தில் சிறப்பானதகொள்ரியோகம்
கொளரியோகமானது ஒரு ஜாதகத்தில் எப்படி அமையப்பெற்று ஜாதகரை சிற
ப்படைய செய்கிறது என்பதை பற்றி ந்ம் முன்னோர்களின் கூற்றுப்படி ஆராய்
ந்தறியும் போது லக்னத்திற்க்கு பத்துக்குடையவன் நவாம்சத்தில் நின்ற வீட்ட்திபதி ஜென்ம லக்னத்த்ற்க்கு பத்தில் உச்சம் பெற்றிருக்குமேயானால் கொளரி யோகமானது சித்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆம் இப்படி அமையப்பெற்ற ஜாதகர்கள் உலகில் உள்ள ஜன்ங்களை காக்கின்றவராகவும்
சகல சொளபாக்கியங்களையும் அடையப்பட்டவராகவும், நல்ல குழ்ந்தைகளை
பெற்றவராகவும்,உலகில் அவருக்கு ஜன சமுத்திரத்தில் நன் மதிப்பை பெற்றவராகவும் எல்லோராலும் போற்றப்படுகின்ற வாழ்த்துவதற்குறிய் தகுதி
யை அடைந்தவராகவும் சிறப்பிக்கப்படுகின்றார். என்று அறியப்படுகின்றது.


         இதனையே நமது பழந்தமிழ் நூல்களில் எடுத்துரைக்கும் போது கேந்
திரத்திலோ, திரிகோனத்திலோ தனக்குரிய ஆட்சி அல்லது உச்ச வீட்டில் இரு க்கும் சந்திரனை கூ பார்த்தால் கொளரியோகமென்று கூறுவதும் உண்டு.
இவ்வாறு அமையும் போது எந்த ஒரு ஜாதகத்திலும் ஒரு ஜாதகர் யோகத்தை
அனுபவிக்க வேண்டுமானால் குருவும்,சூரியன்,சந்திரன் ந்ன்னிலையில் இருக்
க வேண்டும். பொதுவாக இராஜ கேந்திரங்கள் என்று சொல்லப்படுகின்ற
மேஷம்,கடகம்,துலாம்,மகரம், அதிமுக்கியம்மாக் ஜோதிட சாஸ்த்திரத்தில்
இடம் பெறுகின்றன். இந்நான்கு கேந்திரத்திலும் உச்சமடைகின்ற கிரகங்களா
ன் சூரியன், குரு,சனி,செவ்வாய் ஆகிய் நால்வரும் ஜோதிட சாஸ்திரத்தில்
அதி உண்னத் இட்த்தை த்க்கவைத்துக் கொள்கின்றனர்.இவற்றுள் ஒருவரேனு
ம் சாதக்ச்ச்க்கரத்தில் நீச்சமோ,அஸ்த்ங்கமோ, அல்லது 6,8,12 லோ இருப்பார்
களேயானால் என்னதான் ஜாதகத்தை யோகம் என்று சொன்னாலும் ஜாதகர்
யோகத்தை அனுபவிக்க முடியாது.மேலும் பஞ்சமகா புருஷ யோகமென்று
சொல்லப்படுகின்ற ருஷக் யோகம்,பத்ர யோகம், ஹம்ஸயோகம், மாளவியா
யோகம், ஸ்ஸ யோகம், போன்றயோகங்களும், இந்த சூரிய சந்திரனுக்கு
மற்ற கிரகங்களால் கொடுக்கப்படக்கூடிய யோகமாகும். இவையல்லாது இந்த்
யோகங்கள் அணைத்தும்  காலபுருஷத்த்துவத்தின் ப்டி அமைவதால் தான்
சித்தியளிக்கிறது. இப்படி ஆராயும் போது, ல்க்னம் தன்நிலை இழ்க்காது இருக்
க் வேண்டும். சூரியனும்,சந்திரனும், நன்றாக் இருக்க வேண்டும். 5,9, க்கு
உடையவர்கள் ந்ன்றாக இருக்கவேண்டும். அதை விட் குரு எந்த வித்த்திலும்
6,8,12 லோ, நீச்சமோ அடையாமல் இருக்குமானால் ஜாதகர் யோகத்தை
அனுபவிக்க முடியும்.


        இவ்வாறு யோகத்தை ஒரு ஜாதகர் அடைவது பல வழிகள் உள்ளன.
அறிவு, செல்வம், தியாகம், கடமை இந்த நான்கு நிலைகளிலிருந்து நானூறு
ஆயிரம் விதிமுறைகளை ஜோதிட சாஸ்த்திரத்தில் குறித்திருக்கிறார்கள்.
அவற்றை எல்லாம் மனிதன் மனதில் கொள்ள முடியாது. என்றாலும் இந்த்
நான்கு வழிகளில்தான் மனிதன் நிலைகளை தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.


       ஒருமனிதன் தன்னை பிரபலப்படுத்துவதும், தாழ்மை படுத்துவதும்
இந்த நான்கு நிலைகளுக்குட்பட்டுத்தான் என்பது நமக்கு புலனாகிறது. இதில்
கொளரியோகத்தை ந்ம்முன்னோர்களின் கூற்றுப்படி லக்னத்திற்க்கு பத்துக்குடையவர்  நவாம்சத்தில் நின்றவீட்ட்திபதி ,ஜன்ன ஜாதகத்தில் ப்த்தில்
உச்சம் பெற்றிருந்தால் கொளரி யோகம் என்று கூறியிருந்தாலும் இதனை
ஆய்வு செய்து பார்க்கும்போது சூரியனுக்கு திரிகோணாதிபதி ஜென்ம லக்னத்திற்க்கு பத்தில் நிற்க, அந்த வீடானது சூரியனுடைய் உச்சவீடாக் இருந்தால் நன்கு பிரகாசமான் வாழ்க்கையும், மக்களை ஈர்க்கும் சக்தியை பெற்று புகழடைகிறார்கள். குருவின் உச்சவீடானால் செல்வ செழிப்பு பெற்று
வாழ்ந்தாலும் சாஸ்த்திர சம்பிரதாயங்களில், நிதி, மற்றும் நீதித்துறைகளிலும்
முதலிடம் பெற்று முதன்மையான் இட்த்தை பெற்று திகழ்கிறார்கள். சனியின்
உச்சவீடானால் தனக்காக இல்லாமல் மற்றவர்களூக்காக் வாழ்ந்து தன்னை அர்பனித்து தியாகி என்ற மறியாதையுடனும், செவ்வாயின் உச்சவீடானால்
தான் கொண்ட உத்தியோகத்துறையில் முதன்மையான் இட்த்தையோ, அல்லது தலைமையை அலங்கரிக்க்கூடியவர்களாக் இருக்கிறார்கள் இவ்வாறு
கொளரி யோகம் சித்திக்கின்றது.